Quotes from ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறவர்கள்தான் ரொம்பக் குறைவு. அந்தக குறைவானவர்களில் நீங்கள் ஒருவர்…
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு ‘கலோக்கிய’லா ஆயிடுச்சு. இது தென்னாப்பரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலேருந்து வந்ததனால் மணிலாக்கொட்டைன்னு பேரு
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
பாக்காத ஒறவும், கேக்காத கடனும் பாழாப் பூடும்னு சொல்லுவாங்க.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'