Reviews for வீரயுக நாயகன் வேள்பாரி
30 reviews total
user_7009
★ 5/5 Feb 02, 2026இந்தத் தெய்வீகமான புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. மனநிறைவான அனுபவம்.
user_7008
★ 5/5 Feb 02, 2026அருமையான வாசிப்பு அனுபவம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது போன்ற உணர்வைத் தருகிறது.
user_7007
★ 5/5 Feb 02, 2026அற்புதமான கதை. மிகவும் சிறப்பான படைப்பு.
user_7006
★ 4/5 Feb 02, 2026இதில் நிறைய புனைவு கலந்துள்ளது. வரலாற்று உண்மைகளோடு கற்பனையும் இணைந்த படைப்பு.
user_7005
★ 5/5 Feb 02, 2026பொன்னியின் செல்வன் படிக்கும்போது இருக்கும் அதே விறுவிறுப்பு. மிகச்சிறந்த முயற்சி. எழுத்தாளருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
user_7004
★ 5/5 Feb 02, 2026அருமை! முதல் பாகம் சற்று மெதுவாகவும் விவரணைகள் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் அந்தத் தகவல்கள் எல்லாம் இரண்டாம் பாகத்தை கட்டமைக்கவே என்பதை உணரவில்லை. இரண்டாம் பாகத்தை நிறுத்தாமல் படிக்கவைத்தது.
நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று!
user_7003
★ 5/5 Feb 02, 2026படித்து முடித்தவுடன் வார்த்தையற்ற வியப்பு.
அறத்தில் சிறந்தது பாரியின் அறம். நிலத்தில் சிறந்தது பாரியின் நிலம். உணவில் சிறந்தது பறம்பின் உணவு. வீரத்தில் சிறந்தது பாரியின் படை.
படித்ததில் சிறந்தது வேள்பாரி. ஆகச்சிறந்த படைப்பு. பக்கம் முழுக்க ஆச்சரியம்.
user_7002
Feb 02, 2026வேள்பாரி முதல் பாகம்: பறம்பின் அழகையும், பறம்பில் வாழும் மனிதர்களின் குலங்களின் வரலாறு, வீரம் ஆகியவற்றையும், பாரியின் ஆளுமைத் திறமையையும் தமிழ்ப்புலவர் கபிலரின் விழி வழியோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
user_7001
★ 5/5 Feb 02, 2026மிகவும் பிடித்தது. பறம்பின் வலிமையும், பாரியின் வானுயர்ந்த அன்பும், பறம்பு மக்களின் திறமையும், இயற்கையின் கொடையையும் முழுதாக உணர்த்தி வியப்பில் ஆழ்த்தும் ஒரு காவியம்.
குலம் அழித்துச் செல்வம் சேர்க்கும் வேந்தர்களுக்கு எதிரே நின்று குலம் காக்கப் போரிடும் பாரி ஓர் சரித்திரம். சரித்திரம் புத்துயிர் பெற்றது.
user_7000
★ 5/5 Feb 02, 2026ஒவ்வொரு அத்தியாயமும் மெய்சிலிர்க்க வைத்தது.
வரலாறு, பண்பாடு, வீரம் ஆகியவற்றை அற்புதமாகச் சித்தரிக்கும் எழுத்து.
பாரியைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் அவர் முல்லைக்கு தேர் கொடுத்தார் என்பது மட்டுமே. ஆனால் வேள்பாரி புத்தகத்தில் அது பற்றி ஒரு வரி மட்டுமே வரும். அப்படியென்றால் நாம் பாரியைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!