Reviews for குறிஞ்சி மலர்
30 reviews total
user_9496
★ 3/5 Feb 02, 2026இன்றைய காலத்தில் பூரணியைப் போன்ற ஒரு பெண்ணைக் காண்பது கடினம். இந்நாவலின் முதல் பதிப்பிலிருந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும் கதையின் விவரிப்பு சுவாரசியமானது — அக்கால சமூகம் பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொண்டது என்பதைப் பிரதிபலிக்கிறது. மண்ணின் மணத்தை புரிந்துகொள்ள நல்ல வாசிப்பு.
user_9495
★ 4/5 Feb 02, 2026பூரணியும் அரவிந்தனும் எந்த நிலையிலும் தன்னிலை மாறாதவர்களாய் வாழ்ந்து காட்டியிருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழ்வது அரிது. இவர்கள் நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.
என்னை மிகவும் கவர்ந்தது — இருவரும் இறுதி வரை காதலித்துக் கொண்டிருந்தார்கள், காதல் என்னும் வார்த்தையைச் சொல்லாதவர்களாய். இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாட்கணக்கில் தூக்கம் சரியாக இல்லை கதையின் முடிவை எண்ணி எண்ணி...
அமரர் நா.பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி.
user_9494
★ 5/5 Feb 02, 2026நல்ல புதினம். கருணை, அன்பு இவைத் தவிர இன்னும் சில காரியங்களைச் செய்திருக்கலாம் கதை நாயகன். புதினம் முழுதும் உவகை வாக்கியங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன, நல்ல அனுபவம், வாசித்தது மகிழ்ச்சி.
user_9493
★ 5/5 Feb 02, 2026அரவிந்தனும் பூரணியும்... என்றும் நம் நினைவில் நிற்கும் அழியாத பாத்திரங்கள். இந்நாவலைப் படித்தவர்கள் இவர்களை மறக்கவே முடியாது.
user_9492
Feb 02, 2026முதலில் இவரது சமுதாய வீதி நாவலைப் படிக்க வேண்டும். நா.பார்த்தசாரதியின் எழுத்துகளுக்கு நான் முற்றிலும் புதியவன்.
user_9491
★ 3/5 Feb 02, 2026கொஞ்சம் சுமாரான நாவல்தான். பெரிதாக ஈர்க்கவில்லை, ஆனால் படிக்கலாம்.
user_9490
★ 4/5 Feb 02, 2026சில புத்தகங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அப்படிப்பட்ட புதினம் இது. கதை பூரணி, அரவிந்தன் இருவரைப் பற்றியது என்றாலும் கதை எழுதப்பட்ட காலம், இடம் தெளிவாக நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறது. முடிவு சோகமாக இருந்தாலும், பூரணியும் அரவிந்தனும் மனதில் நின்றுவிடுவார்கள்.
user_9489
★ 4/5 Feb 02, 2026சென்ற வருட விடுமுறையில் தாயகத்திற்குச் சென்றிருந்தபொழுது வீட்டிலிருந்த குறிஞ்சி மலர் நாவலைக் கையோடு எடுத்து வந்தேன். அப்பா என்னிடம் இந்நாவலை வாசிக்கும்படி பலமுறைக் கேட்டிருந்தும், நான் அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்து வந்தேன்.
மறைந்த எழுத்தாளர், சாகித்திய அகாதமி விருது பெற்ற அமரர் நா. பார்த்தசாரதி அவர்களின் கற்பனையில் உருவான கருத்தாழமிக்க இந்நாவல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது.
கதையின் நாயகி பூரணி, தமிழ்ப் பேராசிரியரான தன் தந்தையின் மடியில் தமிழ்ப் பயின்று, உயரிய அறநெறிக் கொள்கையுடன் வாழும் ஒரு புதுமைப்பெண். கதையின் நாயகன் அரவிந்தன், சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அவலங்களை எதிர்த்துப் போராடும் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள லட்சிய இளைஞன்.
இக்கதையைப் படித்து அதன் ருசியில் இலயிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகக் கேள்வியுற்று வியப்படைந்தேன்.
இந்நாவலை வாசிக்கும்போது நான் ரசித்து வியந்தது — கதையின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் அமைந்திருக்கும் சங்கப்பாடல்களும் ஆசிரியரின் கவிதைகளும். இந்தத் தொடக்கப் பாடல்கள் அப்பகுதியின் கருவை ஏந்தி நிற்பதாகத் தோன்றியது.
கதையின் கரு — கல்யாண வயதில் தன் தந்தையை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெண், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் இன்னல்கள், சமூகத்தால் பார்க்கப்படும் விதம், தந்தை கற்றுக்கொடுத்த தமிழாலும் அறநெறிக் கொள்கைகளாலும் துணிச்சலாக எதிர்கொள்வதும், உடன்பிறப்புகளை வழிநடத்திச் செல்வதும் — ஒரு புரட்சிப் பெண்ணின் கதை.
ஆசிரியர் இக்கதை முழுவதும் பல நல்ல கருத்துகளையும், செல்வந்தர்களின் தவறான செயல்பாடுகளையும் கதாபாத்திரங்களினூடே சரிவரப் புகுத்தி வெற்றி கண்டுள்ளார். ஆசிரியரின் தமிழ் வளமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.
இந்நாவலின் காட்சி வடிவமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர் மு.க. ஸ்டாலின்.
பூரணி, அரவிந்தன் போன்று அறநெறியில் வாழும் மனிதர்களை இனி நேரில் காண்பதென்பது அரிது.
user_9488
★ 5/5 Feb 02, 2026கற்பனையில் படைக்கும் மாந்தர்களை இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத்திறன் மிக்க கலைஞர்.
தமிழ்ப்பெண்குலம் என்ற வளமான நிலம் வறண்டு போகின்ற வேளையில் மலிந்து வரும் குழப்பங்களையும் குறைகளையும் நீக்கி ஒளிபரப்புவதற்கு தாய்க்குலத்திற்கு மறுபடியும் ஓர் ஞானச்சுடர் தேவை. தொட்டதெல்லாம் விளங்கச் செய்யும் பொலிவு வாய்ந்த தமிழ்ப்பெண் மரபு, அந்த மரபிலிருந்து இந்த நாட்டு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பண்பு வாய்ந்த லட்சிய பெண்கள் பிறக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் படைக்கப்பட்ட அருமையான படைப்பு.
ஆசைகளின் ஆரம்பம்தான் அனைத்திற்குமான விளைவு என்பதனால் அதை அறிவு இச்சையாகத் தன் மனதில் செலுத்தாமல் மூளையில் செலுத்திச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் — அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அரவிந்தன் திகழ்கிறார். இது இவரின் தனிச்சிறப்பு — கதையின் நாயகன் என்றுமே ஒரு தனித்தன்மை வாய்ந்த விளங்கும் கதாபாத்திரமாகவே அமைந்திருப்பது வழக்கம்.
இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும் நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ள தேர்தல் களத்தில் நிகழும் நாட்களின் கொடுஞ்செயல்களை எடுத்துக்காட்டியிருப்பது சிறப்பு.
user_9487
★ 2/5 Feb 02, 2026கதாநாயகன்... கதாநாயகி... அவர்களின் காதல்... சமூக சேவையின் சுவையும் சேர்ந்து... எல்லாமே 400 பக்கங்களில் அடைக்கப்பட்டிருக்கிறது. படிக்கச் சோர்வாக இருந்தது. மன்னிக்கவும், இது எனக்கு ஒத்துவரவில்லை.