Reviews for வந்தியத்தேவன் வாள்

20 reviews total

user_11440

★ 3/5 Feb 02, 2026

வரலாற்று புதினங்கள் தரும் அழகிய வாழ்நாட்களை சற்று உணர வைக்கிறதே தவிர கதை பெரிதும் இல்லை. குந்தவைக்கு தெரிந்த உண்மையை பாதி பக்கங்கள் தாண்டும் முன்பே நமக்கு தெரிந்துவிட்டது.

அத்துடன் படிக்கும் போது சிறிது களிப்பும், எழுத்துகளும் கதையாடலும் நன்றாக இருந்ததும் விக்கிரமனின் விந்தை.

user_11439

★ 5/5 Feb 02, 2026

ஏற்கனவே பொன்னியின் செல்வனும் உடையாரும் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தைப் படித்த பிறகு அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது.

user_11438

★ 3/5 Feb 02, 2026

கதையில் பல இடங்களில் தொடர்ச்சியின்மை உள்ளது. வாசகர்கள் தாங்களாகவே ஊகித்துப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

user_11437

★ 1/5 Feb 02, 2026

மிகவும் சலிப்பூட்டும் நாவல். பொன்னியின் செல்வன் படித்த அனுபவத்தை கெடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் இதைப் படிக்காமல் இருப்பது நல்லது.

user_11436

★ 2/5 Feb 02, 2026

கதை போகும் விதம் பிடிக்கவில்லை. ஒரே கதை புத்தகத்தின் பல இடங்களில் பல கதாபாத்திரங்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

user_11435

★ 2/5 Feb 02, 2026

இந்த புத்தகம் ஒரு மெகா சீரியல் போன்றது. கதை இழுத்துச் சென்றது, ஆனால் அத்தகைய நீட்டிப்புக்கு எந்தத் தேவையும் இல்லை. நாவலில் பல கதாபாத்திரங்களும் துணைக் கதைகளும் உள்ளன, ஆனால் அவை ஒன்றோடொன்று சரியாக இணைக்கப்படவில்லை.

கதையின் சில சம்பவங்கள் ஒரு காலவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன, இது பிற வரலாற்று நாவல்களுடன் வேறுபடுகிறது. கதைக்கும் புத்தகத்தின் பெயருக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. மொத்தத்தில் கதையாக ஓரளவுக்கு சரி, ஆனால் வரலாற்று நாவல் என்று நினைத்து படிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

user_11434

★ 2/5 Feb 02, 2026

வல்லவரையர் வந்தியத்தேவன், இராஜராஜ சோழர், குந்தவை பிராட்டியார், மதுரன் (பின்னாளில் இராஜேந்திர சோழர்), பூங்கொடி, இன்பவல்லி, கோதை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள். கதை உறையூர், தஞ்சை ஆகிய இடங்களில் நடக்கிறது.

அருண்மொழி வர்மர் இராஜராஜராக சோழத்தை ஆண்டு வருகிறார். வல்லவராயர் வந்தியத்தேவர் குறுநில மன்னராக ஆட்சி புரிகிறார். இராஜராஜரின் மகன் மதுரன் வாலிப பருவத்தை அடைந்து நாட்டிய பெண் பூங்கொடி மீது காதல் கொள்கிறான். ஆனால் பூங்கொடி உண்மையில் இராஜராஜருக்கும் இன்பவல்லிக்கும் பிறந்தவள் என்ற உண்மையை குந்தவை வெளிப்படுத்தி தடுக்கிறாள்.

இந்த புதினத்திற்கு வந்தியத்தேவன் வாள் என்று பெயரிட்டது பொருத்தமற்றது. பொன்னியின் செல்வன் புகழைப் பயன்படுத்திக்கொள்ள ஆசிரியர் இப்பெயரை வைத்தாரோ என்று தோன்றுகிறது. வரலாறும் இல்லாமல், புனைவையும் அழகாக சொல்லாமல் அரைவேக்காட்டு புதினமாக உள்ளது.

user_11433

★ 4/5 Feb 02, 2026

மாவீரன் வல்லவரையன் வந்தியத்தேவனின் வீரவாளை இராசேந்திர சோழன் அவரது ஆசியுடன் பரிசாகப் பெறுவது இந்தப் புதினத்தின் முடிவு.

வந்தியத்தேவன் வாள் எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த வரலாற்றுப் புதினத்தின் கதை மதுராந்தக சோழன் எனும் இயற்பெயர் கொண்ட இராசேந்திர சோழனையே முதன்மையாகக் கொண்டதாகும். இயற்கை எழில், கதைமாந்தர்களின் அக உணர்ச்சிகள் போன்றவை மிகவும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது. கவித்துவம் நிறைந்த வரிகளும் வர்ணனைகளும் கதை முழுவதும் காணப்படுகிறது.

நந்திப்புரத்து நாயகி எனும் வரலாற்றுப் புதினத்தின் தொடர்ச்சியாக இந்நூல் அமையப்பெற்றுள்ளதால் அந்நூலின் கதைமாந்தர்கள் சிலர் இதில் முக்கிய பங்கு கொண்டுள்ளனர்.

user_11432

★ 2/5 Feb 02, 2026

நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார். பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார். மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில் குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார். அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள். அழகும் அறிவும் மட்டுமல்லாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்.

வந்தியத்தேவன் வாள் என்றவுடன் அந்த வாளின் பெருமையை சுற்றியே கதை நடக்கும் என்ற கணிப்பு தவிடுபொடியானது. மேலும் ஒரு கதையாக சொல்லாமல் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக விக்கிரமன் நகர்த்தி இருப்பது படிக்கும் போது ஒரு வித அலுப்பையே தருகிறது.

கல்கி, சாண்டில்யன் படைப்புகளில் காணப்படும் ஆர்வத்தையும் சுவையையும் மற்றவர்களின் படைப்புகளில் முழுமையாக காண முடிவதில்லை.

user_11431

★ 3/5 Feb 02, 2026

இராஜேந்திர சோழனின் இளமைப்பருவத்தை காலமாகக் கொண்டு, வந்தியத்தேவன், குந்தவை, இராஜராஜ சோழர் போன்ற முக்கிய கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் கதைமாந்தர்களாக்கி காதலையும் அரசியலையும் கதைக்களமாக கொண்டு புதினமாக்கப்பட்டதே இந்த வந்தியத்தேவன் வாள் நாவல்.

கதையின் சில பகுதிகள் ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும் ஆழமில்லாத கரு, தொடர்ச்சியின்மை, பொருத்தமில்லாத தலைப்பு போன்ற சில எதிர் உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் வாளின் வீரம் வரிகளில் இருக்குமென்று எண்ணியிருந்த எனக்கு வாள் உறைக்குள்ளேயே இருந்துவிட்டதில் சின்னதொரு ஏமாற்றமே.