இராஜராஜேச்சரம்
Share:

இராஜராஜேச்சரம்

Rajarajecharam

Check Price on Amazon
4.48/5 · 21 ratings

இராஜராஜேச்சரம்

Rajarajecharam

4.48/5 · 21 ratings
பக்கங்கள்
548
வடிவம்
Hardcover
பதிப்பகம்
அன்னம்
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
Latest edition March 2020
ASIN
B0DM2HCJC6

இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்.

இந்நூல் ஒன்பது பகுதிகளையும், பின்னிணைப்பும் கொண்டு அமைந்துள்ளது.

தஞ்சை இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலைப் பற்றிய இந்நூலில் தஞ்சாவூர், இராஜராஜ சோழன், கோயிலின் தத்துவங்கள், சிற்பங்கள், இசை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றி வரலாற்று நோக்கில் இ…

Interested in this book? Check Price on Amazon
Quotes

சுவார்ட்ஸ் என்ற பாதிரியாரால் வளர்க்கப் பெற்று தஞ்சை அரசராக முடிசூடிய இரண்டாம் சரபோஜி 1798இல் பதவி ஏற்றபோதும், ஓராண்டுக் காலத்திற்குள்ளேயே ஆங்கில அரசு அவர்தம் பதவியைக் கைப்பற்றி ரெசிடெண்ட் என்ற அதிகாரிகள் வசம் ஒப்புவித்தது. இருப்பினும் சரபோஜி மன்னர் தஞ்சைப் பெரியகோயிலுக்கு பல திருப்பணிகளைச் செய்ததோடு புதிய கணபதியார் ஆலயத்தையும் கட்டுவித்தார். பல அறக்கட்டளைகளைத் தோற்றுவித்தார். காலச்சூழல் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வைத்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட சுவார்ட்ஸ் பாதிரியார் பெரிய கோயிலின் தீர்த்தக்குளமான சிவகங்கை குளக்கரையில் சிப்பாய்கள் வழிபாடு செய்ய புதிய கிறித்துவ தேவாலயத்தைக் கட்டுவித்தார். தஞ்சைக் கோயிலில் சரபோஜி மன்னர் வெட்டுவித்த போன்ஸ்லே வம்ச வரலாறு என்ற பெரிய கல்வெட்டுத் தொடரில் சுவார்ட்ஸ் பாதிரியாரின் புகழும் இடம்பெறுமாறு செய்தார்.

கி.பி.1773 முதல் 1776 வரை ஆர்க்காட்டு நவாப்பின் படையினரும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியப் படையினரும் தங்கள் பாடி வீடாக பெருவுடையார் கோயிலைப் பயன்படுத்தினர். பெருவுடையார் லிங்கம் உள்ள கருவறையோடு மகாமண்டபமும், முருகன் ஆலயமும், திருச்சுற்று மாளிகையும்  படையினர் தங்குமிடமாக இருந்தன. முகலாய, கிறித்துவ வீரர்கள் அங்கு தங்கியமையால் திருமேனிகளின் கைகளும் கால்களும் உடைக்கப்பெற்றன. அவர்கள் தங்கி இருந்ததற்குச் சான்றாக முருகன் ஆலயத்தின் அர்த்தமண்டபத்தில் "Shelter For 36 Persons" என்ற எழுத்துக் குறிப்பும், கருவறை அர்த்த மண்டப வாயிலில் ARP பாதுகாப்பிடம் என்ற குறிப்பும், திருச்சுற்று மாளிகையில் வடபகுதியில் ARP WARD III என்ற பெயர்க் குறிப்பும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.

More Quotes...
Shelves
வரலாறு History

More like this


வந்தார்கள் வென்றார்கள்

இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…

4.26/5 · 3K+ ratings

உடையார், பாகம் 1

பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …

4.19/5 · 2K+ ratings

கி.மு கி.பி

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…

4.06/5 · 2K+ ratings

மோகினித் தீவு

அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…

4.13/5 · 1K+ ratings

மனிதனுக்குள் ஒரு மிருகம்

இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…

3.99/5 · 1K+ ratings

கங்கை கொண்ட சோழன் 1

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.11/5 · 700+ ratings

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

4.06/5 · 700+ ratings

அறியப்படாத தமிழகம்

தமிழக பண்பாட்டின் அன்றாட வாழ்வியலில் பொதிந்திருக்கும் வரலாற்றுத் தடங்களை வெளிக்கொணரும் கட்டுரைத் தொகுப்பு இது. உப்பு, எண்ணெய், தேங்காய், உடை, உணவு, உறவுமுறைகள், வழிபாட்டு…

4.41/5 · 600+ ratings

டாலர் தேசம்

அமெரிக்காவின் அரசியல் வரலாற்றையும் அதன் அசுர வளர்ச்சியையும் ஆழமாக விவரிக்கும் ஒரு முழுமையான ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. ஒரு சாதாரண குடியேற்ற நாடாகத் தொடங்கி, இன்று…

4.35/5 · 500+ ratings

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

இலங்கையின் வடக்கில், வல்வெட்டித்துறையில் பிறந்த ஒரு சிறுவன் எப்படி முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் தலைவனாக உருமாறினான்? சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு எதி…

3.98/5 · 400+ ratings

சே குவேரா

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…

4.37/5 · 400+ ratings

நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…

4.34/5 · 400+ ratings