Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
விட்டுவிடு கருப்பா
Vittuvidu Karuppa
- பக்கங்கள்
- 384
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DLT7QQDS
தென் தமிழக கிராமமொன்றில் நிலவும் காவல் தெய்வ வழிபாட்டையும், அதைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களையும் மையமாக வைத்து நகரும் அமானுஷ்ய திரில்லர் இது. ஊரே கட்டுப்படும் காவல் தெய்வக் கோவிலும், அதன் உத்தரவுப்படி நடக்கும் குடும்ப முடிவுகளும், அதை மீறினால் ஏற்படும் விபரீதங்களும் கதையின் அடித்தளமாக அமைகின்றன. இந்த நம்பிக்கையை சந்தேகிக்கும் இருவர் மேற்கொள்ளும் விசாரணை வழியாக, மூடநம்பிக்கைக்கும் உண்மைக்கு…
Appears in following lists
Pramod
★ 5/5தொலைக்காட்சித் தொடராகப் பார்த்தவர்களுக்கு இந்த நூல் புதிதாக ஏதாவது தருமா? தரும் என்பதுதான் பதில்.
கதை ஒன்றுதான் என்றாலும், நாவலை வாசிக்கும் அனுபவம் தொடரைப் பார்த்த அனுபவத்திலிருந்து நன்றாகவே வேறுபடுகிறது. மிகச் சிறப்பாக எழுதப்பட்ட நூல்.
Aravind Balaji
★ 4/5கதாபாத்திரங்கள்தான் இந்த நாவலின் மிகப் பெரிய பலம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். குறிப்பாக ரீனா, கதை முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறார். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை பரபரப்பு எங்கும் தளராமல் நகர்கிறது.
Annamalai Arunachalam
★ 4/5தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துவிட்டு இந்தப் புத்தகத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயம் தெளிவாகிவிடும் — கதை வேறு. தொடரில் திரைக்கதைக்கு ஏற்ப ஏராளமான திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் அதற்காக நாவலைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஒரு புனைவு த்ரில்லராக இந்தப் புத்தகம் தன் இடத்தை நன்றாகவே நியாயப்படுத்துகிறது.
Karthik Vengatesh
★ 5/5ஒரே கதை இரண்டு வடிவங்களில் வெவ்வேறு முடிவை நோக்கிச் செல்ல முடியுமா? இந்த நாவலின் க்ளைமாக்ஸ் தொலைக்காட்சித் தொடரின் முடிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. படித்து பல ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத அற்புதமான நூல்.
Satheesh
★ 5/5படித்து முடித்த பிறகும் மர்மதேசம் – விடாது கருப்பு நினைவுகள் மனதை விட்டு அகல மறுக்கின்றன. திரையில் கிடைத்த அதே ஆர்வத்தையும் சுவாரஸ்யத்தையும் நாவலும் தக்கவைத்திருக்கிறது.
இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்தில் மீண்டும் மீண்டும் திரும்பிப் படிக்கத் தூண்டும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதற்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல சாட்சி.
Quotes
அதிலும் நள்ளிரவில்…! அண்ணாந்தால் வானத்தில் நிலா வட்டம்! மாசமோ ஐப்பசி, காலமோ அர்த்தஜாமத்தைத் தொடப்போகும் பன்னிரண்டை நெருங்கும் நிமிடப் போது…இந்த வேளையில் இந்த மணியின் சப்தமா? வீட்டுத் தாழ்வாரம், வாசற்புறத்து கிட்டித் திண்ணை, களத்துமேடு என்று கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் தோட்டக்கார மங்கலத்து பெருசுகள் எல்லாம் தூக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்து மணிச்சப்தம் கேட்டு விதிர்க்கத் தொடங்குகின்றனர்! பட்டி மாடுகள், அடைப்புக் கோழிகள்கூட விடைத்துப் போய் சற்றே சிலிர்க்க, மச்சக்காரன் தெருவில் பால் குடிக்க அழுத ஒரு தூளிக் குழந்தைகூட ஆத்தாளின் முலைக்காம்பை உதட்டால் ஒதுக்கிவிட்டு, அந்த சப்தம் கேட்டு, தன் குட்டி மணிவிழியில் மிரட்சியைத் தூக்கிக் காட்டுகிறது… "ஆரது இந்த ராத்ரியில மணி அடிச்சிகிட்டு…?" "என்னா தெகிரியம்--கருப்பு கோயில் மணிய இந்த ராத்ரில இந்த அடி அடிக்க…?
அழுவாத தம்பி… அழுவறதால போன உசுரு திரும்பிடவா போவுது? நாங்கள்ளாம் இருக்கோம்ல— எழுந்திரி--இனி ஆக வேண்டியத பார்ப்போம். கருப்பு வாள் பட்டா கணத்துல மோட்சம்பாங்க. எழுந்திரி… நல்ல காரியம பண்ணித்தானே செத்திருக்காரு வாத்தியார் வரதராஜன்!
Shelves
More like this
கிருஷ்ண தந்திரம்
''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பன…
ஐந்து வழி மூன்று வாசல்
பல நாட்களுக்குப் பிறகு இன்று சூரியனைப் மார்க்க முடிகிறது. பகல் வேளை ஐந்து மணி நேரமே பொந்து போதிலும் வெயில் சுடவில்லை. மேகங்களோ பண்டாயொழிவோ மூடுபனியோ பனிப்புயலோ இல்…
வானத்து மனிதர்கள்
வானத்து மனிதர்கள் எனும் கூட்டத்தினர் புத்தகம் முழுக்க ஒ ு புதிராகவே வலம் வந்து செல்கின்றனர். சற்று விநோதமாகவும் ...
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ? ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது, உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துக்கள். ஆனால் சிலர…
ஐந்து வழி மூன்று வாசல்
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…
கிருஷ்ண தந்திரம்
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…
ஒளிவதற்கு வழி இல்லை
சென்னையிலிருந்து வரும் இளம் பத்திரிகையாளர் ராஜேந்திரன், ஒரு ஆவி பற்றிய புதிரான தகவலை விசாரிக்க ஆயக்குடி கிராமத்திற்கு வருகிறான். சாதாரண விவசாயக் கிராமம் போல தோன்று…
வானத்து மனிதர்கள்
தாணுமாலயக்குடி என்ற மர்மமான மலைக்காட்டுக்கு புதிய வன அதிகாரியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு முன்பிருந்த காளிமுத்து எப்படியாவது மாறுதல் வாங்கி வெளியேற …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
நில்லுங்கள் ராஜாவே
இந்த நாவல் அடையாளச் சிக்கலை மையமாகக் கொண்டு பரபரப்பான ஒரு உளவியல் திரில்லராக விரிகிறது. "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வே…
சிதம்பர ரகசியம்
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…
பொய்மான் கரடு
ஒரு பயங்கரமான கொலை நடந்தும் யாரும் சாகாத, தீ விபத்து நேரிட்டும் யாரும் பலியாகாத சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் நாவல் இது. எதிர்பாராத திருப்பங்களும் கரடுமுரடான கதாபாத்…