Reviews for தியாக பூமி
29 reviews total
user_7228
★ 4/5 Feb 02, 2026தியாக பூமி விடுதலைக்கு முந்தைய காலத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறையையும் சாதி வன்கொடுமையையும் படம்பிடித்துக் காட்டுகிறது.
இவ்வாறான பெண்களுக்கு எதிரான அநியாயமும் அடக்குமுறையும் பல ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் நிலைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. காந்தி கண்ட கனவும் பாரதி நோக்கிய சமத்துவமும் தற்போதும் கனவாகவே உள்ளது. தற்பொழுதும் சாவித்திரியானவள் உமாராணியாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள், பெண் விடுதலையை சமத்துவத்தை எதிர்நோக்கியபடி.
user_7227
★ 5/5 Feb 02, 2026கல்கி அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு. அலை ஓசையைப் படித்தபின், அதைப் போன்ற மற்றொரு சமூக நாவலான தியாக பூமி படிக்க எண்ணினேன்.
இதில் வரதட்சணை கொடுமை, தீண்டாமை, பெண்ணுரிமை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். சாவித்திரி எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று படிக்கும் ஒவ்வொருவரும் வரதட்சணைக்கு எதிராக தங்களது கருத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அந்த அளவிற்கு மனம் பதறுகிறது.
பல்வேறு பாத்திரங்களை அங்கங்கு அறிமுகப்படுத்தி, கடைசியில் எவ்வாறு இணைக்கிறார் என்பது கல்கியின் நாவலாசிரியர் திறமைக்குச் சான்று. ஸ்ரீதரன் மனைவியைத் துச்சமாக மதிப்பதைக் காணும்போது கண்கள் கலங்குகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, காந்திஜியின் சுதந்திரப் போராட்ட காலத்தை நம் கண் முன் காட்டும் நாட்டுப்பற்று மிக்க நாவல். கல்கி இதைச் சோகமாக முடிக்காமல் சந்தோஷமாக முடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தந்தது.
user_7226
★ 5/5 Feb 02, 2026பாபநாசம் படத்தில் கமல் சொல்வார் - பாசமலர் பார்த்து அழவில்லை என்றால் நீங்கள் மனிதர்கள் இல்லை என்று. அதுபோல, இந்த மாஸ்டர்பீஸை படிக்கும்போது கண்ணீர் வரவில்லை என்றால், இந்த பூமியில் நீங்கள் வாழத் தகுதியானவர்கள் இல்லை!
user_7225
★ 5/5 Feb 02, 2026ஆண், பெண் இருவரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் அருமையான நாவல். கல்கி இந்தச் செய்தியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
user_7224
★ 5/5 Feb 02, 2026கல்கியின் மிகச் சிறந்த எழுத்து. சாதி வேறுபாட்டிற்கு எதிராகவும் பெண்ணுரிமைக்காகவும் அவர் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
சாஸ்திரி - சாதி வேறுபாடற்ற, உண்மையான இந்துவாக, கருணையுள்ள மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார். சாவித்திரி - தந்தையின் நல்ல மகளாக இருந்து, மாமியார் வீட்டுக் கொடுமைகளால் வலிமையான பெண்ணாக மாறி, செல்வந்தியாக உயர்ந்தவள். இறுதியில் கணவனை மன்னிக்கும் காட்சி உருக்கமானது.
சாவித்திரி கர்ப்பமாக இருக்கும்போது கணவனும் மாமியாரும் கைவிட்ட காட்சி மனதை உடைக்கிறது. தந்தையைத் தேடி ஊருக்குச் சென்றால் அவரும் இல்லை - அந்த வேதனை சொல்லில் அடங்காது.
user_7223
Feb 02, 2026பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றிய நாவல்.
user_7222
★ 5/5 Feb 02, 2026கல்கியின் மற்றுமொரு அற்புதப் படைப்பு. குறிப்பாக சம்பு சாஸ்திரி பாத்திரம் மனதைத் தொடுவதாக உள்ளது.
user_7221
★ 2/5 Feb 02, 2026கல்கிதான் இதை எழுதினாரா என்று கேட்கத் தோன்றுகிறது. இது அவருடைய முதல் கதை எனக்கு. அப்பனுக்கு பிள்ளை முகம் அப்படி மறந்துபோய்விடுமா? ஆனால் இரண்டு வருஷம் பழகிய கணவனுக்கு கண்டதுமே ஞாபகம் வந்துவிடுகிறதே - அது புரியவே இல்லை.
இவ்வளவு தியாகம் செய்பவர்கள் பெற்ற குழந்தையை விட்டுவிட்டு இப்படிப் போவார்களா? ஒரு தமிழ் மசாலா படம் பார்த்தது போல இருந்தது!
user_7220
★ 4/5 Feb 02, 2026ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த முதல் தமிழ் நாவல், அதே நேரத்தில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. படத்தின் காட்சிகள் பொருத்தமான இடங்களில் அச்சிடப்பட்டன.
ஒரு அப்பாவி பிராமணப் பெண் மாமியார் வீட்டில் படும் துன்பங்களும், இறுதியில் செல்வந்தியாக உயர்வதும் கதையின் மையம். கணவன் தாம்பத்திய உரிமை மீட்பு வழக்கு தொடுக்க, அதைத் தவிர்க்க சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து சிறை செல்கிறாள். மனம் திருந்திய கணவனும் அவளுடன் போராட்டத்தில் இணைகிறான்.
சுதந்திரப் போராட்டத்தை சித்தரித்ததால் ஆங்கிலேய அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்தது. புத்தக ஆர்வலர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.