Quotes from ஜே ஜே சில குறிப்புகள்

இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு இன்றைய கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. 'அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள்' பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் 'தமிழில் புதக்கவிதை உண்டா?' என்று கேட்கிறான். காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை? ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழிகள் அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுபடைகிறேன்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
இவர்கள் சொந்தம் பாராட்டிகொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
உண்மை பயங்கரமானது. அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது. உறவுகளை ஈவிரக்கமின்றித் துண்டித்துவிடுகிறது.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
மனித மனம் போலிகளின் திறமையான குரலை இனங்கண்டு ஒதுக்கத் தெரிந்ததாகவே இருக்கிறது.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
மௌனம் உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகின்றன. சப்பி உருக்குலைத்து விடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் போய்விட்டன.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
தனக்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒருவன் எதிர் நிலையிலிருந்து பேச முற்படும்போது அவன் பேச்சை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
விளையாட்டுகளில் தோல்வி என்பது தோல்வியுமல்ல. வெற்றி என்பது வெற்றியுமல்ல. விளையாட்டே ஒரு வெற்றி. தீவிரமாக, ஆத்மார்த்தமாகத் தன்னை மறந்து விளையாட வேண்டும்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படும் போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
உள்ளொளி தோய்ந்த வாக்குகள் என் நரம்பில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகின்றன.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'