Reviews for யாமம் [Yamam]

30 reviews total

user_7358

★ 4/5 Feb 02, 2026

அப்துல் கரீம் மற்றும் அவரது மனைவியர், பத்ரகிரி, விசாலா, தையல் நாயகி, கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபெத், சதாசிவ பண்டாரம், நீலகண்டம், திருச்சிற்றம்பலம், சற்குணம் ஆகியோரின் கதைகள் பின்னிப் பிணைக்கப்பட்ட அழகான நாவல் இது.

இந்நாவலைப் படிக்கும்போது ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைத் தொகுப்பின் நினைவு பின்னணியில் இழையோடிக்கொண்டே இருந்தது. இந்நாவலை ஒரு அழகான தொகுப்பாகத் திரைப்படமாக எடுக்கலாம். தாகூர் இலக்கிய விருது எதற்காகக் கொடுத்தார்கள் என்று படித்தப் பின்தான் விளங்கியது. எஸ். ராவின் எழுத்துக்களைச் சஞ்சிகைகளில் படித்ததுண்டு, இதுதான் முதல் புத்தக அனுபவம்.

user_7357

★ 4/5 Feb 02, 2026

நான்கு கதைக்களம் கொண்ட இந்த நாவல் இரவின் அமைதி, அழகு, இரகசியம் பற்றி ரம்மியமாக வர்ணனை செய்கிறது. 1800களில் மதராசபட்டிணம் உருவான வரலாறு, தொழில் வர்த்தகம், தமிழர்களின் அன்றைய கலாச்சாரம், பண்பாடு, மருத்துவம், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் என கலாச்சாரத்தை முற்றிலுமாக பேசியுள்ளது.

வாசனைத் திரவியங்களின் விவரிக்க முடியாத நறுமணம் பற்றியும் கவிபாடியுள்ளது. நான்கு வெவ்வேறு குடும்பங்கள் சந்திக்கும் துயரங்களும் இன்பங்களும் மதராசபட்டிணம் என்ற ஊரைச் சுற்றி வலம் வருகின்றன. இதைப் படித்த பின் 1800களில் இருந்த தமிழ்நாடு, இங்கிலாந்தின் கலாச்சாரம், காலநிலை, அங்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்த ஆர்வம் மேலோங்கியது.

user_7356

★ 5/5 Feb 02, 2026

இரவு ஒரு கிழட்டுக் குதிரை போல அலைந்துகொண்டிருந்ததாகத் தொடங்கி, நாவல் முழுவதும் இருட்டும் அதில் தொலைந்துவிட்ட மனிதர்களுமாக விரிகிறது கதை.

இரவை உரித்துக்கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்துகொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்.

ஐந்து நாவல்களைக் கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தி கையாளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக — வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று — உணர்த்தப்பட்டிருக்கிறது.

நாவலில் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. மனித எதிர்பார்ப்புகளுக்கு வெளியே இருக்கிற எதார்த்தத்தின் வலிகளுக்கு யாமம் என்ற அத்தரும், யாமம் என்ற இரவுமே சாட்சி.

user_7355

★ 4/5 Feb 02, 2026

ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனைத்தான் கேட்க வேண்டும். அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும் அனுபவித்தும் தனக்குள் புதைத்து வைத்திருப்பான். இந்தியாவையே தனக்குள் அளந்து புதைத்து வைத்திருப்பவர்தான் எஸ். ரா.

பிரிட்டிஷ் வணிகக் கப்பல் இந்தியக் கரையைத் தொடுவதோடு கதை தொடங்குகிறது 1600களில். ஒரு முகலாய மன்னனின் சுயநலத்தால் இந்தியாவை ஆங்கிலேயர்கள் கையில் தாரை வார்த்ததில் தொடங்கி 200 ஆண்டுகால கதை இந்த நாவல். இதனுள் நான்கு வெவ்வேறு கதைகள் வேறு வேறு திசையில் சென்றாலும், அவற்றை இணைக்கும் ஒரே புள்ளி மதராபட்டினம் மட்டுமே.

