Reviews for உலோகம்

24 reviews total

user_8451

★ 4/5 Feb 02, 2026

ஜெயமோகன் பல நாவல்களும் சிறுகதைகளும் எழுதித்தள்ளும் பிரபல எழுத்தாளர். அவர் படைப்பில் ஒரு நூல் வாசிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்ததுண்டு. இறுதியில் உலோகம் புத்தகத்தில் தொடக்கம்.

அவருடைய புத்தகங்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டு வரும்போது இந்தப் புத்தகம் தன்னை வாசி என்பது போல என்னை இழுத்தது. காரணம், முதலில் தலைப்பும் அட்டைப்படமும், இரண்டாவது கதை ஈழப் பின்னணியில் அமைந்தது, அடுத்தது இது ஒரு த்ரில்லர் கதை.

கதையின் முடிவை முதல் அத்தியாயமே சொல்கிறது. பக்கத்துக்குப் பக்கம் கதைத் திருப்பங்களும் இல்லை. ஆனாலும் கதை மிகவும் விறுவிறுப்பாகச் சோர்வில்லாமல் பக்கங்களைப் புரட்ட வைக்கிறது. இயக்கங்கள், துரோகங்கள், எதைப்பற்றியும் தெரியாமல் கட்டளையை மட்டும் ஏற்றுச் செயல்படுத்தும் அடிமட்டக் கருவிகள் என்பவற்றைக் கருவாகக் கொண்டு அழகாகக் களமாடியிருக்கிறார் ஜெயமோகன்.

user_8450

★ 3/5 Feb 02, 2026

வாசித்து முடித்து நான்கு நாள் ஆகிவிட்டது. த்ரில்லர் தான் என்றாலும் அதில் தனது இலக்கிய நடையையும் இணைத்து எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அது சில நேரங்களில் கதையின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிட்டதாகத் தோன்றுகிறது. வேகம் குறைகிறது கதையில்.

ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால், பழிவாங்குவது தான் நோக்கம், குழந்தைகளை, குடும்பங்களைக் கொலை செய்யமாட்டேன் என்ற பழைய கிளாசிக் ஹீரோ எல்லாம் இல்லை. அவன் ஒரு கொலையாளி, அவனைச் சுற்றியுள்ள கூட்டமும் அத்தனை கேவலமானதே. சினிமாக்களில் வருவது போல நியாயத்துக்காகக் கொல்லும் காட்சிகள் எல்லாம் இல்லை. அவனுக்குப் பணித்ததை அவன் செய்கிறான், அதற்கான நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் வேலை எல்லாம் ஜெயமோகன் செய்யவில்லை.

உளவாளிகளின், கொலையாளிகளின், இயக்கங்களின் மனநிலை, செயல்பாடுகள் குறித்த மிக நுட்பமான விளக்கங்கள் நன்றாக இருக்கின்றன. சூழ்நிலைக் கைதிகள், அவர்களின் நிலை மாற தரும் விலை மட்டமானதாகக் காட்டப்பட்டிருந்தாலும், சில இடங்களில் அது உண்மையாகவே நியாயமானதாகவும் படுகிறது.

user_8449

★ 5/5 Feb 02, 2026

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. நான் ஒரு பணியில் இருப்பது போலவும், இந்த நாவலின் கதாநாயகனாகவே நான் இருப்பது போலவும் உணர்ந்தேன்.

user_8448

★ 2/5 Feb 02, 2026

புரியாத நாவல். த்ரில்லர் கதை என்று ஆரம்பித்தால், மொத்தமுமாக இலக்கிய நடையில் இருக்கிறது. எந்தக் கதாபாத்திரமும் அழுத்தமாக மனதில் பதியவில்லை. பரபரப்பான தருணங்களில் எப்படி ஒரு மனிதன் ஆழ்மனத்தின் ரகசியங்களைப் பற்றி ஆராய்வான் என்று புரியவில்லை. ஆனால் கதை முழுவதும் அதுதான் நடக்கிறது.

