Reviews for ரிஷி மூலம்

14 reviews total

user_10866

★ 4/5 Feb 02, 2026

ஜெயகாந்தன் மிகவும் தைரியமான கருப்பொருளை எடுத்துக்கொண்டு அருமையாகக் கையாண்டிருக்கிறார். வித்தியாசமான முயற்சி, படிக்கத் தூண்டும் எழுத்து.

user_10865

★ 3/5 Feb 02, 2026

இக்கதையில் ஏதோ ஒன்று இல்லை. இரண்டாம் கதை சற்று செயற்கையாக உள்ளது. அரை சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.

user_10864

★ 4/5 Feb 02, 2026

ஜெயகாந்தனின் தனித்துவமான படைப்பு. ரிஷிமூலம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன என்ற இரண்டு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. மனித மனத்தின் பல்வேறு பரிமாணங்களையும் சமூகத்தின் சிக்கல்களையும் மீண்டும் ஒருமுறை ஆராய்கிறார். விரிவான, சுவாரசியமான முன்னுரையும் இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.

user_10863

★ 5/5 Feb 02, 2026

இரண்டு குறுநாவல்களைக் கொண்ட இந்தப் புத்தகம் 1969-இல் முதற்பதிப்பு கண்டது. ஜெயகாந்தனின் பெரும் முன்னுரை இப்புத்தகத்தின் சிறப்பம்சம் — விமர்சனங்களுக்குத் திருப்பி அடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ரிஷிமூலம் — அக்காலத்திற்குப் பொருத்தமில்லாத, மனித ஒழுக்க வரம்புகளைக் கடந்த சம்பவங்களைக் கொண்டு மனித மனங்களின் நியாயகற்பிதங்களைச் சொல்லும் கதை. மாயவரம் கிருஷ்ணய்யர் குடும்பத்திற்கும் சாம்புவய்யர் குடும்பத்திற்கும் இடையே ராஜாராமனின் செயலால் ஏற்பட்ட மனவருத்தங்கள், ஒரே சம்பவத்தை ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் புரிந்துகொள்வது என்று கதை விரிகிறது.

ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன — சூதாடிக் கணவனின் விதவை அலங்காரவல்லியம்மாள், தன் பிள்ளைகளைப் பெரும் பொறுப்புகளுக்கு வளர்த்தும், தாய்ப்பாசம் என்ற சுயநலத்தின் பொருட்டு அவர்களுக்கெனத் தனி வாழ்க்கை அமைக்காமல் பிணைத்து வைத்திருப்பது கதையின் மையம்.

வாசிப்பவரின் முதிர்ச்சியைக் கொண்டே இக்கதைகளின் தாக்கத்தைப் படிப்பினையாகவோ வக்கிரமாகவோ உணர முடியும். சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்றும் நடக்கும் சம்பவங்கள்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.