Reviews for பண்பாட்டு அசைவுகள்

30 reviews total

user_8373

★ 5/5 Feb 02, 2026

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு முக்கியமான பரிமாணத்தைப் புரிந்துகொள்ளக் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_8372

★ 5/5 Feb 02, 2026

நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் நிறைய சடங்கு சம்பிரதாயங்களை, மதங்களை, கடவுள்களை, உணவை, உறவுகளைப் பற்றிப் பேசும் மிக அற்புதமான புத்தகம். நிறையக் கள ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஒரு அற்புதமான தகவல் களஞ்சியம்.

user_8371

★ 5/5 Feb 02, 2026

அறியப்படாத தமிழகத்தின் தொடர்ச்சி இது. அறியப்படாத தமிழகம் வாங்க நினைப்பவர்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள் — அதில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் இதிலும் இருக்கும். அதனுடன் சேர்த்து மேலும் 80 பக்கக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

user_8370

★ 4/5 Feb 02, 2026

தொ.பரமசிவன் அவர் வாழ்ந்த காலத்தில் இவ்வளவு பெரிய ஆய்வாளர் என்று எனக்குத் தெரியாது. பண்பாட்டு அசைவுகள் உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள், மதம் போன்ற தினசரி நம்மோடு தொடர்புடைய சாதாரண விடயங்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பற்றிப் பேசுகிறது.

சைவம், வைணவம் போன்ற நிறுவன மயமாக்கப்பட்ட பெரிய மதங்கள் தமிழகத்தில் நாட்டார் வழக்கங்களுக்கு ஏற்ப எவ்வாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்பதைச் சொல்கிறது. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களுக்குப் பின்னால் உள்ள வரலாறும் படிக்க மிக ஆர்வமாக இருக்கிறது. தமிழினத்தின் பண்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.

user_8369

★ 5/5 Feb 02, 2026

பேராசிரியர் ஞானசம்பந்தன் மூலம் இந்தப் புத்தகத்தைப் பற்றி அறிந்தேன். தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பண்புகள், வாழ்க்கை முறை, மதம், பழக்கவழக்கங்கள், சாதிய அமைப்பு ஆகியவற்றைப் பற்றி அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

ஆசிரியர் நன்கு ஆராய்ந்த உண்மைகளுடனும் சான்றுகளுடனும் கல்வித் தரத்தில் இதை எழுதியுள்ளார். எந்த முன்முடிவும் இல்லாமல் படித்தால் இந்தப் புத்தகம் நிச்சயம் வியப்பளிக்கும். மிகவும் பரிந்துரைக்கிறேன்.

user_8368

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் சரியான நேரத்தில் வாசிக்கப்பட்டுப் பரவலாக்கப்பட்டிருந்தால், இன்று வடக்கு சாமியார்களுக்கு வியாழக்கிழமை சுண்டல் மாலை போட வேண்டிய நிலை தமிழர்களுக்கு வந்திருக்காது.

மரபு தெரியாதவன் மூட நம்பிக்கை என்றான். மூட நம்பிக்கை என்றவன் பின்பற்றத் தவறினான். நாம் தொலைத்த மரபின் எச்சங்களைத் தன் கட்டுரைகள் மூலம் தேடித் தருகிறார் பெரிய வாத்தியார் தொ.பரமசிவன் அவர்கள்.

இந்தப் புத்தகத்தில் நான் வியந்தது தொ.ப அவர்களின் மேற்கோள்கள் — சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், ஆய்வு நூல்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. தமிழர்கள் படித்து நம் மரபுகளை மீட்டுக்கொள்வது அவசியம்.

user_8367

★ 5/5 Feb 02, 2026

இன்றைய அரசும் அதிகாரமும் நம் பன்முகத்தன்மையைச் சிதைத்து ஒரே நாடு, ஒரே மரபு, ஒரே கலாச்சாரம் என்று நிறுவ முயலும்போது, சரியான நேரத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்த மன நிறைவு.

பௌத்தம், சமணம் தமிழுக்கு ஆற்றிய பங்கு, சைவமும் வைணவமும் தன்னை நிலைநிறுத்த நாட்டார் மரபிலிடம் வாங்கிய கடன், நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் சின்னச் சின்னக் காரியங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் பண்பாட்டு எச்சங்கள், மதுரை அழகர் வரலாறு என ஆசிரியர் தெறிக்கவிடுகிறார்.

