Reviews for எனது இந்தியா [Enadhu India]
26 reviews total
user_8931
★ 4/5 Feb 02, 2026உண்மையிலேயே அருமையான புத்தகம். நமக்குத் தெரிந்த வரலாற்றின் அறியப்படாத பக்கங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. வரலாற்றை இவ்வளவு ரசிக்கும்படி எழுதுவது ஒரு கலை — ஆசிரியர் அதை எளிதாகச் செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை மனதாரப் படித்து ரசித்தேன்.
user_8930
★ 4/5 Feb 02, 2026மறைக்கப்பட்ட பல வரலாறுகளை நிகழ்வுகளை வெளிச்சம் கொண்டுவந்த எஸ்.ரா-வின் முயற்சி மற்றும் உழைப்பு பிரமிப்பை வரவைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னும் ஒரு புத்தகம் வர ஆவலாக இருக்கிறோம். கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை படிக்க வேண்டிய புத்தகம்.
user_8929
★ 5/5 Feb 02, 2026வழக்கமான வரலாற்றுப் புத்தகங்களில் காண முடியாத அற்புதமான தகவல்கள் நிறைந்த நூல். வரலாற்றையும், கடந்தகாலப் பாடங்களை நாம் இன்னும் புறக்கணிப்பதையும் ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். மிகவும் ரசித்துப் படித்தேன், இதன் தொடர்ச்சியான "மறைக்கப்பட்ட இந்தியா" படிக்கத் தொடங்கியுள்ளேன்.
குறிப்பு: இந்தப் புத்தகத்தை முடிக்கும்போது "படிக்க வேண்டிய புத்தகங்கள்" பட்டியல் நீண்டுகொண்டே போகும்!
user_8928
★ 5/5 Feb 02, 2026வரலாற்றை நாம் ஏன் அறிய வேண்டும் எனும் கேள்விக்கான விடையொடு தொடங்கும் இந்நூல், பத்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டம் சந்தித்த கொடுமைகளையும் பண்பாட்டுக் கொள்ளைகளையும் காட்டமாகப் பதிவுசெய்கிறது.
காந்தியின் கொலை, கிளைவ்-யேல்-வாரன் ஹேஸ்டிங்ஸ் நடத்திய கொள்ளைகள், செயற்கைப் பஞ்சங்கள், மன்னர்களின் கொடுங்கோன்மை, பழங்குடியோர் அழிப்பு, உப்பு வேலி, மருது சகோதரர்களின் விடுதலை வேட்கை, இந்தியாவிற்கு ஐஸ் வந்த கதை எனப் பல முக்கிய நிகழ்வுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கருப்புப் பக்கங்கள் மட்டுமன்றி, எல்லீசர் பென்னிகுவிக்கு போன்றோர் செய்த நற்செயல்களையும் சிப்கோ போன்ற இயக்கங்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். வரலாற்றைச் சுவைபட அறிய விரும்புவோர் யாவர்க்கும் பரிந்துரைக்கிறேன்.
user_8927
★ 5/5 Feb 02, 2026இந்தியாவைப் புரிந்துகொள்ளவும் இந்திய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் அவசியம் படிக்க வேண்டிய நூல். ஆங்கிலேயர்களின் கொடுமைகள் மற்றும் கொள்ளைகள் பற்றியும், அவர்களுள் மனிதம் நிறைந்த ஒரு சில மனிதர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் மேலும் வாசிக்க நூல் பட்டியல் தரப்பட்டுள்ளது — ஆழமாக அறிய விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமைகிறது.
user_8926
★ 5/5 Feb 02, 2026"எனது இந்தியா" கட்டுரைத் தொகுப்பை மிக முக்கியமான ஒரு நூலாகப் பார்க்கிறேன். நூறு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், ஆதிகாலம் தொடங்கி காலனிய ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் வரை நிகழ்ந்த ஏகப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கட்டுரையில் படரும் வரலாற்றின் வாசம், இன்றளவும் இந்திய சூழலை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் காண்பிக்க முனைகிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியில் உதவிய நூல்கள் பட்டியலையும் சேர்த்துள்ளார் எஸ்.ரா.
என்றும் உதவிகரமாக இருக்கும் இப்புத்தகத்தைக் கைப்பட நூலாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். தமிழ் படிக்கும், வரலாறு ஆர்வமுள்ள அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.
user_8925
★ 5/5 Feb 02, 2026வரலாற்றின் நல்ல அறிமுகம் தரும் புத்தகம். இந்திய வரலாற்றை எளிமையாகவும் சுவாரசியமாகவும் புரிந்துகொள்ள உதவுகிறது.
user_8924
★ 4/5 Feb 02, 2026முழுக்க முழுக்க வரலாறு சார்ந்த தகவல்கள், குறிப்புகள், ஒரு மேலோட்டமான பார்வை. எப்படி வரலாறு பற்றிய நமது கருத்துக்கள் இன்று சில தவறாக இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.
காந்தியைச் சுட்டுக் கொன்றவருக்கும் நீதி விசாரணை முறையே நடந்தது ஜனநாயகம். ஆனால் இன்று சாமானியனுக்கு நீதி மறுக்கப்படுவது அவலம். ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் மொழி அழிந்தது போல இந்தியாவில் பல மொழிகள் அழிந்துவருவது வருந்தத்தக்க ஒன்று.
நீர் மேலாண்மை, நில அளவை, வரிச்சுமை, இரயில்களின் வருகையால் வணிக இனம் அழிந்தது, உப்பின் முக்கியத்துவம், காலனிய ஆட்சி தந்த பஞ்சம், ஊழல், சுரண்டல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் சோக வரலாறு — 100 கட்டுரைகளில் அனைத்தையும் ஒன்று திரட்டிச் சொல்லிவிட இயலாது.
நிச்சயமாக ஒரு தேர்ந்த புத்தகம். வரலாறு எப்படி நமது நிகழ் மற்றும் எதிர்காலத்துக்கான அச்சாணி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
user_8923
★ 5/5 Feb 02, 2026இந்த ஒரு புத்தகம், கிட்டத்தட்ட 50 புத்தகங்களுக்குச் சமம். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கடும் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்செனத் தெரிகிறது. புத்தகம் முழுவதும் புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன. இதை தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.
தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் படிக்கத் தெரியாத இந்தியர்கள், இந்தப் புத்தகம் வாசிக்கவாவது தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
user_8922
★ 5/5 Feb 02, 2026வரலாறு என்பது கடந்தகாலம் அல்ல — நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டன — குறிப்பாக கோபமும் ஆற்றாமையும்.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் வளங்களை எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள், நமது முன்னோர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி படுகொலை செய்தார்கள் என்று படிக்கும்போது அடக்கமுடியாத கோபம் வருகிறது.
பல மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு. நம் வாழ்நாளில் ஒருமுறையாவது படிக்க வேண்டிய புத்தகம்.