Reviews for செங்கிஸ்கான்
29 reviews total
user_10436
★ 5/5 Feb 02, 2026செங்கிஸ்கான் பற்றி நிறைய தகவல்கள் கொண்ட புத்தகம். அவர் பெரும்பாலும் காட்டுமிராண்டி, நாடோடி என்று அழைக்கப்படுவார். ஆனால் உண்மையில் அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தந்திரோபாய தலைவர்.
user_10435
★ 4/5 Feb 02, 2026மிகவும் நல்ல புத்தகம். ஆசிரியர் அருமையாக எழுதியுள்ளார்.
user_10433
★ 4/5 Feb 02, 2026சுருக்கமான, வேகமான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகம்.
user_10432
★ 4/5 Feb 02, 2026ஒரு சாதாரணக் குழந்தை பல சிக்கல்களை எதிர்கொண்டு, தனது சிறந்த உத்திகளால் எப்படி பெரும்பான்மையான மக்களின் கானாக உயர்ந்தது என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் சித்தரிக்கிறது இந்தப் புத்தகம். நல்ல வாசிப்பு அனுபவம், அருமையான விவரணை.
user_10431
★ 4/5 Feb 02, 2026மங்கோலியப் பேரரசைக் கட்டியெழுப்பிய செங்கிஸ்கான் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் நல்ல புத்தகம்.
user_10430
★ 3/5 Feb 02, 2026செங்கிஸ்கான் பற்றிய நல்ல அறிமுகப் புத்தகம். சுவாரசியமான வேகத்தில் எழுதப்பட்டுள்ளது, அற்புதமான விவரங்களுடன் வரலாற்று நாவல் போல வாசிக்க இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் வேகம் குறைந்து வெறும் வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது.
user_10429
★ 3/5 Feb 02, 2026செங்கிஸ்கானின் தோற்றம் முதல் மறைவு வரையான வரலாற்றுத் தகவல் தொகுப்பே இந்தப் புத்தகம்.
டெமுஜின் சிறு வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று உழைத்தான். சிறு சிறு இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட மங்கோலியாவை உருவாக்க வேண்டும் எனத் தனது நண்பனுடன் இணைந்து சபதமெடுத்தான். தனது மனைவியைக் கடத்திச் சென்றவர்களுக்கு எதிராக முதல் முதலில் போர்க்களம் சென்றான் டெமுஜின்.
அடுத்தடுத்து நடைபெற்ற போர்களில் வெற்றி கண்ட டெமுஜினின் மன்னிக்கும் குணம், எதிரிகளைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொள்வது போன்ற நல்ல குணம் மக்களைக் கவர்ந்தது. ஒன்றுபட்ட மங்கோலியாவின் கானாகப் பதவி ஏற்றபோது அவருக்கு செங்கிஸ்கான் என்ற பட்டம் கொடுத்து மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
செங்கிஸ்கானின் தலைமையில் மங்கோலியப் பேரரசு ஒரு நாட்டின் மீது படையெடுத்து வருகிறது என்பதைக் கேள்விப்பட்டவுடன் ஒன்று சண்டையிட்டுச் சாக வேண்டும் இல்லை சரணடைய வேண்டும் என்ற இரு முடிவுகளில் ஏதேனும் ஒன்றே அந்த நாட்டுக்குக் கிடைத்தது.
user_10428
★ 5/5 Feb 02, 2026சிறுவனாக வயல்வெளிகளில் ஓடியாட வேண்டிய வயது! சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு விதவிதமாக விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய பருவம்! இவற்றை எல்லாம் உதறிவிட்டு, ஒரு கூட்டத்தின் நன்மைக்காக, தனது தந்தையால் இளவயது திருமணம் செய்து வைக்கப்பட்டு வேறு ஒரு இடத்துக்கு அனுப்பப்படுகிறான் ஒரு சிறுவன். பின்னாளில் ஆசியாவை ஆண்டான் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? கடினம்தான்! அப்படி நீங்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஒருவன்தான் இருக்கிறான்! அவன் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பேரரசர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான பிரமிப்பும் மிரட்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை. காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை, வலிமை. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் மங்கோலியா என்ற தேசத்தின் ஒரே ஐகான் அவரே.
சிதறிக் கிடக்கும் நாடோடிக் கூட்டங்களை எல்லாம் ஒன்றிணைத்து மங்கோலியா என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே செங்கிஸ்கானின் கனவு. செய்து காட்டினார். தன் துணிச்சலாலும் துடிதுடிப்பாலும் உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் மங்கோலியப் பேரரசையும் அமைத்தார். மாவீரன் அலெக்சாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியது.
உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாகப் பார்த்த போது, மங்கோலியா அவனைத் தங்களின் இணையற்ற தலைவனாகப் பார்த்தது.
user_10427
★ 5/5 Feb 02, 2026மிகவும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அசாத்திய மன்னனின் வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் அழகாக எழுதியுள்ளார்.
user_10426
★ 5/5 Feb 02, 2026கதை சொல்லும் விதம் அற்புதமாக இருக்கிறது. மிகவும் பிடித்தது. செங்கிஸ்கான் செய்தது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அவரது கோணத்தில் பார்த்தால் எல்லாமே சரிதான். கண்டிப்பாகப் படியுங்கள்.