Quotes from நினைவுப் பாதை

எங்கு போனாலும் இங்கு தான் வருகின்றேன். ‘நவீனன்’ என்கின்றேன்; ‘நகுலன்’ என்கின்றேன். ஆனால், நான் யார் யாரைச் சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன் - ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை, சாரதி, கேசவமாதவன், சுசீலா இன்னும் இப்படியாக இப்படியாக. அதனால்தான் இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி.
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'
மரம் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது பத்தாம் பசலிக் கொள்கையாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் அடிப்படையும் நம்பிக்கைதானே?
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'
ஆனால் அவள் பெயர் சுசீலா இல்லை! பெயருக்கும் அது சுட்டப்படுவதற்கும் என்றுமே ஒரு பொருத்தம் இருப்பதில்லை. நமது சௌகரியத்திற்கு, இனம் பிரித்து அறிந்து கொள்வதற்கு, பெயர்களைச் சங்கேதமாக உபயோகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்.
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'
சாதாரணம், சாதாரணம் என்று எதையுமே ஒதுக்கி விடப் பார்க்கின்றோம். ஆனால், சாதாரணம் என்று இப்படி நாம் ஒதுக்கி வைப்பதெல்லாம் கடைசியில் அசாதாரணத்தில்தான் கொண்டு விடுகிறது.
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'
எந்தக் கலைஞனும் தன் வெற்றிகரமான சிருஷ்டியை வெறுக்கிறான்.” “ஏன்?” “தான் அதற்கு ஜவாப்தாரி இல்லை என்பதை அறிந்தும் அது அவனைவிடப் போற்றப்படும்பொழுது அவனுக்குப் பல பிரச்சினைகள்.
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'
எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டுக்கொண்டிருக்கும் மனிதன், எறும்பு கடித்தால் ஏன் முகஞ்சுளிக்க வேண்டும்?
நகுலன் (Nakulan) — 'நினைவுப் பாதை'