விரும்பி, விரைவாகப் படித்து முடித்தேன். தொ.ப-வின் மற்ற புத்தகங்களையும் தேட ஆரம்பித்துவிட்டேன். தமிழனாய் இருந்தால் படியுங்கள் என்ற அடைமொழிக்கு ஏற்ற புத்தகம்.

user_8366

★ 4/5 Feb 02, 2026

பொதுவாகவே கட்டுரை நூல்கள் என்றாலே தகவல்கள் நிறைந்து வழியும், மிகவும் ருசிக்கும்படி இருக்கும். அதிலும் இது ஆராய்ச்சி செய்து நிறுவப்பட்ட நூல்.

தமிழ் மொழியைப் பற்றியும், உணவு, ஆடை, நம்பிக்கை, பழக்கங்கள் எனப் பலவற்றைப் பற்றியும் தொகுத்து வழங்கியுள்ளார். நாம் யார் என்று அடிக்கடி யோசிப்பது உண்டு — இப்பன்முகச் சூழலில் இச்சமுதாய வளர்ப்பில் நாம் யார் என்ற சிந்தனை எழுகையில் அது உண்மையில் ஒரு விழிப்புதான்.

பௌத்தம், சமணம் எனத் தொடங்கிச் சிறுதெய்வம், பெருந்தெய்வம் என வீழ்ச்சியும் கைப்பற்றலையும் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். பார்ப்பான் வேறு, பார்ப்பார் வேறு எனத் தமிழில் உள்ள பல சொற்களின் அர்த்தங்களை நிறுவுவது சுவை மிகுந்தது. நல்ல புத்தகம் படித்த மனநிறைவுடன் — கட்டாயம் படியுங்கள்!

user_8365

★ 5/5 Feb 02, 2026

தொ.பரமசிவன் அவர்கள் 1995-இல் எழுதிய தெய்வங்களும் சமூக மரபுகளும் மற்றும் 1997-இல் எழுதிய அறியப்படாத தமிழகம் எனும் இரு நூல்களையும் இணைத்து பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை வெளியிட்டார்.

நம் தமிழ்ச் சமூகம் எவ்வாறு தோன்றிப் பரிணமித்து, பின் சமயங்களாகவும் மதங்களாகவும் வளர்ச்சிப் பெற்று வந்தது என்பதை வியக்கும்படியாக எழுதியுள்ளார்.

அறியப்படாத தமிழகம் பகுதியில் உள்ள கட்டுரைகள், நம் அன்றாட வாழ்வில் எளிதாகக் கடந்து போகும் பொருள்களும் நிகழ்வுகளும் எப்படி ஒரு சமூகத்தின் வரலாற்றையே தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்பதை விளங்கச்செய்கிறார்.

தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற பிரிவு கடவுள், மதம், சமயம் ஆகியவை எவ்வாறு உருப்பெற்றன என்பதை விளக்குகிறது. அழகர்கோயில் பற்றிய சாதிய வரலாறும், தமிழகத்தில் சமணம், பௌத்தம் ஆகியவற்றின் வீழ்ச்சியும், சைவம், வைணவம் போன்ற பெருஞ்சமயங்களின் வளர்ச்சி பற்றிய அரிய வரலாறும் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன.

user_8364

★ 4/5 Feb 02, 2026

சிலரின் பதிவுகளின் மூலம் ஆசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் அறிமுகமானார். அந்தச் சிறு கட்டுரை படித்தவுடனேயே அவரின் நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டியது.

தெய்வங்களும் சமூக மரபுகளும் மற்றும் அறியப்படாத தமிழகம் ஆகிய நூல்களின் ஒரு தொகுப்பாகவே பண்பாட்டு அசைவுகள் என்னும் இந்நூல்.

உண்மையான தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் பலருக்குத் தெரிவதில்லை, தெரிந்துகொள்ள முயல்வதுமில்லை. ஆனால் இதுபோன்ற ஆய்வு நூல்களைப் படிக்கும்போது காலப்போக்கில் பல படையெடுப்புகளாலும் பல இனங்களின் குடியேற்றத்தாலும் நாம் எவ்வாறெல்லாம் மாற்றப்பட்டுள்ளோம் என்பதைச் சாட்சியுடன் தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழர்களின் மொழி வளமை, வாழ்வுமுறை, வீட்டு அமைப்பு, உறவுமுறை, சிறுதெய்வங்கள் வழிபாடு, பேச்சு வழக்கு, கோயில் அமைப்பு எனப் பலவற்றையும் இந்நூல் தகுந்த ஆய்வு முடிவுகளுடனும் சான்றுகளுடனும் முன்வைக்கிறது. அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் இது.