Reviews for சே குவேரா

29 reviews total

user_10827

★ 5/5 Feb 02, 2026

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை அர்ஜெண்டினாவில் அவரது குழந்தைப் பருவம் முதல், தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணங்கள், பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து புரட்சியில் இணைந்தது, பொலிவியாவில் அவரது இறுதி நாட்கள் வரை இந்நூல் விவரிக்கிறது.

கடுமையான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு ஊழல் அரசாங்கத்தை வீழ்த்திய மனிதன் மீதான நுட்பமான போற்றுதலுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கியூபாவில் போர் முடிந்ததும், வெற்றியின் நிழலில் ஓய்வெடுக்காமல் காங்கோ மற்றும் பொலிவியாவில் புரட்சியைத் தொடர்ந்தார். அங்கே அவர் தனது புகழ்பெற்ற இறுதி வார்த்தைகளைச் சொன்னார்: "சுடு, கோழையே. நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டுமே."

சே குவேரா அல்லது கம்யூனிசம் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த, சுருக்கமான, ஈர்க்கும் வாசிப்பாக அமையும்.

user_10826

★ 3/5 Feb 02, 2026

புத்தகமாக 3 நட்சத்திரங்கள் தர நினைத்தேன். ஆனால் சே-வின் வாழ்வைப் பற்றி எனக்கு நன்கு தெரியவைத்ததற்காக 4 நட்சத்திரங்கள் கொடுக்கிறேன்.

user_10825

★ 4/5 Feb 02, 2026

சே குவேரா எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

user_10824

★ 4/5 Feb 02, 2026

நான் கண்டு வியந்த புரட்சியாளன்.

20ஆம் நூற்றாண்டு கண்ட மிகச்சிறந்த போராளிகளில் மிகவும் முக்கியமானவர் எர்னஸ்டோ என்னும் சே குவேரா. இவரை நினைத்தால் கர்வமாக உள்ளது. இனம், மொழி, நாடு கடந்து உலகத்திலுள்ள அடிமைத்தளத்திலுள்ள மக்களுக்காக நைந்து போன நுரையீரலுடன் (ஆஸ்துமா நோய்) போராடிய மாவீரன் சே.

எல்லா தலைவர்களுமே சொந்த மக்களுக்காக சொந்த மண்ணிற்காக போராடியவர்கள், ஆனால் சே மட்டுமே அதில் விதிவிலக்கு. ஒரு செய்தியாளர் சே-வை நோக்கி கேட்டார்: நீங்கள் அர்ஜெண்டினாவில் பிறந்தீர்கள், கியூபா விடுதலைக்குப் போராடினீர்கள், இப்போது பொலிவியாவில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் — எது உங்கள் தாய்நாடு? அதற்கு சே-வின் பதில்: அடிமைப்பட்டு இருக்கும் அனைத்து தேசமும் என் தாய்நாடே.

சே என்பது நண்பர் அல்லது தோழர் என்ற பொருள் கொண்ட அர்ஜெண்டினா சொல்லாகும். மக்கள் இவரை சே என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து புரட்சிகளைச் செய்தார்.

மார்க்சியவாதி, மருத்துவர், இலக்கியவாதி, புரட்சியாளர், யுத்த வல்லுனர் என பன்முகத் தன்மைகளைக் கொண்ட சே-வின் பூதவுடல் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது கொள்கைகளால் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். சே குவேரா என்பது ஒரு பெயர் அல்ல, அது ஒரு வரலாற்றுச் சரித்திரம்.

user_10823

★ 4/5 Feb 02, 2026

முதல் ஆடியோ புத்தக அனுபவம். சார்லஸ் கே அவர்களின் விவரிப்பு அருமையாக இருந்தது.

user_10822

★ 4/5 Feb 02, 2026

சிறந்த புத்தகம். சே குவேராவின் வாழ்க்கையை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_10821

★ 5/5 Feb 02, 2026

மருதன் மிக அழகாக எழுதியிருக்கிறார். ஆடியோ புத்தகத்தில் சார்லஸின் குரல் அற்புதமாக இருந்தது. சே-வின் வரலாற்றைக் கேட்டு முடிக்கும் போது நெஞ்சம் கனத்தது. நன்றி.

user_10820

★ 5/5 Feb 02, 2026

நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில் எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால், அவர்களுக்காக வருத்தப்படுங்கள்.

இது ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு எழுதிய கடைசி கடிதத்தில் இடம்பெற்ற சில வரிகள்! இந்த உலகில் எந்த மூலையில் யாருக்கு கொடுமை நடந்தாலும் வருத்தப்படு என்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட மனிதனால் சொல்ல முடியும். தன் கால்கள் செல்லும் இடமெல்லாம் தனது தேசமாக எண்ணியவன்.

எல்லா மனிதர்களுக்கும் அன்பும் மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னவன்! 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலகக்காரன்! தனது நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருந்தவன். தனது தத்துவத்துக்கு விசுவாசமாக இருந்தவன்! அதிகார வர்க்கத்தின் சுரண்டலை எதிர்க்கும் கலகக்காரர்களின் மனதில் எப்போதும் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் சே!

user_10819

★ 5/5 Feb 02, 2026

மெலிந்த உடலுடன் கைதியாக பிணைக்கப்பட்டு, ஓர் பாழடைந்த அறையில்..

சே: இது என்ன இடம்?
ஜூலியா: பள்ளிக்கூடம்
சே: இதனை மோசமாக இருக்கிறதே, இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரமமாக இல்லையா?

அந்த நிமிடம் அப்படியே உடைந்து போனார் ஜூலியா. இந்த நிலையிலும் எப்படி இவரால் இப்படி ஒரு கேள்வி கேட்க முடிகிறது?

சே: கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..

காமராஜர் + புரட்சி + ஆயுதம் = சே குவேரா