Reviews for உலோகம்

24 reviews total

user_8441

★ 1/5 Feb 02, 2026

ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையைத் தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது மனதோடு ஒன்றவில்லை. முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெயமோகன். ஆனால் இக்கதையில் பேசும் அகம் ஜெயமோகனுடையது என்பது முன்னாள் போராளியின் வார்த்தைகளில், குறிப்பாக வரலாறு தொடர்பான கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகிறது. எட்டுப் பத்து வரிகளிலேயே ஆழ்மனத் துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும், மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது — நம்மவர் உணர்வுகளைப் பிரதிபலிக்க நம்மவர்களால் மட்டும் தான் முடியும்.

user_8440

★ 4/5 Feb 02, 2026

சரி எது, தவறு எது, நெறி என்ன என்று சிந்திக்க வைக்கும் நாவல்.

user_8439

★ 4/5 Feb 02, 2026

குண்டு செலுத்தப்பட்ட துப்பாக்கி, சுடப்பட்டவரை நோக்கி எந்த யோசனையும் இன்றி சுடுவது போல, காலம் காலமாகப் போராட்டக் குழுக்கள் தங்கள் ஆணைகளை நிறைவேற்ற எந்தக் கேள்வியும் கேட்காத போராளிகளைத் தயார் செய்கின்றன. இதில் வரும் சாந்தன் ஒரு துப்பாக்கி தான், அவனுள்ளும் ஒரு குண்டு உள்ளது. ஒரு போரில் அவன் குண்டடிப்பட்டு அந்தக் குண்டு இன்றும் அவனுள் இருப்பது ஒரு உருவகமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், அவன் நிஜத்தில் எந்தக் கேள்வியும் கேட்காத, திரும்பிப் பேசாத, சுட வேண்டிய ஒரு துப்பாக்கி தான்.

தன் ஆணையை நிறைவேற்ற இலங்கையிலிருந்து வந்து, இங்கு அகதியாகக் குடியேறி, உளவுத்துறையின் ஒரு எதிர்க் குழுவில் சேர்ந்து, அவன் சேர வேண்டிய இடத்தில் சேர்கிறான். இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை பாகிஸ்தானியக் கடற்படைக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்ததற்காக, இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அவர்களை வலிமையாக்கி, இலங்கையில் உள்நாட்டுப் போர் மூலம் அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிக்கிறது. உளவுத்துறையின் பங்கு புரிந்துகொள்ள முடிகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பினும், முக்கிய பாத்திரங்களை நிஜத்தில் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.

user_8438

★ 4/5 Feb 02, 2026

மெதுவாக நகரும் ஒரு த்ரில்லர் கதை. த்ரில்லரையும் இலக்கிய பாணியில் எழுத முடியும் என்று நிரூபிக்க விரும்பியிருக்கிறார். ஜோர்ஜ், ரெஜினா பாத்திரங்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தின. வைஜெயந்தி குழப்பமான பாத்திரம். த்ரில்லர் என்று எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஜெயமோகனின் எழுத்துப் பாணியோடு பொறுமையாகப் படித்தால் பலன் கிடைக்கும்.