Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஜெயமோகன் குறுநாவல்கள்
Jeyamohan Kurunaavalgal
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kizhakku
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DLTB18J7
ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதி…
Quotes
பார்த்தன் என்ன சொன்னான்?’ நான் திடுக்கிட்டேன். எப்படி அறிந்தார்? அவர் முகம் பதுமை போல் இருந்தது. பிறகு அமைதி ஏற்பட்டது. ‘நேரமாகிறது என்கிறார்’ என்றேன். ‘பாவம்’ என்றார். ‘ஏன்? அவர்தான் போரில் வென்று சவ்யசாஜி ஆகிவிட்டாரே. இனி அஸ்வமேதம், திக்விஜயம். வரலாற்றில் உங்களுக்கும் அவருக்கும் சிம்மாசனமல்லவா போட்டு வைக்கப்பட்டுள்ளது!’ ‘உன் துயரம் கசப்பாக மாறிவிட்டிருக்கிறது சுபத்திரை. உலகமே உனக்கு எதிரியாகப் படுகின்றது. நீ என்னதான் எண்ணுகிறாய்? இன்று இங்கு ஒவ்வொருவரும் என்ன எண்ணுகிறார்கள் என்று நீ அறிவாயா? இந்தக் கணம் காலதேவன் வந்து போர்தொடங்குவதற்கு முன்பிருந்த தருணத்தைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னான் என்றால் அத்தனைபேரும் தங்கள் எதிரிகளை ஆரத்தழுவி கண்ணீர் உகுப்பார்கள். இந்தப் போர் ஒரு மாயச் சுழி. ஒவ்வொருகணமும் இதன் மாயசக்தி எல்லாரையும் கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தது. விதி அத்தனைபேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும் நிரப்பியுள்ளது. இன்று.. வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை. எனக்கும் தெரியவில்லை…
இல்லை. கதகளியில் அனுமான் பல சமயம் கரிவேஷம்தான். கோமாளியாகவும் பக்தனாகவும் அனுமான் வருவது வழக்கம். ஆனால் நான் உக்கிரரூபியான அனுமானைத்தான் வணங்குகிறேன். அனுமானை எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி ஆக்கிவிட்டார்கள். ராமனுடைய காரியஸ்தன் ஆக்கிவிட்டார்கள். வால்மீகியும், எழுத்தச்சனும், கம்பனும், ஆட்டக் கதையாசிரியர்களும், அரங்க கர்த்தாக்களும் எல்லாருமாகச் சேர்ந்துதான் அப்படிப் பண்ணிவிட்டார்கள். அனுமான் யார்? குரங்கு! காட்டில் மரங்களில், தாவித்தாவிக் காற்றும் வானமுமாக இருக்கிற மகா சக்திமான்! அவனுக்குத் தாசவேலை தெரியாது. சுதந்திரத்தை நீ கோமாளித்தனம் என்கிறாய். அனுமான் சாந்தமூர்த்தி தான். ஆனால் அவனுக்குள் உக்கிரமூர்த்தியும் உண்டு. திரிபுரம் எரித்த சிவனையே எரித்துச் சாம்பாலாக்கக்கூடிய சம்ஹார அக்னி அவன் வாலில் உண்டு. அதை அவன் ஒருமுறைதான் காட்டினான். இலங்கையை எரித்துச் சுடுகாடாக்கினான். அப்போது மட்டும் அவன் உக்கிரரூபி ஆனான். பைசாசிக மூர்த்தி ஆனான். அந்த அனுமான்தான் என் இஷ்ட தெய்வம். அவனுக்குக் கரிவேஷமும், இறகுக் கிரீடமும் வாலும் இல்லை. வானம் முட்டும் செந்தழல் கிரீடமும், பூமாதேவி போல் ஒளிரும் பட்டுடையும், மின்னல் போல ஜ்வலிக்கும் கவசமும் உண்டு. சூரிய சந்திரர்கள்போலக் குண்டலங்களும் நட்சத்திர வைரங்களும் உண்டு. அவன் வால் நுனியில் தகதகவென்று தாமரை போல இதழ் விரித்து எரிகிறது பிரளயாக்கினி. அனுமான் அக்கினி நிறமானவன். கை வீசி, தாவித்தாவி எழுகிறதே அக்கினிச் சுவாலை, அதுதான் அனுமான் திருவுருவம். ஆஹா!’
அவர் கரங்கள் நெளிந்து சுடர்போல முத்திரை காட்டின. அவர் உடம்பு தீக்கொழுந்துபோல மெல்ல அசைந்தது. ஒரு கணம் அவ்வறையே நெருப்பாக எரிந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது.
Shelves
More like this
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
காடு
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். இயற்கை அன்னையின் மடியில் தவழும் குறிஞ்சி நிலக் காடுகளின் அ…
ஏழாம் உலகம்
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…
விஷ்ணுபுரம்
ஒரு கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டு, ஒரு பெரும் விஷ்ணு சிலையை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக விரியும் ஒரு காவிய நாவல் இது. மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் நினைவாக எழு…
இரவு
பகல் முழுவதும் உறங்கி, இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தினுள் நுழையும் ஒருவனின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல் இது. பெரிய மிருகங்கள் அனைத்து…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
அஸ்தினபுரி அரண்மனையின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதையோடு தொடங்கும் இந்நாவல், மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தை நவீனத் தமிழ் உரைநடையில் மீட்டுருவாக்கம் ச…
ரப்பர்
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…
உலோகம்
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு சாகச நாவல் இது. ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டமும், அதனுள் புதைந்திருக்கும் நம்பிக்கை, துரோகம், இரகசியம் ஆகியவையும்…
ஊமைச்செந்நாய்
யதார்த்தம், செய்திவடிவம், மிகையதார்த்தம் என்று பல்வேறு உத்திகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. முடமான யானையாகப் பிறந்த காரிக்கொம்பன் வெள்ளைத் துரையின் அடிமையாகும்…
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்
தென்தமிழகத்தின், குறிப்பாக நாஞ்சில் நாட்டின் நாட்டார் தெய்வங்களை மையமாகக் கொண்ட கதைக்கட்டுரைகளின் தொகுப்பு இது. குலதெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள், காவல் தேவதைகள், பேய்கள் என…