Reviews for சித்திரப்பாவை
29 reviews total
user_10351
★ 5/5 Feb 02, 2026உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். இந்தச் சமூகம் வகுத்த வாழ்க்கைக்குள் பொருந்த இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருப்பது ஒரு விதம். மற்றொரு ரகம் கலை கவிதைகளில் ஆர்வம் கொண்டு இயற்கையோடு ஒன்றி எளிமையாக வாழ்பவர்கள். இந்தக் கதை அவ்விரு வர்க்கத்திற்கும் நடக்கும் போராட்டம்தான்.
சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையும் திறன் பெற்றவன் அண்ணாமலை. அவனுக்குப் பயிற்சி அளிக்கும் கலைஞரின் மகள் ஆனந்தி. கலை ஆர்வம் கொண்ட இருவரும் காதலிக்கின்றனர், ஆனால் மனம்விட்டுச் சொல்லிக்கொண்டதில்லை. சூழ்நிலை காரணமாக இருவரும் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் தமது இல்வாழ்வில் அனுபவிக்கும் சித்திரவதை நம்மையே சோகத்தில் ஆழ்த்திவிடும். இறுதியில் அவர்களது வாழ்வு என்ன ஆனது என்பதுதான் கதை.
தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் அனைத்தையும் பறிகொடுத்திடும் கதாநாயகன். கலாச்சாரம் பண்பாடு என்று தன் வாழ்க்கையைத் தொலைக்கும் கதாநாயகி. என்னால் இவர்களை ரசிக்க இயலவில்லை. மாறாக அவர்கள் மீது அதீத கோபம்தான் ஏற்பட்டது.
ஆனந்தியின் கணவன் மாணிக்கம் மிகவும் இளிவான மனிதன். இவனைப் போன்ற மனிதர்கள் இந்த உலகத்தில் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கயல்விழி மற்றும் வேங்கையின் மைந்தன் வாசித்ததும் நான் முடிவு செய்துவிட்டேன், அகிலன்தான் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று. காதல் நிரம்பி வழிந்தோட ஆரம்பித்த கதை, முதல் பாகத்தின் இறுதியில் என்னை வேதனைக்குள்ளாக்கியதும் அகிலன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று நொந்துகொண்டேன். ஆனால் கதையின் முடிவை வாசிக்கையில்தான் புலப்பட்டது இப்படைப்புக்கு ஏன் ஞானபீடம் பரிசளிக்கப்பட்டது என்று. அகிலன் ஒப்பற்ற எழுத்தாளர் என்று மற்றுமொருமுறை உணர்ந்தேன்.
பழங்கால கருப்பு வெள்ளைத் திரைப்படங்களை விரும்புபவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் படைப்பு உங்களுக்காக!
user_10350
★ 5/5 Feb 02, 2026வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பாடத்தைக் கற்றுத்தரும் நூல். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய படைப்பு!
user_10349
Feb 02, 2026இந்நூலைப் படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஞானபீட விருது பெற்ற இந்தத் தமிழ் நாவல் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
user_10348
★ 5/5 Feb 02, 2026இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கிறது. அவ்வளவு புகழ்பெற்ற படைப்பு.
user_10347
★ 5/5 Feb 02, 2026படிக்க வேண்டிய அற்புதமான நூல். வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை அறிந்துகொள்ள அனைவரும் இந்நூலை ஒரு முறையாவது படிக்க வேண்டும்.
user_10345
★ 5/5 Feb 02, 2026ஒரே அமர்வில் படிக்கத்தக்க நல்ல நாவல்! எளிமையான மொழிநடையில் ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது.
user_10344
★ 5/5 Feb 02, 2026அற்புதமான நூல். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம். நாம் உண்மையாக இருந்தால் ஒருபோதும் வீழ்ச்சி அடைய மாட்டோம் என்ற செய்தியை அழகாகச் சொல்கிறது.
user_10343
★ 5/5 Feb 02, 2026தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூல்களில் ஒன்று! அனைவரும் படிக்க வேண்டிய தலைசிறந்த படைப்பு.
user_10342
★ 5/5 Feb 02, 2026வாழ்க்கையைப் பற்றிய அற்புதமான நூல். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், பணத்தை விட ஒழுக்கமே முக்கியம், வாழ்வில் போலித்தனத்தைப் பின்பற்றக் கூடாது, பணப் போட்டியை விட மகிழ்ச்சியே முக்கியம் என்பதை அழகாகச் சொல்கிறது.
காதல் என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்பதை ஒவ்வொரு வரியும் நம் இதயத்தைத் தொடும் வகையில் அகிலன் எழுதியிருக்கிறார். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த சமூக விழிப்புணர்வு நூல். தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிறந்த எழுத்தாளர் இருந்தார் என்பதில் பெருமைப்படுகிறேன்.
user_10341
★ 5/5 Feb 02, 2026இந்தக் கலைப்படைப்புக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு ஒருநாள் நான் முதிர்ச்சி அடைவேன் என்று நம்புகிறேன்! அந்த அளவுக்கு ஆழமான நாவல்.