Reviews for ரப்பர்
26 reviews total
user_8013
★ 3/5 Feb 02, 2026இரண்டு தலைமுறையாக நடக்கும் சமுதாய வீழ்ச்சி, எழுச்சி, சாதிய பாகுபாடு, மக்களின் வெறுப்பு இவை அனைத்தையும் ரப்பர் வளர்ச்சியோடு ஒப்பிட்டு கன்னியாகுமரி-கேரளா வட்டார நடையில் வரும் non-linear கதை.
முதல் நாவல் என்பதால் சில காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் இளம் வயதிலேயே இப்படி ஒரு கதையை யோசித்து எழுதியது மிக அருமை.
நிறைய முடிச்சுக்களை விவரிக்காமல் வாசகர் கற்பனைக்கு விட்டிருக்கிறார். பெரும்பாலான கதாபாத்திரங்கள் வெறுப்பும் அதிகாரமும் கொண்டவர்களாக சொல்லப்பட்டிருப்பதால் எந்த ஒரு பாத்திரமும் மனதில் நிற்காத உணர்வு. பிரான்ஸிஸின் மனமாற்றம் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது.
user_8012
★ 3/5 Feb 02, 2026ரப்பர் நாவல் மூன்று தலைமுறைகளின் கதையை பல கதாபாத்திரங்களின் பார்வையில் சொல்கிறது. 90களின் பொருளாதார மாற்ற காலத்தில் நிகழும் இக்கதை, சாகும் தருவாயில் உள்ள குடும்பத் தலைவர், குடும்பத்தின் இருள் பக்கங்கள், மாறிவரும் சமூக நிலப்பரப்பு ஆகியவற்றை non-linear கதையாடலில் வழங்குகிறது.
இது ஜெயமோகனின் முதல் நாவல். ரப்பர் மரங்கள் அருகில் வேறு தாவரங்களை வளர விடாதது போல, இக்கதையின் பாத்திரங்களும் அருகில் யாரையும் நெருங்க விடாத இருள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
சில அத்தியாயங்கள் அற்புதமானவை - தெரேசாவின் காதல் உளவியல், பொன்னுமணி பெருவட்டர் ஒரு அழகான புல்வெளியை தீ வைத்து அழிக்கும் காட்சி, குழந்தைகள் மட்டும் இடம்பெறும் ஆனால் மனித வன்மத்தால் எரியும் அத்தியாயம் என மனதில் நிற்கின்றன.
ஆனால் நாவலின் சுருக்கமான வடிவம் பல தலைமுறைகளின் வாழ்க்கையை சுருக்கமான காட்சிகளாக அடக்குவதால், பாத்திரங்களோடு இணைவது கடினமாகிறது. இறுதியில் பிரான்ஸிஸின் ஆன்மீக மாற்றம் நம்பகத்தன்மையற்றதாக உணர்கிறது. இருப்பினும், இது ஒரு அற்புதமான முதல் நாவல்.
user_8011
★ 4/5 Feb 02, 2026பெருவட்டர் குடும்பம் ஊரில் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களுள் ஒன்று. ரப்பர் தோட்டத்தில் முதலீடு செய்துள்ள இவர்கள், வெளிநாட்டு கம்பெனியிடம் போட்ட ஒப்பந்தம், ரப்பர் போர்டின் சட்டம், மாநில ஆட்சி மாற்றம் என எல்லாம் ஒன்று சேர்ந்து ரப்பர் தோட்டத்தை ஆட்டம் காண்பித்தது.
கண்டன்காணியின் ஸ்பரிசம் பட்டவுடன் பெருவட்டர் மனம் மகிழ்ந்து அழுதே விட்டார். நமது நிலப்பரப்பில் விளையாத ரப்பர் மரங்களை நமது மண்ணில் நட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதையும், அதனால் நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்நாவல் அலசுகிறது.
சில இடங்களில் மலையாள மொழியை அப்படியே தமிழில் கொடுத்திருப்பதால் படிக்க சற்று சிரமமாக இருந்தது.
user_8010
★ 2/5 Feb 02, 2026ஜெயமோகனின் முதல் நாவலான இது, ஒருவித மாய வசீகரச் சூழலில், காட்டின் நடுவே, செல்வச்செழிப்பான பங்களாவில் சாகக்கிடக்கும் ஒரு முதியவருடன் அட்டகாசமான சூழல் வர்ணனையோடு தொடங்குகிறது. இக்கதையின் மிகப்பெரும் பலமே அதன் இட வர்ணனைகள் தான்.
வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து ஒருவன் எழுந்து நிறுவும் சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் non-linear ஆக, ரப்பரின் வரலாற்றுடன் பிணைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பல புதிய பாத்திரங்கள் நடுநடுவே புகுத்தப்பட்டு பின் அந்தரத்தில் தொங்க விடுவதால் முழுமை பெறாத நிலையில் அடங்கி விடுகிறது.
ரசிக்கத் தடைகள் - வட்டார வழக்கு புரிவதற்கு கடினமாக இருப்பது, மாந்தர்கள் அனைவரும் வெறுக்கத்தகுந்தவர்களாக இருப்பது, இறுதியில் பிரான்ஸிஸின் திடீர் மனமாற்றம் நம்பகத்தன்மையற்றது.
இக்குறைகளை பொருட்படுத்தவில்லையெனில், எழுத்தின் கவர்ச்சிக்காகவும், அவ்வெழுத்து உருவாக்கும் வசீகர உலகிற்காகவும் தாராளமாகப் படிக்கலாம்.
user_8009
★ 1/5 Feb 02, 2026இது ஜெயமோகனின் முதல் நாவல் என்பதால், கதையாடலில் உள்ள பலவீனம் வெளிப்படையாக தெரிகிறது. அவர் அதிகமாக எழுதினாலும் சில படைப்புகள் மட்டுமே நினைவில் நிற்கும் வகையில் இருக்கின்றன; பல படைப்புகள் முற்றிலும் பலவீனமாகவே இருக்கின்றன.
அவரது பல படைப்புகளிலும், ஒரு குறிப்பிட்ட சாதியை எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கும் பழக்கம் உள்ளது. இது அவருடைய சாதி சார்ந்த மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையிலும் சாதிப் பெயர்களை குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை; ஆனால் அவர் அதை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அரம் தொகுப்பில் உள்ள வனங்கான் கதையிலும் இதே அணுகுமுறையை பயன்படுத்தியுள்ளார்.
user_8008
★ 4/5 Feb 02, 2026"ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை" எனும் பைபிளின் வரியை ரப்பர் நாவலில் முன்னுரையிலேயே படித்தாலும் பிரான்ஸிஸைப் போல் நாவலின் இறுதியிலேயே அதன் அர்த்தங்கள் தடை விலகினார் போல மனதில் இறங்கி சுழல்கிறது.
பொன்னுமணி பெருவட்டரும், பிரான்சிஸும் ஒரு கால மாற்றத்தின் இரு கண்ணிகள். நாயர்களின் வீழ்ச்சியும், கிறிஸ்துவ நாடார்களின் எழுச்சியும் அதில் பெரும் பங்கு வகிக்கும் ரப்பர் பண பயிர் தோட்டங்களின் வளர்ச்சியையும் சுற்றி கதை சுழல்கிறது.
பழக்கவழக்கங்களிலும், அதிகாரத்திலும், பண்பாடுகளிலுமிருந்து காலத்திற்கேற்ப மாற முடியாத தலைமுறைகளும் அவர்களின் எச்சங்களுமே அந்த தலைமுறையின் வீழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்.
அப்புக்குட்டி நாயரின் தந்தை தானமாக கொடுக்கும் நிலமே, உழைப்புக்கு அஞ்சாத பொன்னுமணி பெருவட்டரின் எழுச்சிக்கு ஏதுவாகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பெரிய பெருவட்டரின் வாழ்க்கை இருத்தலின் போராட்டமாகவே நகர்கிறது.
வசதி வந்த பிறகு அந்தஸ்த்தை நிலை நிறுத்திக்கொள்ள மதம் மாறுகிறார். மகன் செல்லையா சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்ற முடியாமல் கடனில் அமிழ்கிறார். தெரேசா செல்வத்திற்காகவே செல்லையாவை திருமணம் செய்து கொண்டவள்.
பிரான்ஸிஸ் தாயின் நடத்தையால் மன அலைக்கழிப்புக்கு ஆளாகிறான். தாத்தாவின் இறுதிகால நகர்வும், தந்தையின் இயலாமையும் அவனை மாற்றத்தை நோக்கி நகர வைக்கிறது.
கண்டன்காணியின் வருகை பெருவட்டரை மட்டுமல்ல நம்மையும் பிரட்டி போடுகிறது. செல்வங்களுக்கும் பாவங்களுக்கும் சேராத அப்பழுக்கற்றவர் என்று கொள்ளுபேரன் லாரன்ஸ் கருதும் கண்டன்காணி, சமுதாயத்தின் ஒரு முனையாக நிற்கிறார்.
இருத்தலின் போராட்டமே மனித வாழ்க்கை என்பதை பிரான்சிஸின் மனதில் விதைத்தே செல்கிறார் பெருவட்டர்..."ஆகாயத்தில் ஒரு பறவை."