Reviews for கடல் புறா - பாகம் 2

30 reviews total

user_6899

★ 4/5 Feb 02, 2026

மிகவும் சுவாரஸ்யமான நாவல். படிக்கத் தூண்டும் கதை.

user_6898

★ 4/5 Feb 02, 2026

சாண்டில்யனின் மற்றொரு தலைசிறந்த படைப்பு. இந்தப் புத்தகத்தை ஒரு தனிப்பட்ட நாவலாகவே படிக்கலாம் — தொடர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் பாகத்திலிருந்து அவ்வளவு வேறுபாடு உள்ளது — புதிய கதாபாத்திரங்கள், புதிய புவியியல், எல்லாமே புதிது.

பல விஷயங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் அக்காலத்தில் கப்பல் கட்டுவதற்கான தொழில்நுட்ப விவரங்கள் குறைவாக இருந்தது ஏமாற்றம் அளித்தது. கடைசி சில அத்தியாயங்கள் மிக வேகமாக நகர்கின்றன — முதல் பாதியைப் போல விரிவாக எழுதியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக, வரலாற்றுப் புனைகதைகள் திறமையான கதைசொல்லியிடமிருந்து வரும்போது எப்போதும் அற்புதமாகவே இருக்கும்.

user_6897

★ 4/5 Feb 02, 2026

நேற்றைய முடிவில் 2 அத்தியாயம் மீதம் இருக்க இன்று காலை 3 மணிக்குள் எழுந்து படித்து முடித்தேன். பாகம் 1 உடன் ஒப்பிடுகையில் பாகம் 2 கொஞ்சம் சுமார் தான். சினிமாத்தனமாக இருந்தது இந்த பாகம், ஆனாலும் சலிப்பை அதிகமாக கூட்டவில்லை. இரண்டாவது கதாநாயகியின் பெயரை மஞ்சள் அழகி என்று வைத்தது சிரிப்பாக இருந்தது. ஆசிரியர் சாண்டில்யன் என்ஜினீயரிங் படித்திருந்தால் எங்களை விட அதிகமாகவே பக்கங்கள் நிரம்ப கதை எழுதி இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

user_6896

★ 5/5 Feb 02, 2026

மற்றொரு சிறந்த கதை. ஒவ்வொரு அத்தியாயமும் பரபரப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கதை அப்படியே பறந்து செல்கிறது, வாசகரை எந்த இடத்திலும் நிறுத்த முடியாத அளவுக்கு ஈர்த்துக் கொள்கிறது.

user_6895

★ 4/5 Feb 02, 2026

சாண்டில்யனுக்கு கதையின் கடைசிப் பகுதியை சுவாரஸ்யமாக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரம்பம் மெதுவாகவும் சலிப்பாகவும் இருக்கும். ஆனால் கடைசி நூறு பக்கங்கள் அந்த எதிர்பார்ப்புக்கு முழு நியாயம் செய்யும்.

user_6894

★ 5/5 Feb 02, 2026

முதல் பாகத்தைப் போலவே சிறப்பாக இருக்கிறது. மூன்றாம் பாகத்தைப் படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். சாண்டில்யன் என்றும் வியக்க வைப்பதை நிறுத்துவதே இல்லை!

user_6893

★ 5/5 Feb 02, 2026

சோழர்களின் தூதுக்கு ஒத்துழைக்காத கலிங்கர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியதோடு, தூதர்களைச் சிறைபிடித்து தண்டனை மேடைக்குக் கொண்டு செல்ல முயல்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிய சோழ படைத்தளபதி இளையபல்லவன், கலிங்கர்களின் கடற்படைக்கு அரணாக அமைந்திருக்கும் அக்ஷயமுனை தீவை கைப்பற்றுவதே இப்பாகம்.

