Reviews for அறியப்படாத தமிழ்மொழி

26 reviews total

user_10553

★ 5/5 Feb 02, 2026

அமிழ்தம் என்பது நமக்குள் அமிழ்ந்து உள்ளிறங்கிச் சுவையூட்டுவது!

அறிவியல் கருத்துக்களோடு ஒரு சிறப்பான தமிழ் மொழிப் பயணம். வரலாற்றுத் தரவுகளோடு ஒவ்வொரு நிகழ்வுகளையும் அணுகும் விதம் மிகச் சிறப்பு!

தமிழை அறிவியல் பாதையில் மேன்மேலும் முன்னெடுக்க முயல்வோம்!

user_10552

★ 5/5 Feb 02, 2026

படிக்கத் தகுந்த நூல்! பேச்சு தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதால் ஈர்க்கிறது. எது சரி, எதைத் தவிர்க்க வேண்டும், தமிழ் மொழி ஆர்வலர்களாக எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆசிரியரின் உழைப்புக்கு மிகவும் நன்றி, இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

user_10551

Feb 02, 2026

இந்நூலுக்கு மிகவும் சிறு பதிவே செய்கிறேன். அதற்கு மேல் சொன்னால் நூலில் உள்ளவற்றை உளறிவிடுவேன்!

என்னைத் தமிழ் போன்மிக்கள் செய்ய ஊக்கிய நூல் இதுவே. என் நண்பர்களை நாளும் ஒரு தமிழ் மொழி சார்ந்த பதிவால் படுத்தும் பணியில் என்னை ஈடுபடச் செய்தது இந்த நூலே.

அறியப்படாத தமிழ்மொழி — அறியவேண்டிய தமிழ்மொழி!

user_10550

★ 5/5 Feb 02, 2026

படித்ததும் படித்துக்கொண்டிருக்கும்போதும் நீங்கள் கண்டிப்பாக இப்படி சொல்வீர்கள்: ஓ அப்படியா! இதுவரை எனக்கு இது தெரியலையே! எனக்கு கற்பிக்கப்பட்டதும் இங்கு படிப்பதும் முரண்பாடாக உள்ளது!

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது.

இதில் சில தலைப்புகளை பாடப் புத்தகங்களில் இணைப்பதற்கு அரசு பரிசீலனை செய்தால் மிகவும் நன்று.

user_10549

★ 5/5 Feb 02, 2026

மிகச் சிறந்த புத்தகம்!

மதம், சாதி கடந்து தமிழை தமிழாக அணுகுங்கள் என்பது மட்டுமல்லாமல், பிற மொழி தவிர்ப்பு, தமிழில் பெயர்கள் சூட்டுவது, தமிழில் திட்டமிட்ட சமஸ்கிருத திரிபு, புராணத்தில் தமிழ் கடவுள்கள் எப்படி புகுத்தப்பட்டார்கள், தமிழ் சொற்களின் வேறுபாடு போன்ற எண்ணற்ற தகவல்களை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

தமிழை பெருமையும் படுத்தாமல் சிறுமையும் படுத்தாமல் தமிழை தமிழாக விளக்கியது இந்நூலின் சிறப்பு! கட்டாயம் தமிழர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!

user_10548

★ 5/5 Feb 02, 2026

தமிழை அழிக்க ஆண்டாண்டு காலமாய் நடக்கும் அரசியலை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. அதற்கான சிறந்த முயற்சி இப்புத்தகம். தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல்.

சங்கத் தமிழிலேயே இல்லாத விநாயகர் மேல் சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பாடுவது, ஆங்கிலத்தில் Jesus என்று இருக்க ஏன் தமிழில் இயேசு என்று எழுதுகிறோம் போன்ற பல புதிய தகவல்கள் இந்நூலில் உள்ளன.

user_10547

★ 5/5 Feb 02, 2026

தமிழ் மீது அன்பும் காதலும் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_10546

★ 5/5 Feb 02, 2026

அட்டைப்படமே போதும், இப்புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துகொள்ள!

நாம் நமது பள்ளிப் பருவத்தில் படித்து மறந்த, பற்பல அருந்தமிழ் தகவல்களை, இலக்கணத்தை அநாயாசமாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். பேச்சு தமிழ் நடையில் இருப்பதால் படிப்பதற்கு எளிமையாகவும் உள்வாங்கிப் புரிந்துகொள்ளும்படியும் உள்ளது.

அணிந்துரையில் சொல்லப்பட்டது போல தூக்கம் வருவதற்கோ பொழுது போக்குவதற்கோ இப்புத்தகத்தை படிக்காமல், நன்கு உணர்ந்து படித்தால் மட்டுமே முழுப்பயனை அடைய முடியும்.

பள்ளி பாடப் புத்தகமாகவே பரிந்துரைக்கப்பட வேண்டிய நூல் என சொல்லலாம்.

மொத்தத்தில், வீண் வெற்று தமிழ்வெறியும் வேண்டாம், சமஸ்கிருதமே உசத்தி என்ற சரணாகதியும் வேண்டாம். தமிழை தொல் மொழியாக எம்மொழி கலப்பும் இன்றி, சாதி மதம் சாராது, அறிவியல் கண்கொண்டு மதித்தல் வேண்டும் என்பதே நூலின் நோக்கம்.

சமஸ்கிருதம், கிரந்தம் கலந்து நாம் இதுவரை எழுதி வந்த தமிழை சீர்தூக்கி சரிபார்த்துக்கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் இந்நூல் பயன்படும்.

மறுமுறை வாசிக்க வேண்டிய நூல் — இரண்டாம் முறை படிப்பதற்கான வரிசையில் இடம்பெறும்.

user_10545

★ 5/5 Feb 02, 2026

வெறும் புத்தகமாக இல்லாமல் ஆய்வுநூல் போல எல்லாவற்றுக்குமான தரவுகள், தெளிவுகள் என்று தொகுத்திருக்கிறார் ஆசிரியர். மதப்பிடிப்பால் மொழியிலும் வரலாற்றிலும் என்னென்ன திரிபுகள் நடந்தேறியிருக்கின்றன என்று சில சான்றுகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

user_10544

★ 4/5 Feb 02, 2026

தமிழ், தமிழகம் மற்றும் தமிழர்கள் பற்றி பேசும் புத்தகம் இது. தமிழ் மறைப்பு அதிகாரமும் தொல்காப்பியத்தில் சாதியா என்ற அதிகாரமும் மிகவும் கவர்ந்தவை.

தமிழ் என்பது மனிதம், தமிழர் வாழ்வும் சமயமும் நெறியும் இயற்கைக்கு இசைந்தே அமைந்தவை என்று பகர்கிறது. ஆரியர்களும் அவர்களின் வேத பண்பாடும் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் எவ்வாறு சிதைத்தன என்பதை சுருக்கமாக விளக்குகிறது.

சாதி மத பார்வை அன்றி தமிழை அறிவியல் பாதையில் வழிநடத்துவதில் இந்நூல் ஓர் பெரும் பங்கு வகிக்கிறது.