Reviews for அஞ்ஞாடி
19 reviews total
user_9206
Feb 02, 2026நல்ல புத்தகம். படிக்கும்போது அந்தக் கால மக்களின் வாழ்க்கையை நேரில் உணரும் அனுபவம் கிடைக்கிறது.
user_9205
★ 5/5 Feb 02, 2026கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். நம் முன்னோர்களின் சொல்லப்படாத கதை இது.
user_9204
★ 5/5 Feb 02, 2026படிக்கத் தூண்டும் மிகவும் சுவாரசியமான புத்தகம்.
user_9203
★ 5/5 Feb 02, 2026தமிழக வரலாற்றை மிகத் தெளிவாக அலசுகிறது இந்த நாவல். சிறப்பான எதிர்நடையுடன், படிக்கப் படிக்க ஆர்வமூட்டும் சொலவடைகளுடன் அற்புதமாக இருக்கிறது.
user_9202
★ 5/5 Feb 02, 2026படித்த புத்தகங்களில் மிகச் சிறந்தவற்றில் ஒன்று இது. இதை முடிக்க பொறுமை வேண்டும், ஆனால் அந்தப் பொறுமைக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
user_9201
★ 5/5 Feb 02, 2026பூமணியின் 200 ஆண்டுகால வரலாற்றைப் பேசும் சிறப்பான படைப்பு. நாட்டுப்புற மாயக் கதைகள் மிகவும் பிடித்திருந்தன.
user_9200
★ 5/5 Feb 02, 2026பூமணியின் அஞ்ஞாடி ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். தென் தமிழ்நாட்டின் பல நூற்றாண்டுகால வரலாற்றை, சமூக மாற்றங்களை, மக்களின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கும் இந்நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறும்.
user_9199
★ 5/5 Feb 02, 2026இரு சிறுவர்கள் எப்படி நண்பர்களாகிறார்கள் என்பதிலிருந்து தொடங்கி, வறுமை, வறட்சி, கடவுள் நம்பிக்கை, சமூக வேர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் அவர்களின் வாழ்க்கை பயணிக்கிறது. பூமணியின் இந்தப் படைப்பு ஒரு பரிணாம ஆவணப் படைப்பாக விளங்குகிறது.
user_9198
★ 4/5 Feb 02, 2026சிவகாசி கொள்ளை, கழுகுமலை கலவரம் நடப்பதற்கு முன்பும் பின்பும் ஊரின் நிலைமையே கதையின் கரு. கதையில் வரும் பெரும்பாலான இடங்கள் வரலாற்றுப் பதிவாகவே உள்ளன. ஒரு கதையை உணர்ச்சி தலும்ப சொல்வதே பூமணியின் சிறப்பு.
ஆனால் இதில் உணர்ச்சிகரமான பகுதிகள் குறைவு. எண்ணற்ற கதாபாத்திரங்களால் குழப்பம் ஏற்படலாம். அருமையான கதாபாத்திரங்கள் கொண்டவை கடைசி 150 பக்கங்கள். புயலுக்கு முன் அமைதி போல ஒவ்வொரு கதாபாத்திரம் முடியும் போதும் பூமணி அறிகுறி காட்டுகிறார்.
தாது பஞ்சம் வரும் பக்கங்கள் நம் உணர்வுகளை மரத்துப் போகச் செய்யும். பல வகையான தகவல்களும் அதிகமான வரலாற்றுப் பதிவுகளும் சில இடங்களில் சலிப்படையச் செய்யலாம். கருத்தையன் கொள்ளையடிப்பவர்களை விரட்டிவிட்டு அவனும் கொள்ளையடிக்கிறான் — பூமணி அதை நியாயப்படுத்தவும் செய்கிறார். இதைப் படித்து முடிக்கும் போது ஒரு கிராமத்திற்குள் சென்று அதன் வளர்ச்சி நிலையையும் மனிதர்கள் அனைவரையும் கண் முன் நிற்கும் பிம்பமாக அனுபவிக்கலாம்.
user_9197
★ 5/5 Feb 02, 2026பூமணியின் வெக்கை நம்முன் ஒரு கரிசல் பூமியை விதைத்தது. அதனூடே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலம் அப்பூமியின் சமூகக் கட்டமைப்பு, சாதிப் பிரிவினை, மன ஆழங்களைத் தனித்துவமான நடையில் விவரித்தது.
சிவசாமியும் செலம்பரமும் உலாவிய இந்த மண்ணின் சுமார் 200 ஆண்டுகால வரலாறு தான் அஞ்ஞாடி. வண்ணாக்குடி வரலாற்றில் துவங்கி நாடார்கள், மறவர்கள், கட்டபொம்மன், ஆங்கிலேயர், எட்டையபுர வம்சம், பறையர்கள் ஆகியவர்களின் வாழ்க்கையைப் பாதித்த நிகழ்வுகளின் தொகுப்பு இது.
குறிப்பிட்ட காலத்தில் சாதிச் சமூகக் கட்டமைப்பு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், குடியேற்றங்கள், கலவரங்கள், மதமாற்றங்கள், வட்டார மொழி, பஞ்சம், மீட்பு ஆகியவற்றின் ஆழமான ஆராய்ச்சி முடிவுகளை புனைவினூடே கடத்துகிறார் பூமணி.
ஆயிரம் பக்கங்களைத் தாண்டினாலும் பூமணியின் தனித்துவமான நடை — நிகழ்வுகளை எவ்வித மேல்பூச்சுமின்றி உள்ளபடி செய்திகளைப் போல் தந்தாலும், நினைக்கும் உணர்ச்சிகளை அதன் மூலம் கடத்துகிறார். சாகித்திய அகாதமி விருதுக்கு முழுக்க முழுக்கத் தகுதியுள்ள, நம் சமூகத்தின் ஒரு பகுதியின் மிகத் துல்லியமான பெருஞ்சித்திரம் இந்த அஞ்ஞாடி!