Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நினைவுப் பாதை
Ninaivu Paathai
- பக்கங்கள்
- 232
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 2
- ISBN-13
- 9788189945138
தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்கிறது ‘நினைவுப் பாதை’ நாவல். “கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாக…
Quotes
எங்கு போனாலும் இங்கு தான் வருகின்றேன். ‘நவீனன்’ என்கின்றேன்; ‘நகுலன்’ என்கின்றேன். ஆனால், நான் யார் யாரைச் சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன் - ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை, சாரதி, கேசவமாதவன், சுசீலா இன்னும் இப்படியாக இப்படியாக. அதனால்தான் இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி.
மரம் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது பத்தாம் பசலிக் கொள்கையாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் அடிப்படையும் நம்பிக்கைதானே?
ஆனால் அவள் பெயர் சுசீலா இல்லை! பெயருக்கும் அது சுட்டப்படுவதற்கும் என்றுமே ஒரு பொருத்தம் இருப்பதில்லை. நமது சௌகரியத்திற்கு, இனம் பிரித்து அறிந்து கொள்வதற்கு, பெயர்களைச் சங்கேதமாக உபயோகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்.
Shelves
More like this
நிழல்கள்
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ள…
நாய்கள்
ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அத…