Reviews for ஆகாயத் தாமரை

13 reviews total

user_12011

★ 5/5 Feb 02, 2026
இதைப் படிக்கும் போது தோன்றியது — இது எனக்காகவே எழுதியது போல் ஒரு மாயை. ஏனெனில் என் வாழ்வும் இக்கதையின் ரகுநாதனின் வாழ்வும் ஒரே கோட்டில் பயணித்துக்கொண்டு இருந்தன. என்றும் என் ஆசான் அசோகமித்திரன்.

user_12010

★ 4/5 Feb 02, 2026
எனக்கு இது அசோகமித்திரனின் முதல் புத்தகம். ஆகாயத் தாமரை எப்படி மலரப் போகிறது என்ற ஒரு வித எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தேன். மிகத் தெளிவான நீரோட்டம்போல் கதையின் நடை இருந்தது. மிகச் சில கதாபாத்திரங்கள் மட்டும் வைத்து ஒரு முழு நீளக்கதையைச் சிறிது கூடத் தொய்வின்றி நகர்த்திச் செல்கிறார். ரகுநாதன், ராஜப்பா, மாலதி, முன்சாமி என்று கதை நகர்கிறது. 1980ல் வந்த முதல் பாதிப்பு இன்னும் நடக்கும் நிகழ்வுகளைச் சரியாக எடுத்துச் சொல்கிறது.

user_12009

★ 3/5 Feb 02, 2026
ஆகாயத் தாமரை — ஒரு மத்யமர் இளைஞனைப் பற்றிய கதை. இதில் அசோகமித்திரன் சொல்கின்ற விஷயங்கள் (இக்கதை 1980ல் எழுதப்பட்டது) இன்னும் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒரு மத்யமர் இளைஞன் வேலையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எந்த வேலையும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை என்பதும், ஆடம்பரமான ஹோட்டல்களில் நடக்கும் கேலிக்கூட்டம் மற்றும் அவை பாமர மக்களைப் பார்க்கும் விதமும், நகரங்களில் கட்டிக்கொண்டு அல்லது நோண்டிக்கொண்டு இருக்கும் மேம்பாலங்களும் — இவை அனைத்தும் இன்னும் நடந்துகொண்டு இருக்கின்றன.