Reviews for குறத்தி முடுக்கு

30 reviews total

user_7594

★ 4/5 Feb 02, 2026

1963-ல் எழுதப்பட்ட இக்குறுநாவலில் ஜி. நாகராஜனின் கற்பனை உலகமே குறத்தி முடுக்கு. ஆண்களின் இச்சைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் கதைகள் இவை.

செண்பகம், தேவயானை ஆகியோரின் கஷ்டங்கள் நிலைகுலையச் செய்யும். தங்கம் தன் பேராசையால் பாதாளம் வரை செல்வாள். இன்றும் நிஜ உலகில் நடக்கும் கதை இது.

user_7593

★ 4/5 Feb 02, 2026

பாலியல் தொழில் இருட்டில் ரகசியமாக நடக்கும் ஒரு தொழில். பாலியல் தொழிலாளர்கள் ரகசியமாக வாழ்பவர்கள் — அவர்கள் செய்யும் தொழில் அவர்களின் வாடிக்கையாளர் தவிர பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களுடனான அறிமுகம் நம்மில் பலருக்கு இருக்காது.

இந்நாவலில் அவர்களின் எதார்த்தமான வாழ்க்கையை எந்த மிகையுமின்றி பதிவு செய்திருக்கிறார் நாகராஜன்.

user_7592

★ 5/5 Feb 02, 2026

பெயரில்லாத கதாநாயகன் காதலை நம்பாதவன். தங்கம் என்ற பாலியல் தொழிலாளியிடம் செல்பவன், படிப்படியாக அவளிடம் காதல் கொள்கிறான். தங்கத்தை மணக்க விரும்புகிறான், ஆனால் அவள் வேறொருவருடன் ஓடிவிட்டதாக செய்தி வருகிறது.

தமிழின் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான ஜி. நாகராஜன், பாலியல் தொழிலாளர்களின் வாழ்வையும் அதன் சோகத்தையும் கதாநாயகனின் பார்வையிலிருந்து அழகாகச் சொல்லியிருக்கிறார்.

user_7591

★ 4/5 Feb 02, 2026

ஜி. நாகராஜன் காலத்தில் வாழ்ந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் இக்குறுநாவல், நேர்கோட்டில் அல்லாமல் பல பாத்திரங்களின் வாழ்வை கடந்து செல்கிறது. நாகராஜன் தான் சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வதாகக் கூறினாலும், நாவலில் பல முடிவுகள் திறந்த நிலையிலேயே விடப்பட்டிருக்கின்றன.

குறத்தி முடுக்கின் குறுகிய தெருவுக்குள் கற்பனையாக பயணிக்க வைக்கும் இக்கதை, பெண்கள் உடல் வணிகத்தில் தள்ளப்படும் சூழலை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. கனமான வாசிப்பு அனுபவம்.

user_7590

★ 3/5 Feb 02, 2026

குறத்தி முடுக்கு என்னும் சொல்லே புதிதாக இருந்தது. கதை பாதி செல்லும் வரை அந்தச் சொல்லின் அர்த்தம் புரியாமல் பயணித்துக்கொண்டிருந்தேன்.

பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில், தங்கம் என்ற பெண்ணுக்கும் கதைசொல்லிக்கும் இடையே பிறக்கும் காதல், அதன் பயணம், இருவரின் எண்ணங்களும் உரையாடல்களும் கதையை மெதுவாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துகின்றன. தங்கத்தின் நியாயமான கோபமும் அவளின் போராட்டமும் நிறைவளித்தன.

user_7589

★ 4/5 Feb 02, 2026

பாலியல் தொழிலாளிகள் என்றாலே பரிதாபப்படுவது, அவர்களை காப்பாற்றுவது என்பது போன்றே பெரும்பாலான நாவல்கள் இருக்கும். அந்த வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, நாம் காணாத, காண வேண்டிய ஒரு நிஜத்தை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.

தாசி வீடுகளில் வெறும் வருத்தமோ சந்தோஷமோ மட்டுமே ஓடும் என்கிற பொதுப்புத்தியை சல்லி சல்லியாக நொறுக்கி, அவர்களும் மனிதர்கள்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

user_7588

★ 4/5 Feb 02, 2026

குறத்தி முடுக்கு என்பது பாலியல் தொழிலாளர்களைப் பற்றிய ஓர் குறுநாவல். யாரும் தொடத் தயங்கும் கதைக்கருவை எடுத்து சிறப்பாக படைத்திருக்கிறார் நாகராஜன். கதைமாந்தர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக நம்மிடையே கருத்தைப் பகிர்பவர்களாக இருக்கின்றனர்.

1950களில் நடக்கும் இக்கதையில் குறத்தி முடுக்கு என்ற பெயரே புதுமையானது. தங்கம் என்ற பாத்திரத்தின் வலியும் போராட்டமும் மனதைத் தொடுகின்றன.

user_7587

★ 5/5 Feb 02, 2026

உலகில் எழுதப்படும் அத்தனை கதைகளும் இவ்வுலகில் எங்கோ ஓர் மூலையில் வசிக்கும் ஒரு வாசகனை நோக்கியே எழுதப்படுகின்றன. அது அவனுக்கான கதை என்று அவனுக்கும் அந்த எழுத்தாளனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய உள்ளுணர்வு. இது ஒரு வினோதமான, அற்புதமான, உணர்வுபூர்வமான பந்தம்.

குறத்தி முடுக்கு என்னை அப்படி ஒரு வாசகனாக மாற்றிய கதை. மும்பையின் காமாட்டிபுராவின் வலி இங்கே குறத்தி முடுக்கின் வலியாக ஒலிக்கிறது. ஒரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் படைப்பு.

user_7586

★ 5/5 Feb 02, 2026

ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.

user_7585

★ 3/5 Feb 02, 2026

போலியற்ற மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கும் கதை. எளிய மனிதர்களின் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.