Reviews for சாயாவனம்

24 reviews total

user_9446

★ 5/5 Feb 02, 2026

மிகச் சிறந்த நாவல். அற்புதமான விவரிப்பு முறை. வாசகனை கதையின் களத்திற்குள் இழுத்துச் செல்கிறது இந்தப் படைப்பு. சா.கந்தசாமியின் எழுத்தாற்றல் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது.

user_9445

★ 5/5 Feb 02, 2026

மனிதனுக்கும் இயற்கைக்குமான நேரடிப் போராட்டம் — இதுதான் சாயாவனத்தின் சாரம். காட்டை அழிக்க முற்படும் சிதம்பரனுக்கும் தன்னைக் காத்துக்கொள்ள முயலும் வனத்திற்குமான மோதல் பரபரப்பாக விரிகிறது.

user_9444

★ 4/5 Feb 02, 2026

மனிதர்கள் வசிக்காத ஒரு அடர்காட்டை ஒரு மனிதன் மெல்ல மெல்ல அழிக்கும் கதை. இயற்கையின் மீதான மனிதனின் படிப்படியான ஆக்கிரமிப்பை எளிமையாகவும் வலிமையாகவும் சித்தரிக்கிறது இந்நாவல்.

user_9443

★ 4/5 Feb 02, 2026

வன அழிப்பு என்ற கருப்பொருளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், இயற்கையின் மீதான மனிதனின் ஆக்கிரமிப்பை அழுத்தமாகப் பேசுகிறது. சா.கந்தசாமியின் எழுத்து நடை கதையின் வலியை மேலும் ஆழமாக்குகிறது.

user_9442

★ 5/5 Feb 02, 2026

அமைதியாக நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு கிராமத்தின் வாழ்க்கை எப்படி முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிகிறது என்பது கதையின் கரு. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம், நடை — ஆகா, மனதை விட்டு நீங்காத வர்ணனைகள்.

user_9441

★ 3/5 Feb 02, 2026

வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒருவன் சர்க்கரை ஆலை கட்ட நிலம் வாங்கி, காட்டை அழித்துத் தன் கனவை நிறைவேற்றுகிறான். அந்த வனத்தின் அழிவில் என்ன இழப்புகள், என்ன ஆதாயங்கள் என்பதே கதையின் மையம்.

user_9440

★ 1/5 Feb 02, 2026

வெளிநாடு சென்று கை நிறையப் பணத்தோடு ஊர் வரும் இளைஞன் சிதம்பரம், இங்கு தொழில் தொடங்க இடம் வாங்கிக் காட்டை அழித்து தொழில் தொடங்குவதோடு நாவல் முடிகிறது.

இது ஒரு சூழலியல் நாவல் என்று சொல்கிறார்கள் — காட்டை அழிப்பதால் காட்டு விலங்குகள் அழிகின்றன, நிலத்தின் தன்மை மாறி அங்கு விளையும் புளியின் சுவை மாறுகிறது. இதுதான் மொத்த நாவல் சொல்லும் செய்தி. எந்த விதத்திலும் இந்நாவல் நல்ல வாசிப்பு அனுபவமாக இல்லை. சுமாரான நாவல்தான்.

user_9439

★ 3/5 Feb 02, 2026

சுற்றுச்சூழல் குறித்து நம்முள் எப்போதும் ஒரு பயமும் அலட்சியமும் சேர்ந்து நெருடிக்கொண்டுள்ளது. இப்படைப்பு மேலும் ஒரு கலக்கத்தை உண்டாக்கும். பல வருடங்களுக்கு முன் எழுதியிருப்பினும் இன்றும் நடக்கக்கூடிய பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை நினைவுபடுத்துகிறது.

சாயாவனம் என்னும் சிற்றூரில் தனிமனிதனின் சுயநலத்திற்காக அழிக்கப்படும் பொதுநலமும், அதை வளர்ச்சி என்று நியாயப்படுத்தும் மனிதக் குணமே சாயாவனம் நாவலின் மையம்.

user_9438

★ 5/5 Feb 02, 2026

ரொம்ப நாட்களாகப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இறுதியாகப் படித்து முடித்துவிட்டேன். கதை ஒரு கிராமத்தின் தோப்பில் ஆரம்பம். அதனை ஒருவன் விலைக்கு வாங்கி கரும்பு ஆலை அமைக்க என்னவெல்லாம் செய்தான் என்பதே கதை.

புளிய தோப்பினைக் குறிப்பிடும்போது அதன் வாசனை நம்மைக் கிறங்க வைக்கிறது. அத்தோப்பின் பின் இருக்கும் காடு எளிதில் அழிக்க முடியாத அளவு அடர்த்தியாக இருக்கிறது. இறுதியில் நெருப்பைக் கொண்டு அழிக்கும்போது எத்தனை காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன அழிந்தன என்பது அந்த நெருப்புக்கு மட்டும்தான் தெரியும்.

இக்கதை 1940களில் எழுதப்பட்டது. ஆனால் இன்றளவும் நமது தேவைக்காகக் காட்டினை அழித்து வருகிறோம். ஒரு நாள் இயற்கை இதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் — அன்று வருத்தப்பட்டுப் பயனில்லை.

user_9437

★ 4/5 Feb 02, 2026

நாம் நிறையப் பழைய கட்டிடங்களைக் கடந்திருப்போம். அதன் அழகு நேர்த்தி எல்லாவற்றையும் பற்றிப் பேசியிருப்போம். ஆனால் ஒரு முறையாவது அந்தக் கட்டிடம் தோன்றுவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்ததுண்டா? அது ஒரு வனமாக இருந்திருந்தால் எப்படி அழித்திருப்பார்கள் என்ற யோசனைக்குத் தீனி போடுவதுதான் இந்நாவலின் சுருக்கம்.

பிரதானமான கதாபாத்திரங்கள் சிதம்பரம், தேவர் மற்றும் வனம், நரி, குரங்கு, பறவைகள். இரண்டு விதமாக இக்கதையை உணரலாம் — வனத்தின் பார்வையில் ஒன்று, சிதம்பரத்தின் பார்வையில் மற்றொன்று. போர் போன்ற காட்சி அமைத்து வனத்தை சிதம்பரம் எப்படி அழிக்க முற்படுகிறான் என்று சொல்வது சிறப்பு. பிரம்பு, காரை, தாழை, புன்னை போன்ற மரம் செடி கொடிகளின் குணத்தை அப்போரில் அருமையாக விளக்கியுள்ளார்.

காட்டுத்தீ போன்ற சம்பவங்கள் நம் மனதைக் காயப்படுத்தும் — அது போலவே இங்கே ஒரு தீ வனத்தைச் சுற்றிப் பரவி, அங்கு வாழும் உயிரினங்களைத் தொட்டுச் செல்லுகையில் கண்முன்னே நடப்பதுபோல் காட்டியுள்ளார் சா.கந்தசாமி. நம் தேவைக்காகக் காட்டை அழிக்கிறோம், ஆனால் பின்புதான் தெரிகிறது — காடு என்பது நம் தேவைக்குத்தான் என்று.