Quotes from தாகங்கொண்ட மீனொன்று
நேற்றிரவு அக்கூட்டத்தில் உன்னைக் கண்டேன். ஆரத்தழுவ இயலவில்லை வெளிப்படையாக என்னால். ஆனாலும், உனது கன்னத்தின் அருகே உதடுகளைப் பொருத்தினேன். எதையோ ரகசியமாய்ச் சொல்பவனைப் போல.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
திரும்பத்திரும்ப கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் தெளிவுறப் போவதில்லை அப்புதிரின் சூட்சுமம், வியப்பூட்டும் பிரதேசங்களுக்கு பயணிப்பதாலும்கூட. உனது குழப்பம் விலகப் போவதில்லை எப்போதும், ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கேனும் உனது கண்களையும் தேடலையும் சலனமற்றுக் காத்திருக்கச் செய்தாலன்றி.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம் நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு - எதிர்பாராத விருந்தாளியாக அவ்வப்போது வந்துசெல்லும். எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு! துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து உனது வீட்டைத் துப்புரவாக வெறுமைப்படுத்தும் போதும், ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து. புதியதோர் உவகைக்காக அவை உன்னை தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும். வக்கிரம் அவமானம் வஞ்சனை இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள் தொலைதூரத்திற்கு அப்பாலிருந்து.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
தோல் குருதி எலும்பு மூளை ஆன்மா என எனக்குள் வியாபித்துள்ளாய் நீ. நம்புவதற்கோ மறுப்பதற்கோ இடமேதும் இல்லை. அந்த இருத்தல் அன்றி, இந்த இருப்பு வெறுமையே.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
நீயொரு உண்மையான மனிதனெனில் எல்லாவற்றையும் பணயம் வை காதலுக்காக. இயலவில்லை எனில் சென்றுவிடு இங்கிருந்து. அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது. பேரருளை நோக்கி பயணிக்கத் தீர்மானித்த நீ, சிறுமைபடர்ந்த விடுதிகளில் நெடுங்காலம் இளைப்பாறிவிடுவது ஏன்?
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
உனது ஆன்மாவிலிருந்து எனது ஆன்மா எதையோ செவிமடுத்த அந்தப் புலரி என் நினைவில் படர்கிறது. உனது ஊற்றிலிருந்து பருகினேன், ஒரு பேரலை ஆட்கொண்டது என்னை.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
முதல் காதல் கதையை நான் கேட்டவுடன் உன்னைத் தேடத் துவங்கினேன், எவ்வளவு கண்மூடித்தனமானது அது என்பது தெரியாமலேயே. காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக்கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'
கவிதைகளின் உள்ளிருக்கும் துடிப்புகளைக் கேள் அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும் உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு அதன் அருகாமையை நழுவவிடாதே ஒரு போதும்.
ஜலால் அத்தீன் முகம்மது ரூமி (Jalal ad-Din Muhammad ar-Rumi) — 'தாகங்கொண்ட மீனொன்று'