user_8447

★ 3/5 Feb 02, 2026

ஒரு சிறுகதையாக எழுதியிருக்க வேண்டிய ஒரு கருவைக் கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நாவலின் பெரும்பகுதியிலும் எதுவுமே நிகழ்வதில்லை. அவர் எடுத்துக்கொண்ட த்ரில்லர் அமைப்புக்கு இது பெரும் குறை. அதனால் அவரது வழமையான பாணியிலும் இல்லாமல், த்ரில்லராகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக வந்திருக்கிறது.

user_8446

★ 2/5 Feb 02, 2026

ஈழப்போர் பின்னணியில் ஒரு மெதுவான த்ரில்லர். இயக்கத்தைச் சேர்ந்த ரகசிய உளவாளி சார்லஸ் என்கிற சாந்தன் இலங்கையிலிருந்து இந்தியா வருகிறான். இயக்கத்துக்குத் துரோகம் செய்த ஒருவரைக் கொல்லச் சொல்லி உத்தரவு வருகிறது. அந்தக் கொலையோடு தான் கதை ஆரம்பிக்கிறது, அதே கொலையோடு தான் முடியவும் செய்கிறது. இடைப்பட்ட அவரது பயணம் தான் இந்தக் கதை.

இயக்கத்தில் இருக்கும்போது நடக்கும் போரில் தொடையில் ஒரு குண்டு ஊடுருவிப்போய் அங்கேயே இருக்கிறது. அந்த உலோகத்தினாலான குண்டைக் குறிப்பிட்டுத்தான் இந்தத் தலைப்பு. கதை மிக மிக மெதுவாக நகர்கிறது. இயக்கத்தின் தகவல் பரிமாற்றங்கள், தோழமை, பணப் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நடுவில் வரும் என்கவுன்டர் காட்சி சூப்பராக இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

user_8445

★ 1/5 Feb 02, 2026

மட்டமான புத்தகம். எந்த ஒரு கதாபாத்திரமும் சரியாகப் புரிபடவில்லை. மதிப்பீடு கொடுக்கக்கூடத் தகுதியற்ற புத்தகம் இது.

user_8444

★ 3/5 Feb 02, 2026

வேகமான த்ரில்லர் என்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இதே வகையில் வரும் புத்தகங்களோடு ஒப்பிடாதீர்கள். இதில் ஜெயமோகனின் இலக்கிய முத்திரை, த்ரில்லர் முத்திரையை விட அதிகமாக இருக்கிறது!

user_8443

★ 3/5 Feb 02, 2026

ஈழத்துப் பின்னணியில் கதைக்களம். வாழ்க்கையில் சரி தவறுக்குக் கோடே இல்லாத ஒரு கதை. கால் இடறி வழுக்கி விழுந்தவர்களெல்லாம் வரலாற்றில் வல்லவர்களாகச் சித்தரிக்கப்படும் அவலநிலை இக்கதையிலும் உண்டு. நாவலின் ஆரம்பம் ஆர்வம் ததும்ப வரவேற்றது, பின்னர் வெற்றுப் பக்கங்களாக மாறிய உணர்வு.

user_8442

★ 3/5 Feb 02, 2026

ஈழப்போர் பின்னணியில் ஒரு திரில்லர். அறம் புத்தகம் வாசித்ததிலிருந்து ஜெயமோகன் அவர்களின் ரசிகனாகிவிட்டேன்.

ஆயுதம் ஏந்திய எந்தவொரு இயக்கமும் துரோகம் செய்தவர்களைக் கொன்றுவிடும். புலிகளுக்குத் துரோகம் செய்துவிட்டு உயிருக்குப் பயந்து உளவுத்துறையில் சரணாகும் ஒருவரைக் கொல்ல வரும் புலிகளின் ரகசிய உளவாளியின் கதை. திரில்லராக இருப்பினும், கதை யதார்த்தத்தை மீறவில்லை. மெதுவாக நகரும் திரில்லர், நல்ல வாசிப்பு.