Reviews for முதற்கனல்
29 reviews total
user_9630
★ 5/5 Feb 02, 2026பாதுகாத்து வைக்க வேண்டிய புதையல். மகாபாரதத்தின் நிகழ்வுகளை நம் தலைமுறைக்கு எளிமையான மொழியில் கொண்டு வர ஜெயமோகன் மேற்கொண்ட சிறப்பான முயற்சி.
user_9629
★ 4/5 Feb 02, 2026மாபெரும் இதிகாசத்தின் சிறப்பான தொடக்கம். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். தமிழ் மொழிக்கே பெருமை சேர்க்கும் படைப்பு.
user_9628
★ 4/5 Feb 02, 2026ஜெயமோகனின் வார்த்தைகளின் அடர்த்தி செரிமானமாக சிறிது நேரம் எடுக்கும், ஆனால் ஒருமுறை புரிந்துவிட்டால் அது அமிர்தம் போன்றது.
user_9627
★ 5/5 Feb 02, 2026புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் சினத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. அம்பையின் கதை அதை அழகாகச் சொல்கிறது.
user_9626
★ 5/5 Feb 02, 2026ஜெயமோகனின் செழுமையான மொழியில் மகாபாரதத்தின் அற்புதமான மறுபடைப்பு. இரண்டு முறை மீண்டும் வாசித்தேன், இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள. சிகண்டி கதாபாத்திரத்தை அவர் எழுதிய விதம் மிகவும் பிடித்தது - பிதாமகன் பீஷ்மரிடம் பழிவாங்கும் நெருப்பு! பெண் கதாபாத்திரங்களை அவர் எழுதும் விதத்தின் ரசிகன் நான். தமிழ் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
user_9625
★ 4/5 Feb 02, 2026முதற்கனல் - ஒரு பெருங்காவியத்தின் முதற்கனல், ஒரு பெருநிகழ்வின் முதற்கனல், ஒரு பெரும்படைப்பின் முதற்கனல்.
காலம் காலமாக இந்திய பண்பாட்டு மரபில் சொல்லப்பட்டு வரும் மகாபாரதக் காவியத்தின் கதைமாந்தர்களின் உளவியலைச் சில புனைவுகளோடு சிறப்பாகக் கொணர்ந்திருக்கும் படைப்பு வெண்முரசு.
சின்னத்திரையில் கண்ட மேம்போக்கான கதை வடிவத்தை மட்டுமே நமக்கு அளித்து வந்தது பொதுவெளி. ஒரு பேரிலக்கியத்தை அணுக வேண்டிய முறையை ஆசிரியர் வேறு பரிணாமத்தில் கண்முன் நிறுத்துகிறார்.
ஜெயமோகனின் வார்த்தைப் பிரயோகங்கள் நம்மை ஒன்ற வைத்து, கதை நிகழும் இடத்திற்கே இட்டுச்செல்கின்றன. பெருமணல்பரப்பு, அடர்கானகங்கள், பிரவாகம் எடுக்கும் கங்கை யமுனை நதிகள் என இயற்கையின் அருட்கொடைகளை எழுத்தின் வாயிலாகவே உணர வைப்பதில் ஆசிரியர் உண்மையிலேயே எழுத்தை ஆளும் எழுத்தாளர்.
பல பயணங்கள், பலவகை வாசிப்புகள், பலகட்ட ஆராய்ச்சி என அனைத்தின் கூட்டுப்பலனாக இந்தப் படைப்பு வந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள ஓவியங்களும் படைப்போடு நம்மை நெருங்கச் செய்வதில் அளப்பரிய பங்கு வகிக்கின்றன.
பல தத்துவார்த்த உரையாடல்கள் சில புரிந்தும் பல புரியாமலும் உள்ளன. மறுவாசிப்பின் வழியே அவற்றைக் கண்டடைய வழிவகை உண்டு. இந்த முதற்கனல் என் மனதில் வெண்முரசு எனும் பிரமாண்டப் படைப்பை அணுக ஒரு முதற்கனலாய் அமைந்துள்ளது.
user_9624
★ 5/5 Feb 02, 2026என்னுடைய வெண்முரசு பெரும்பயணம் இனிதே தொடங்கியது. அற்புதமான தொடக்கம்!
user_9623
★ 5/5 Feb 02, 2026இந்தப் படைப்பு 21ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகிற்கு அளித்த கொடையாக அங்கீகரிக்கப்படும் நாள் வரும். இத்தகைய மாபெரும் எழுத்தாளரின் காலத்தில் வாழ்வது பெருமை.
user_9622
★ 4/5 Feb 02, 2026மகாபாரதத்தை வேறொரு கோணத்தில் கதைசொல்லலாக அமைந்த விரிவான புத்தகம். பீஷ்மரின் அறிமுகக் காட்சியில் உடல் சிலிர்க்கும்!
user_9621
★ 3/5 Feb 02, 2026இந்தக் குழுவாசிப்பில் இணைந்ததற்கு முதல் காரணம், தனியாக வாசித்தால் இந்தப் பெரும் நாவலை வாழ்வில் வாசிக்கவே மாட்டேனோ என்ற பயம் தான்.
குழந்தைப் பருவத்தில் மகாபாரதக் கதைகளைக் கேட்டதுண்டு, அதன் பின் ஏனோ வாசிக்கவில்லை. முழுக் கதைகளையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்ற ஆசையில் வெண்முரசை ஆரம்பித்தேன். நான் கேட்ட கதைகள் போல இவை ஆரம்பிக்கவில்லை - ஜெயமோகன் முழுக் கதையையும் வேறொரு பரிமாணத்தில் சொல்கிறார்.
பாம்பிலிருந்து உலகம் தொடங்கியது என்று படித்த உடனே நான் வேறொரு உலகிற்குத் தயாராகி விட்டேன். கதாபாத்திர முறையும் கிளைக்கதைகளும் வியப்பிற்குரியவை. ஆனால் அத்தனை பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை - ஏற்கனவே கேட்டிருந்த பெயர்கள் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்கின்றன.
பீஷ்மரின் மீது எவ்வளவு காதல் கொள்கிறோமோ அதே அளவு சிகண்டி மீதும் காதலில் விழ வைக்கிறார். பீஷ்மரின் பொறுமையும், அம்பையின் காதலும், விசித்திர வீரனின் வாழ்க்கை புரிதலும், சிகண்டியின் மன வலிமையும் ஆச்சரியம்.
சிகண்டி அன்னையின் கூற்றுக்கிணங்க பீஷ்மரைக் கொல்லச் செல்லுதலும், அவரிடமே மாணவனாகக் கற்றுணர நிலைபடுவதும் கதையின் உச்சம்.