இதனூடே கடல்புறா கப்பல் கட்டப்படுவதும், காஞ்சனையின் நினைவை சுமக்கும் இதயத்தை மஞ்சளழகி துளைப்பதும், பகைவர்களின் சூழ்ச்சிகளும் இணைகின்றன. இத்தனையையும் மீறி, ஒவ்வொரு நகர்வையும் ஆராய்ந்து மதியால் இளையபல்லவன் தீட்டும் திட்டங்களும், எதிரியின் தோல்விகளும் விறுவிறுப்பின் உச்சத்தில் கதையை நகர்த்துகின்றன. மூன்றாம் பாகத்தை நோக்கி!

user_6892

★ 4/5 Feb 02, 2026

இதற்கு பிறகு புகாரை அடைந்து இளையபல்லவரின் கதை தொடரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடல் புறா கடலைக் கிழித்துக் கொண்டு நின்றது அக்ஷய முனையில். இங்கிருந்தே தொடங்குகிறது கடல்புறாவின் இரண்டாவது பாகம்.

கொம்புகள் முழங்க அக்ஷய முனையை அடைந்தது கடல்புறா. ஒரு வருடம் முழுதும் கடலில் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய சீனக்கடற் வேந்தன் அகூதாவின் உபதலைவனாக தன்னை உருவகித்துக் கொண்டு அடுத்த திட்டத்துடன் அக்ஷய முனையை அடைந்த இளையபல்லவரை நாமனைவரும் கடைசி முறை பார்ப்பதாக இருந்து விடும் என்று எண்ணி அமீரும் மற்றவர்களும் சிந்தை வயப்பட்டிருந்தனர்.

இந்த பகுதி முழுவதும், பலவர்மனும், அவரது மகளான மஞ்சளழகியும் இந்த அக்ஷய முனைக் கோட்டையும், கொள்ளைக்காரர்களும், அந்த பகுதிப் பிராந்தியத்தை உரிமைக் கோரும் நான் வகை மக்களைப் பற்றியும் சாண்டில்யன் நம் கைக் கோர்த்து அந்த கடற்கரை மணலில் நடத்திக் கூட்டிச் சென்று சொல்லியிருப்பார்.

குறும்பும், வீரமும், குரோதமும் கொப்பளிக்க இனி அந்த இரவும், வரப்போகின்ற நாட்களும் இருப்பதற்கான அனைத்தையும் சாண்டில்யன் மெல்ல மெல்ல தன் சொற்களின் வழிக் கட்டமர்த்தி நகர்கிறார். கொண்டாட்ட இரவின் கொலைகளுக்கான களம் தயாரானது. வில்வலன் இளையபல்லவரை வீழ்த்த ஆயத்தமான நேரம்.

இளையபல்லவன் அக்ஷய முனையின் மிகப்பெரிய சதுரங்க வேட்டையை எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை. சாண்டில்யனின் எழுத்து நடை வாசகரை கட்டிப்போடும் வல்லமை கொண்டது. இனி பாகம் மூன்றை வாங்க வேண்டும்!

user_6891

★ 5/5 Feb 02, 2026

ஒப்பிடமுடியாத படைப்பு. முதல் பாகத்தை விடவும் சிறந்தது.

சோழப் பேரரசின் மாபெரும் தளபதி கருணாகர பல்லவன், கடற்கொள்ளைத் தலைவன் அகூதாவிடம் கடற்போர் கலையைக் கற்றுக்கொள்கிறான். தமிழ் வணிகக் கப்பல்களையும் மக்களையும் அழிக்கும் கலிங்கர்களின் கடல் ஆதிக்கத்தை ஒழிக்க, அக்ஷய முனையில் தன் திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறான். ஆனால் அங்கே கோட்டைத் தலைவன் பலவர்மனின் சதிகள், மஞ்சளழகியின் காதல், மூன்று பேரரசுகளின் விதியை மாற்றக்கூடிய மர்மங்கள் என அவனைச் சுற்றி ஆபத்துகள் சூழ்கின்றன. இந்தக் கொடிய சூழல்களை கருணாகரன் எவ்வாறு கையாள்கிறான் என்பதே இந்நாவலின் சுவாரஸ்யம்.

user_6890

★ 5/5 Feb 02, 2026

அருள்மொழிவர்மன் அரசாளும் என் மனக்கோட்டையில், தரைப்படையை வந்தியத்தேவன் தலைநடத்த, இன்றுமுதல் கடற்படைத்தலைவனானான் இளையபல்லவன்.