Reviews for கிடை
30 reviews total
user_7728
★ 5/5 Feb 02, 2026சிறப்பான படைப்பு. கரிசலில் கிடைகளூடே ஒரு சுற்று...
கதாபாத்திரங்களில் ஆளுமைகளும் நிதர்சனமான எதார்த்த வாழ்க்கையையும் இலக்கியமாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர்.
செம்படைப்பாக்க சாகாசங்கள் தேவையில்லை... ஒரு சில பக்கங்களினாலேயே உன்னதத்தை படைக்க முடியும் என்பதற்கான சான்று இதுவே.
user_7727
★ 4/5 Feb 02, 2026மீண்டும் கரிசல் காட்டிற்குள் ஒரு பயணம். இம்முறை அங்கிருக்கும் சாதிய கண்ணோட்டத்தை நமக்கு எடுத்துக் கூறுகிறார்... ஆனால் ஒரு மேல் சாதி பார்வையிலிருந்து.
user_7726
★ 4/5 Feb 02, 2026செவனி - காதல் கதையின் முக்கியமான உணர்வுப்பூர்வமான அங்கம். சாதியங்களால் பிரிக்கப்பட்ட காதல், கிராமிய ஒழுக்க விதிகளால் துடிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் என்ற அவர்களின் கதையில் மறைந்திருக்கும் நம்பிக்கை, பயம், ஏமாற்றம்.
மொத்தத்தில், கிராமிய வாழ்க்கையின் இருண்ட ஓரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நாவல், மனதில் நீங்காத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமானதாகத் தோன்றும் கிராமிய இலக்கியத்திற்கே ஒரு முக்கியமான அடையாளமாக இந்தக் கதை திகழ்கிறது.
user_7725
★ 5/5 Feb 02, 2026ஆடுகள் மற்றும் அதனை மேய்பவர்களைப் பற்றி தெளிவான விளக்கம். ஆடுகள் மேய்ப்பவர்களிடையான காதல், அவர்களின் வாழ்வு, ஜாதியின் வெளிப்பாடு, எல்லப்பன் செவனியின் பிரிவு.
திம்மய நாயக்கர் ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை பதம் பார்க்கிறார்: ஒன்று ராக்கம்மாவுக்கு நஞ்சை அழிவுக்கான நஷ்ட ஈடு, இரண்டு பொன்னுசாமியின் களவுக்கு தண்டனை, மூன்று எல்லப்பன் கல்யாணம்.
கீதாரி, துண்டங்கள், பாங்கு, அழிம்பு போன்ற பல புதிய வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களையும் தெரிந்து கொண்டேன். சுமார் 57 வகையான ஆடுகளை கூப்பிடும் பெயர்களையும் அறிந்தேன்.
user_7724
★ 4/5 Feb 02, 2026கரிசல் மன்னன் கி. ராஜநாராயணன் வெறும் 80 பக்கங்களில் ஒரு எளிய கதையை அழகாகச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கிராமப்புற ஆடுமாடுகளின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம், அவர்களின் நம்பிக்கைகள், தப்பெண்ணங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் முக்கியமாக ஒரு சம்பவம் ஆணையும் பெண்ணையும் எப்படி பாதிக்கிறது என்பதே இச்சிறுநாவலின் அடிநாதமாக நான் கருதுகிறேன்.
கிடை ஆடுகளின் கதை ஒருபக்கமிருக்க, எல்லப்பனின் கல்யாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் தான் சமூகத்தின் உக்கிரமான முகமாக இருப்பதாய் கிழித்து காட்டி இருக்கிறார் கி.ரா. அவர்களின் பாலினம், சாதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் அவர்களை வித்தியாசமாக நடத்துகிறது என்பதை படிக்கும் பொழுது நெஞ்சம் சற்று கனமாகவே இருக்கிறது.
user_7723
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்! சமூகம் குறித்த ஒரு சிக்கலான செய்தியை சொல்ல ஒரு புத்தகத்திற்கு அதிக கோட்பாடுகளோ பக்கங்களோ தேவையில்லை என்பதை நிரூபிக்கும் அரிய படைப்புகளில் இதுவும் ஒன்று.
ஓர் கிடை செய்த அழிமானத்தை கருவாகக் கொண்ட கதையாயினும், ஆசிரியர் வெகு அழகாக அக்கிராமத்தின் வாழ்வியலையும் சமூக நீதிகளையும் உள்ளே கோர்த்திருக்கிறார்.
