Reviews for அஞ்ஞாடி

19 reviews total

user_9196

★ 4/5 Feb 02, 2026

மாரியின் பறக்கும் கழுதை, பேசும் முயல், தவளை, யானை, பனைமரங்களைப் பேய்த்தெடுத்து ஆட்டம் போடும் பேய்களும் பூதங்களும், இத்தனைக்கும் மத்தியில் வழிகாட்டும் முனியசாமியும் — இன்னும் நிறைய நிறைய மாயக்கதைகள்.

சீவிப்போட்ட சுரைக்காய்த் துண்டு போன்ற நிலா, விடிந்ததும் கனாவை முந்தியில் முடிந்து கொண்ட கறுப்பி, பொறுமையும் பக்குவமும் கொண்ட கதாநாயகனுக்குரிய அத்துணை அம்சத்துடன் நட்பைச் சிவிகையாக இட்டு நடமாடும் ஆண்டி, பஞ்சத்தால் சுருக்கில் போட்டுக் கிணற்றில் வீசப்பட்ட நாய், தலையில் ரத்தம் இல்லாமல் வற்றியிருந்த பேன் — இவை அத்தனையும் பூமணியின் எழுத்தில் உயிர்பெறுகின்றன.

ஊர்கெட்டு மக்கள் மாண்ட பின் பஞ்சம் காத்த மழை, பேயான பெண் குடும்ப வாழ்விற்கு ஆசைப்பட்டு மனிதனை மணந்த கதை, வரலாற்றுக் கதைகள், கட்டபொம்மன், ஊமைத்துரை மற்ற மன்னர்களின் வரலாறு, சிவகாசி உள்ளிட்ட பல ஊர்களின் வரலாறு, சாதிச் சண்டைகள், மதமாற்றங்கள், கோயிலுக்குள் நுழைந்த கதை — எண்ணிலடங்காப் பெயர்கள், அவை அத்தனையும் மனிதர்கள் தான்.

ஒட்டுமொத்தமாக இது ஒரு பொக்கிஷப் பெட்டகம். சிறந்த பரிசுகளைக் கண்டிப்பாக எடுக்கலாம்!

user_9195

★ 5/5 Feb 02, 2026

தீவிர வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய அற்புதமான நாவல் இது.

user_9194

★ 5/5 Feb 02, 2026

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களின் தொழில், பண்பாடு, கலாச்சாரம், காதல், வீரம், சாதி, மதத்தின் பெயரால் கொலையுண்டு மாண்ட மனிதர்கள் என அனைத்தையும் எழுத்துக்கள் மூலம் கோர்த்து, இக்கால சமூகத்திற்குத் தானமாக அளித்துள்ளார் ஆசிரியர் பூமணி.

user_9193

★ 2/5 Feb 02, 2026

அதிகப்படியான விவரணைகள் இருக்கின்றன. கதையின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன, ஆனால் இது ஒரு புனைவு நாவல் என்பதால் அவற்றை முழுமையாக நம்ப முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. மனிதர்களின் கதை நன்றாக இருந்தது, ஆனால் வரலாற்றுத் தகவல்கள் கதையை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

user_9192

★ 5/5 Feb 02, 2026

தென் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குள் ஒரு சுவாரசியமான பயணம் — சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனப் பல இடங்களின் கதைகளை உள்ளடக்கியது. பூமணி பல நிகழ்வுகளை விரிவாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளார்.

கிராம மக்களின் இரு நூற்றாண்டுகால வாழ்க்கை, பெரும் பஞ்சம், நாயக்க ஆட்சியாளர்கள், நாடார் சமூகத்தின் எழுச்சி, கிருத்துவ மதப் பரவல், சமூக மோதல்கள் — இவை அனைத்தும் சில குடும்பங்களின் பின்னணியில் விரிகின்றன. அக்குடும்பங்கள் தலைமுறைகளைக் கடக்கின்றன.

நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் — தெம்மாங்கு, கும்மி — படிக்க இனிமையானவை.

user_9191

★ 5/5 Feb 02, 2026

"அஞ்ஞாடி" என்பது சமூகம் வழியற்றவர்களாகக் கருதப்படும், நிரந்தர இடம்பெயர்ந்தவர்களைக் குறிக்கும் ஒரு சொல். 1948 பக்கங்கள், பல கதாபாத்திரங்கள், பல கதைக்களங்கள், பல்வேறு கிளைக்கதைகள் கொண்ட நாவல். இத்தகைய எழுத்து முறை இதுவரை படித்ததே இல்லை என்பதே உண்மை! மிகவும் ரசித்து வாசித்த புத்தகம் இது.

