Quotes from ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்…!
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
போகுது
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
மிருகங்களுக்கும் மற்றவங்களுக்கும் சமூக வளர்ச்சி, வாழ்க்கைப் பிரச்னைகள், தார்மீகப் பொறுப்புகள் ஒன்றும் கிடையாது. மனிதன் அப்படி ஆகக்கூடுமா என்ன? அப்படி ஆனால் அது சரியும் ஆகாதே. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையில் வளர்ச்சி ஏது
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
குழந்தைகள் மட்டும்தானா? இந்தப் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப் பூச்சிகள், தேனீக்கள், மலர்கள், செடி கொடி எல்லாமே சந்தோஷமாக மட்டும்தான் இருக்கின்றன
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'