யாமம் அத்தர் தயாரிக்கும் கரீமும் மூன்று மனைவிகளும் எப்படி வாழ்ந்து வீழ்ந்தார்கள், பத்ரகிரி தன் தம்பியின் மனைவி மேல் சபலம் கொண்டு சீரழிந்தது, கிருஷ்ணப்பா கரையாளர் தன் சொத்தை எலிசபெத்துக்கு எழுதிக் கொடுத்தது, சதாசிவ பண்டாரம் நாயின் பின் சென்று மறைந்தது என ஒவ்வொரு கதையும் வாழ்வின் நான்கு முக்கிய உணர்வுகளை — பேராசை, சபலம், அமைதி, ஆன்மீகம் — விளக்குகிறது.

user_7354

★ 4/5 Feb 02, 2026

வாழ்வின் வாசம் இந்த யாமம். இரவின் நறுமணத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், மனித வாழ்க்கையின் சுவாரசியங்களையும் சோகங்களையும் ஒரே நூலில் பிணைக்கிறது.

user_7353

Feb 02, 2026

யாமத்தின் வாசனை என் நாசியை விட்டு நீங்கவேயில்லை... இந்த நாவலின் நறுமணம் வாசகரை நீண்ட நேரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

user_7352

★ 5/5 Feb 02, 2026

ஆரம்பம் அவ்வளவு சுவாரசியமாக இல்லை, ஆனால் பின்னர் புத்தகம் அற்புதமாக மாறியது. கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணத்தின் அழகான சித்தரிப்பு. பல நாட்கள் கழித்தும் அதன் தாக்கம் இன்னும் புதிதாக இருக்கிறது. வாழ்க்கைப் பயணங்களை வாசிக்க விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.

user_7351

★ 5/5 Feb 02, 2026

உணர்வுகள் நிறைந்த புத்தகம் இது. தொடர்ச்சியான உரைநடையில், உரையாடல்கள் குறைவாக அமைந்த தீவிரமான நாவல். பல கதைகளைத் தாங்கி வரும் இந்நாவல், அதன் சிறந்த கதாபாத்திரச் சித்தரிப்புகளால் வாசகரைப் பிடித்து இழுக்கிறது. சமீபகாலத்தில் வந்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

user_7350

★ 4/5 Feb 02, 2026

எஸ். ராமகிருஷ்ணனின் அற்புதமான படைப்பு யாமம். புனைகதையின் கலை நம்மை 1800களின் மதராசபட்டிணத்திற்கும் அதன் வாழ்க்கைக்கும் அழைத்துச் செல்கிறது. லாம்ப்டன் சர்வே, காலரா பெருந்தொற்று, முதல் தேயிலைத் தோட்டம், கிறிஸ்தவத்திற்கு மாறிய பிராமணப் பெண்கள், இந்தியாவின் முதல் தேயிலை பயிரிடல் என உண்மை நிகழ்வுகள் புனைகதையுடன் அழகாகக் கலந்திருக்கின்றன.

user_7349

★ 4/5 Feb 02, 2026

வரலாற்றை ஒரு கதையாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவத்திற்கு இணையானது எதுவுமில்லை. மதராசபட்டிணம் உருவானதையும் அது வளர்ந்ததையும் அழகிய வரலாற்றுப் புதினமாக்கியிருக்கிறார்.

பூர்வகுடிகளை விரட்டிவிட்டே இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலோ என்னவோ இன்னும் இந்நகரம் அவர்களை நகரத்திற்கு வெளியிலோ ஏதாவது இடுக்குகளிலோ போடுகிறது. அன்று வெள்ளையர்கள் பிளாக் டவுன், வைட் டவுன் என்று பிரித்திருந்தார்கள். இன்று அப்படிப்பட்ட வெளிப்படையான பிரிவுகள் இல்லையென்றாலும் அதிகாரம் உள்ளவர்கள் வாழும் பகுதிக்கும் அதிகாரமற்றவர்கள் வாழும் பகுதிக்கும் ஒரு மெல்லிய கோடு இருக்கவே செய்கிறது.