Reviews for செல்லாத பணம்
30 reviews total
user_9526
Feb 02, 2026user_9525
★ 5/5 Feb 02, 2026கண்ணீர் இல்லாமல் இந்த நாவலைக் கடப்பது கடினம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
user_9524
★ 4/5 Feb 02, 2026நான் இமையம் எழுதிய பிற நூல்களை வாசித்தேன். குறிப்பாக இந்த நூலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தக் கதையில் தொலைபேசியில் நடக்கும் உரையாடலை மிகவும் அழகாக எழுதியிருக்கிறார். சில கட்டத்தில் பணம் வெறும் வெற்றுக் காகிதமாகவே கருதப்படுகிறது என்பதை கதை மீண்டும் மீண்டும் டாக்டர் மூலமாகவும் ஆனந்தகுமார் மூலமாகவும் உணர்த்துகிறது. கதையில் ரேவதியைத் தீயிட்டுக் கொளுத்தியது யார் என்று ரவி சொல்லிய காரணம் என்னை மேலும் இறுகிப் போகச் செய்தது. ஒருவரின் இறப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமோ அதைவிட பல மடங்கு வலியை உண்டாக்கும்.
user_9523
★ 5/5 Feb 02, 2026இமையம் அவர்களின் இயல்பான படைப்பு. சரியான நேரத்தில் மனிதர்களின் தவறான அல்லது தவறிய முடிவுகள் வாழ்க்கையில் செல்லாத பணமே.
மிகவும் எளிதான கதைக்களம், ஆழமான அழுத்தமான கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் மிகவும் எளிதாகக் கண் முன்னே ஓடவிடலாம் — இதுவே நாவலின் முதல் வெற்றி.
கதை இயல்பு மீறாமல் கடலூர்-பாண்டிச்சேரி பகுதிகளில் நகர்கிறது. அதன் வட்டார வழக்குச் சொற்களை இயல்பாய் அழகாய் நேர்த்தியாய் இமையம் கையாண்டதே இரண்டாம் வெற்றி.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில், கறாரான நர்ஸ் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமானது.
user_9522
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் புத்தக வாசிப்பு சமூகத்தில் பரவலாகப் பேசப்படுவதைக் கண்டேன். 'ஒரு எரிந்த பெண்' என்பது இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. தமிழிலேயே படிக்க முடிவு செய்தேன்.
ரேவதி, நல்ல கல்வியறிவு பெற்ற பெண், வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள். அவள் தந்தை அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. இறுதி ஆண்டில் வேலைக்கான அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும்போது, ஆட்டோ ஓட்டுநரான ரவியைச் சந்திக்கிறாள்.
user_9521
★ 3/5 Feb 02, 2026காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண் குடும்பப் பிரச்சனையில் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு நடக்கும் இன்னல்களையும் அவளைச் சுற்றி உறவினர்கள் படும் இன்னல்களையும் பற்றி இந்தக் கதை விவரிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றத் தேவைப்படவில்லை என்பதே இந்தக் கதையின் உட்கருத்து.
உண்மையில் கதை படிப்பவர்களுக்கு ஒருவர் தீக்காயங்கள் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் என்னென்ன சித்திரவதைகள் அவர்களுக்கு நடக்கும் என்பதைக் கண் எதிரே காட்டுகிறது.
user_9520
★ 5/5 Feb 02, 2026கௌரவத்தை உறவிற்கு மேற்பட்டதாக நினைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தில் இருக்கிற பலர் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளைப் பணத்தை வைத்துத் திருத்த முடியாது என்பதுதான் இந்த நாவலின் சாராம்சம்.
முன்னாடி எல்லாம் பேப்பரில் யாரோ தீக்குளித்தார்கள் என்று செய்தி பார்த்தால் ஒன்றும் தோன்றாது. பாவம் என்று சொல்லிவிட்டு ஒரு செகண்டில் கடந்து போய்விடுவேன். ஆனால் இனிமேல் அப்படி இயல்பாகக் கடந்து போக முடியாது. இந்த நாவல் கட்டாயம் உங்களை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும்.
user_9519
★ 5/5 Feb 02, 2026user_9518
★ 4/5 Feb 02, 2026நாம் புரிந்துகொள்ள முடியாதவற்றையெல்லாம் வார்த்தைச் சட்டங்களுக்குள் உவகை, அச்சம், நகை என்று தனித்தனியாக அடைத்து ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறோமா?
பிரிந்து நிற்காமல் ஒன்றன் மீது ஒன்றாய்ப் படரும் ரேகைகள்தானோ மனித உணர்வுகளெல்லாம்!
உணர்வுகளை அனுபவிக்கும் மையம் ஒன்று எப்போதுமே உள்ளதா? அல்லது, அவ்வப்போது வரும் உணர்வு வெள்ளங்கள்தான் 'நான்' என்று உருவாகி அதே கணத்தில் மற்றொரு 'நான்' என்பதற்கு வழிவிட்டு மறைகிறதா?
user_9517
★ 5/5 Feb 02, 2026இந்த நாவல் தந்த தீவிர உணர்வு காரணமாக மீண்டும் படிக்க விரும்பவில்லை.
ஒரு சென்னைப் புத்தகக் கண்காட்சியில், சுமார் 5-6 ஆண்டுகளுக்கு முன், அப்போது 'பெத்தவன்' தவிர அவரது எல்லா படைப்புகளையும் படித்திருந்தேன். 'சேடல்' அல்லது 'கோவேறு கழுதைகள்' நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஏன் தற்கொலையை நினைக்கவில்லை என்று அவரிடம் கேட்டேன். 'பெத்தவன்' படித்தீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். தற்கொலை தீர்வு அல்ல என்றார்.