Reviews for மனிதனும் மர்மங்களும்

27 reviews total

user_8416

★ 4/5 Feb 02, 2026

நிச்சயமாக ஒரு பரபரப்பான வாசிப்பு அனுபவம்! இந்தப் புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது!

user_8415

Feb 02, 2026

ஆச்சரியமும் பரபரப்பும் நிறைந்த புத்தகம் — இது கதை அல்ல, உலகம் முழுவதும் நடந்த உண்மை நிகழ்வுகள். நம்புவதா இல்லையா என்பது உங்கள் தீர்மானம்! ஆவிகளின் நுழைவும் மனித வாழ்வில் அவற்றின் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. படிக்க மிகவும் பரபரப்பாக இருக்கும், ஆனால் தனியாகப் படிக்காதீர்கள்!

user_8414

★ 3/5 Feb 02, 2026

ஆவிகள் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? பொதுவாக இல்லை என்றுதான் சொல்வீர்கள். இந்தப் புத்தகத்தைப் படித்தால் நம்மைச் சுற்றி ஏதோ இருக்கிறது என்று உணர்வீர்கள்.

ஆவிக் கதைகளுடன் தொடங்கி, ஆவிகளின் இருப்பு பற்றிய நம் மனதில் நீண்டநாள் இருக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது. பின்னர் வேற்றுக்கிரகவாசிகள், கரண்டி வளைக்கும் சக்தி, மனிதர்களின் பறக்கும் திறன் போன்ற சிறப்பு சக்திகள் பெற்ற மனிதர்கள் பற்றியும் பேசுகிறது.

இறுதியில் மாயாஜால இயற்கை நிகழ்வுகள் பற்றியும் விளக்குகிறது. ஆவிகள், வேற்றுக்கிரகவாசிகள், அதிமானுட சக்திகள், இயற்கையின் மர்மங்கள் பற்றி ஒரு வித்தியாசமான பார்வை பெற இது அருமையான புத்தகம்.

user_8413

★ 5/5 Feb 02, 2026

ஒரு தூள் உப்பில் இருக்கும் மர்மத்தில் துவங்கி ஆவிகள், டெலிபதி, வேற்றுக்கிரகவாசிகள், முன்னறிவு, நூறாவது குரங்கு நிகழ்வு என்று மதன் இந்தப் புத்தகத்தில் கூறியுள்ள அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

பல விடை கூற முடியாத அல்லது அறிவியல் உலகத்தால் நிரூபிக்க முடியாத பல உண்மைச் சம்பவங்கள் படிக்கப் புதியதாக இருந்தது.

கென்னடி மரணம், ஆப்ரஹாம் லிங்கன் மரணமும் முன்னரே கனவில் வந்ததும், டைட்டானிக் மூழ்குவது நூறு வருடம் முன்னரே புத்தகத்தில் வந்ததும் படிக்கும்போது சிலிர்ப்பு உண்டாகிறது.

இவ்வளவு தகவலையும் சேகரித்து அதைச் சிறிது நகைச்சுவையுடன் புரியும்படி எழுதியிருக்கும் மதனின் உழைப்பிற்கு ஐந்து நட்சத்திரங்கள்.

user_8410

★ 1/5 Feb 02, 2026

பல்வேறு ஆங்கில நூல்களைப் படித்துவிட்டு அதில் உள்ள சம்பவங்களை அப்படியே எழுதியிருக்கிறார். எந்த ஒரு சம்பவத்திற்கும் ஆதாரம் கிடையாது. யாரோ, என்றைக்கோ தனக்கு நேர்ந்ததாகச் சொல்லும் அமானுஷ்ய நிகழ்வுகள் உண்மையென்றால் நம் ஊரிலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்வார்கள்.

நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னும் ஏதோ ஒரு காரண காரியம் இருக்கும். மதன் அமானுஷ்யத்தை நம்புகிறாரா அல்லது மறுக்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்தவே இல்லை. எந்த நிலைப்பாட்டிலும் இல்லாமல், மர்மம் என்றாலே மனிதனுக்குள் ஒருவித ஆர்வமிகுதி ஏற்படும் என்ற உளவியலைப் புரிந்துகொண்டு வணிக நோக்கத்திற்காக மட்டுமே இந்நூல் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

user_8409

★ 5/5 Feb 02, 2026

மதனின் மற்றொரு அற்புதமான தொகுப்பு! ஆவிகள், டெலிபதி, முன்னறிவு, நூறாவது குரங்கு நிகழ்வு, வேற்றுக்கிரகவாசிகள் என்று படிக்கும்போது வேறொரு உலகத்திலேயே இருந்தேன். மதனின் புத்தகங்கள் அனைத்தும் படிக்கவும் வாங்கவும் மிகவும் தகுதியானவை!

user_8408

★ 5/5 Feb 02, 2026

இதயம் பலவீனமானவர்கள், என்னைப் போல கற்பனை சக்தி அதிகம் உள்ளவர்கள் தவிர்க்கவும். குறைந்தபட்சம் இரவில் படிப்பதைத் தவிர்க்கவும்!

ஒரு தூள் உப்பில் துவங்கி மனித சிந்தனைக்கு அப்பால் இருக்கும் ரகசியங்கள் வரை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் மதன். ஆவி, பேய்... நடுநிசியில் படித்து நரம்பெல்லாம் சில்லிட்டுப் போனது. சைக்கான்களுக்கு மிக எளிய அறிமுகம் தருகிறார். உலகையே வியாபிக்கிற ஆழ்மனம், உடல்சார் வெளி, உணர்வு வெளி, நூறாவது குரங்கு நிகழ்வு, மனோதத்துவ சை, அதீத புலனுணர்வு, சில்லறை மழை, நமக்கு இணையாக இன்னொரு உலகம் என்று தினுசு தினுசாகக் கூறுகிறார் அவருக்கே உரித்தான நகைச்சுவை நடையில்!

மோகினி பிசாசு, குட்டிச் சாத்தான் போன்றவற்றை விரட்ட இந்தியாவில் வேப்பிலையும் ரம்யா கிருஷ்ணன் படங்களும் உதவுகின்றன என்று எழுதும் ஒவ்வொரு வாக்கியத்திலும் சுவாரசியம் கூட்டுகிறார் மதன்.