எல்லப்பனுக்கும் செவனிக்கும் சமூகம் தரும் தீவிர வேறுபாடு கதையின் முன்னிலையாக இருந்தாலும், கதையின் இதர அம்சங்களே என்னை வெகுவாகக் கவர்ந்தன. கிடையில் நடக்கும் அதிகாலைச் சம்பவங்கள், ஆடுகளைக் கண்டறியும் விதங்கள், பாங்கு, கிடை மறித்திருக்கிறது என்பதன் முக்கியத்துவம், ஊருக்குக் கட்டுப்படும் கிடைக்காரர்கள் - இவை அனைத்தும் நகரத்தில் வளர்ந்த எனக்குப் புதிதாகவும் மனதிற்குச் சரியாகவும் பட்டன.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆசிரியர் சுவைமிக விவரித்த விதம் மேலும் என்னை ஈர்த்தது! திம்மய நாயக்கரின் துப்பறியும் படலம், உண்மை தெரிந்த போதும் கூட்டத்தில் உடைக்காமல் ராமசுப்பா நாயக்கரிடம் தனித்து சொன்ன இங்கிதம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கரிசல் மன்னனின் படைப்புகளில் இது என் முதல் வாசிப்பு. அவரின் எழுத்து நடையும் சுவாரசியமான கிராமிய விஷயங்களும் அவரின் இதர நூல்களை வாசிக்கத் தூண்டுகின்றன. இன்னும் நீளமாக இருக்கலாமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய புத்தகம். கட்டாயம் வாசிக்க வேண்டியது.
user_7722
★ 5/5 Feb 02, 2026மேலோட்டமாக பார்ப்பதற்கு ஆடுகளையும் அதனை மேய்க்கும் ஆட்களையும் பற்றிய கதையாகத் தெரியலாம். ஆனால் கீழ்ச்சாதிக்கும் மேல் சாதிக்கும் இடையே பலிக்கிடாவாக ஆக்கப்படுவோர்களின் பிரதிபலிப்பே "கிடை".
user_7721
★ 5/5 Feb 02, 2026கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் அற்புதமான படைப்புகளுள் இதுவும் ஒன்று. "கிடை" என்னும் இந்தப் புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன.
கிடை என்னும் கதையில், ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்பவரின் வாழ்க்கையை அழகாக விவரித்துள்ளார். அடுத்த கதை "கரிசல்காட்டில் ஒரு சம்சாரி" - தகரவீடு துரைசாமி நாயக்கரைப் பற்றியது. ஊருக்கு கடன் கொடுத்து வியாபாரம் செய்து வருபவர்.
சில வார்த்தைகள் கடினமாக இருந்தாலும், இரு கதைகளும் மிகவும் சுவாரசியமானதாக இருந்தன.
user_7720
★ 4/5 Feb 02, 2026கி.ராவின் குறுநாவல் "கிடை" 64 பக்கங்கள் கொண்ட அருமையான படைப்பு. ஆடுகள் மற்றும் அவற்றை பராமரிக்கும் மக்களின் வாழ்க்கையை விரிவாக சித்தரிக்கிறது.
கிடை பின்னர் "ஒருத்தி" என்ற தமிழ் திரைப்படமாக எடுக்கப்பட்டு, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
கி.ரா கூறுவது போல், "கிடை என்பது ஒரு தனி ராஜ்யம். அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் கீதாரி." மந்தை காட்டுக்கு மேய்ச்சலுக்கு செல்லும்போது, முழு சமூகமும் அவர்களுடன் இருக்கிறது. அது தனக்கென்ற விதிமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் நிறைந்த ஒரு தனி உலகம்.
ஆர்.கே. நாராயணனின் மால்குடி போலவே, கி.ரா தன் கதைகளில் பல கற்பனையான கிராமங்களை படைத்திருக்கிறார். செம்மறி ஆடுகளின் கணக்கற்ற நிறமாற்றங்களுக்கு தகுந்தபடி ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு நிறப்பெயர் உண்டு என்பது வியக்கத்தக்கது.
user_7719
★ 5/5 Feb 02, 2026கிடை நாவல் வாசிப்பின் மூலம் கி.ரா ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. 60 பக்கம் கொண்ட குறுநாவலில் கிடை பற்றியும் கிராமத்தின் வாழ்வியல் பற்றியும் சமூகத்தின் ஏற்ற தாழ்வு முரண்பாடுகளையும் வெளிக்காட்டி சொல்லியிருப்பது ஆச்சரியம்!
ராக்கம்மாள் என்ற பெண் கிடை மேய்ச்சலை மறித்து ஊரின் முன் தன் பருத்தி காடு அழிவு பற்றி முறையிடுகிறாள். ஊர் கூடி பருத்தி காடு அழிவுக்கு காரணமான நபரை கண்டுபிடிக்க திம்மய நாய்க்கர் தலைமையில் குழு அமைக்கிறது. பருத்தி காடு அழிவுக்கு காரணமான நபரை கண்டுபிடிப்பது தான் கதை என்று வாசிக்க தொடங்கினால் நமக்கு ஏமாற்றமே.
எல்லப்பன் செவனியின் காதலை பற்றிய கதை. இவர்களின் காதலை அறிந்த ஊர் பெரியவர்கள் எவ்வாறு அந்த காதலை முறித்தனர், குற்றத்தை செய்த இருவருள் ஒருவருக்கு கல்யாணம் எனும் விருந்தும் மற்றொருவருக்கு சாட்டையடி எனும் தண்டனையும் கிடைப்பது நம் சமூகத்தின் ஏற்ற தாழ்வு படிநிலையில் உள்ள முரண்பாடுகளை வெளிக்காட்டுகிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு கிடை.