இந்நாவல் தமிழ் நாகரிகத்தின் பல பரிமாணங்களை அலசுகிறது. பல கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை வரலாறுகளை மாறி மாறி கூறுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் இயல்பில், அதன் நிலைமைகளில் உலவுகிறது. ஆண்டி மற்றும் கருப்பி போன்ற முக்கியமான கதாபாத்திரங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும் விதத்தில் வரையப்பட்டுள்ளன. இதில் வரும் பழமொழிகளும், பேச்சு வழக்கும் அந்த ஊரிலேயே வாழ்ந்து திரும்பியது போன்ற அனுபவத்தைத் தருகிறது.

பூமணி தனது எழுத்தில் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை, அவற்றின் சிக்கல்களை, மன உளைச்சல்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்நாவல் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. படித்தவரின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். இதன் பின் எவ்வளவு உழைப்பிருக்கும் என எண்ணும்போது எழுத்தாளர் பூமணியின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைக் கண்டு வியப்பே மிஞ்சுகிறது! சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிப்பேன். இந்நாவல் ஒரு அனுபவம் — எல்லாரும் பெற வேண்டிய அனுபவம்!

user_9190

★ 5/5 Feb 02, 2026

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் — இது ஒரு தலைசிறந்த படைப்பு. பூமணியின் மிகச் சிறந்த நாவல். 1050 பக்கங்களில் பல நூற்றாண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது.

நாடார் சமூகத்தின் எழுச்சி, கிருத்துவ மிஷனரிகளும் மதமாற்றங்களும், கோயில் நுழைவு தொடர்பான சமூக மோதல்கள், எட்டையபுரம் சமஸ்தானம், பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானம், மருது சகோதரர்களின் பங்கு, புதுக்கோட்டை தொண்டைமான் ஆகியவற்றை அறிய விரும்பினால் இந்நாவல் படிக்க வேண்டும்.

அறிவுச் செல்வம், வரலாறு, இலக்கிய அழகியல் — எல்லாமே நிறைந்த பொக்கிஷம் இது. படிக்கத் தொடங்கினால் அந்தக் காலத்திலும் வாழ்க்கையிலும் மூழ்கிவிடுவீர்கள். எந்தத் தடையுமின்றி தனியாக அமர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

user_9189

★ 5/5 Feb 02, 2026

அஞ்ஞாடி — கதைகளின் பொக்கிஷம், தகவல்களின் களஞ்சியம், எளிய மக்களின் வாழ்வியல், வரலாற்றுப் பேழை, அழகியல் விருந்து. மொத்தத்தில் தமிழ் மொழியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.

user_9188

★ 5/5 Feb 02, 2026

மன்னர்களின் கம்பீரத்தையும் பராக்கிரமங்களையும் பேசிய நாவல்களே வரலாற்று நாவல்களாக கொண்டாடப்பட்ட இந்த நாட்டில், இரு நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பதிவாக விரிகிறது அஞ்ஞாடி.

ஒரே சமூகம் வாழும் ஒரு கிராமத்தில் வேறொரு சமூகக் குடியேற்றம் எப்படி நடைபெறுகிறது, சமண நாட்டார் தெய்வங்களை இந்து மதம் எவ்வாறு செரித்துக் கொண்டது, கிருத்துவ மதமாற்றத்திற்குப் பின் எத்தனை காரணங்கள் உண்டு, இன்று பெருமை பேசும் நாடார் சமூகம் அடைந்த இன்னல்கள் எத்தகையது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு எத்தகையது, பஞ்சம் என்றால் என்ன, அது எளிய மக்களின் வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப் போடும், சாதிய அடுக்கு முறையில் வெவ்வேறு நிலையில் உள்ள சமூகங்களின் அணுகுமுறை எப்படி என்பதையெல்லாம் இந்நாவல் அழகாகப் பேசுகிறது.

கருப்பி அடிக்கடி மலைப்பது போல்.. "அஞ்ஞாடி"!