Quotes from பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
ஓ! நட்சத்திரங்களே! உங்களை இன்றைக்குப் பார்த்தால் பூவுலக மக்களின் அறிவீனத்தைப் பார்த்துக் கேலி செய்து கண்சிமிட்டிச் சிரிப்பவர்களைப் போலத் தோன்றுகிறது. சிரிப்பதற்கு உங்களுக்கு வேண்டிய காரணம் உண்டு. நூறு வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் நடந்த பெரும் போரையும், போர் நடந்த பிறகு இங்கே வெகு நாள் வரை இரத்த வெள்ளம் பெருகிக் கிடந்ததையும் பார்த்திருக்கிறீர்கள். மனிதர்கள் எதற்காக இப்படி ஒருவரையொருவர் பகைக்க வேண்டும் என்று அதிசயிக்கிறீர்கள். எதற்காக இப்படி மனித இரத்தத்தைச் சிந்தி வெள்ளமாக ஓடச் செய்ய வேண்டும் என்றும் வியக்கிறீர்கள் இதற்குப் பெயர் வீரமாம்.
கல்கி (Kalki Krishnamurthy) — 'பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்'
இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில்
கல்கி (Kalki Krishnamurthy) — 'பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்'
Prince Rajadithan[8]
கல்கி (Kalki Krishnamurthy) — 'பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்'
Sumeetha Manikandan is a top bestselling romance author whose novellas ‘Perfect Groom’ and ‘These Lines of Mehendi’ have been on the top of Amazon India charts
கல்கி (Kalki Krishnamurthy) — 'பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்'
சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, ‘கொக்கரக்கோ!’ என்று கத்திக்கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக்கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. ‘கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?’ என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
கல்கி (Kalki Krishnamurthy) — 'பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்'