Reviews for வட்டியும் முதலும்

30 reviews total

user_7634

★ 4/5 Feb 02, 2026

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். ராஜுமுருகனின் எழுத்துநடையும் மனிதர்களைப் பற்றிய பார்வையும் மனதைத் தொடுகின்றன.

user_7633

★ 4/5 Feb 02, 2026

மனிதர்களைப் புரிந்துகொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். தினமும் நாம் பார்க்கும் மனிதர்களையும் சில தனித்துவமான கதாபாத்திரங்களையும் அற்புதமாகச் சித்தரிக்கும் புத்தகம்.

user_7632

★ 5/5 Feb 02, 2026

நாம் வாழ்வில் பார்த்த, கேட்ட, அனுபவித்த அனுபவங்களை நூல் ஆசிரியர் தனது பார்வையில் பகிர்ந்துள்ளார். வாழ்க்கை அழகானது — லைஃப் இஸ் பியூட்டிஃபுல்.

user_7631

★ 5/5 Feb 02, 2026

நல்ல புத்தகம். எளிய மனிதர்களின் வாழ்வை அழகாகச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு. படிக்கும்போது வாழ்க்கையின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

user_7630

★ 5/5 Feb 02, 2026

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் பல்வேறு மனிதர்களின், மனித உணர்வுகளின் அழகிய தொகுப்பு. எளிய மனிதர்களின் மீதான பார்வை வேறு கோணத்தில் அமையும் இந்தப் படைப்பு மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

user_7629

★ 5/5 Feb 02, 2026

வட்டியும் முதலுமாக அத்தனை உணர்ச்சிகளையும் அள்ளித் தெளிக்கும் புத்தகம். ஒரு மினி மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம். வரையறைக்கு உட்படாத வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு இது ஒரு இன்ப சுற்றுலா.

நமக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று ஏங்குபவர்கள் அவசியம் கடக்க வேண்டிய களஞ்சியம் இது. தீராத ராஜுமுருகனின் ரசிகனானதை உணர்கிறேன். ஹாசிப் கானின் ஓவியம் ஒவ்வொரு தொடரிலும் உங்களைத் தீண்டாமல் தாண்டாது.

user_7628

★ 5/5 Feb 02, 2026

வாசிப்பை அறிமுகம் செய்துகொண்ட, கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்த காலகட்டத்தில் வாசித்ததாலோ என்னவோ இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் மனதைத் தொட்டுச் சென்றது.

பத்து வருடங்கள் கடந்திருக்கும். இன்றும் முதல் கட்டுரையான மானுடத்தின் பொதுமொழி பசி வாசிக்கும்போது மனம் கனத்துவிடுவதைத் தடுக்க இயலவில்லை. ஆசிரியர் சொல்வது எத்தனை உண்மை — பசியைத் தீர்ப்பதென்னவோ ஒரு கனி தான், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். வாழ்வும் அப்படித்தான்!

user_7627

★ 5/5 Feb 02, 2026

ராஜுமுருகனை இயக்குநராக மட்டுமே அறிந்த எனக்கு, ஒரு எழுத்தாளராக அவரை எடுத்துக்காட்டிய நூல் வட்டியும் முதலும்.

பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாகக் கடந்து செல்லும் ஒரு இசைபோல உணர்த்துகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் இசை, கடந்தகால நினைவுகள், அரசியல், மனிதம் போன்றவற்றைத் தொட்டுச் செல்லும் விதம் நமக்கும் புத்தகத்திற்கும் இடையே ஒரு உரையாடலாகவே மாறிவிடுகிறது.

20 வயதிற்குப் பிறகு நாம் பெற்ற இன்பங்களை வட்டியும் முதலுமாக வசூல் செய்கிறது மீதி வாழ்க்கை!

user_7626

★ 5/5 Feb 02, 2026

நான் அதிக நாட்கள் எடுத்துப் படித்த புத்தகம். பல வாழ்வியல் அனுபவங்களை மிக மென்மையாக மயிலிறகு போல் வருடி மனதிற்குள் இட்டுச் சென்றது.

30 வயதைக் கடந்தவரின் எல்லா அனுபவங்களையும் பேசுகிறது. எந்த அத்தியாயத்தை எந்த நாளில் படித்தாலும் வாழ்க்கையைப் புதிதாகப் பார்க்க வைக்கும், நம்பிக்கை தரும்.

தமிழில் படித்ததாலோ என்னவோ உணர்ச்சிப் பிழம்பாகி ஏதோ செய்தது. குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும், நகரத்தில் வளர்ந்ததில் என்ன இழந்தோம் என்பதை உணர்த்தும், வெவ்வேறு வகையான மனிதர்கள் நமக்குள் விட்டுச்செல்லும் நினைவுகளையும் பாடங்களையும் புரிய வைக்கும் புத்தகம்.

ஒவ்வொரு அத்தியாயமும் அமைதியையும் நிம்மதியையும் தரும். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம்.

user_7625

★ 3/5 Feb 02, 2026

ஆனந்தவிகடனில் வாரவாரம் வெளிவந்து பலரின் மனதைக் கவர்ந்த அத்தியாயங்களின் தொகுப்பு இது. தோழர் மூலம் அறிமுகமான புத்தகம்.

பேச்சுவழக்கு நடையில் எழுதப்பட்ட இப்புத்தகம் சுயசரிதை போலத் தோன்றினாலும், வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்வதாகவும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. சில இடங்களில் அலுப்பு தட்டலாம், சில நிகழ்வுகள் மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம்.

கிராமம் நகரம் இடையே பயணிக்கும் கதைகள், எண்ணற்ற கதாபாத்திரங்கள், மதுரை வட்டார வழக்கின் தனிச்சிறப்பு என பல அம்சங்கள் கொண்ட புத்தகம். படித்து முடித்தவுடன் சிறுவயது முதல் பார்த்த, சந்தித்த, மறந்துபோன மனிதர்கள் கண்முன்னே வந்து செல்வர்.

வாழ்க்கை மிக அழகானது — நாம் வாழ்ந்து பார்ப்போம்!