Reviews for வாசிப்பது எப்படி?
43 reviews total
user_6738
★ 5/5 Feb 02, 2026வாசிப்பின் அனுகூலங்களை விளக்கும் நல்ல புத்தகம்.
user_6737
★ 5/5 Feb 02, 2026இளம் வயதினருக்கான வாசிப்பு வழிகாட்டி நூல். பழக்கத்தை உடைப்பது கடினம், ஆனால் புதிய பழக்கத்தை உருவாக்கி தொடர்வது எளிது, புதிய பழக்கத்தின் மூலம் கெட்ட பழக்கத்தை கைவிடலாம் என்ற ஆசிரியரின் வரிகள் மனதில் நிற்கின்றன. சுய முன்னேற்ற வகையில் வாசிப்பின் முக்கியத்துவத்தை எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கும் புத்தகம்.
user_6736
★ 2/5 Feb 02, 2026நீங்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாசித்திருக்கலாம். இருப்பினும் ஒரு வங்கிப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போதோ அல்லது தெரியாத ஒரு நபரிடம் திடீரென பேசும் சூழல் ஏற்படும்போதோ தடுமாறியிருக்கலாம். இப்புத்தகத்தை வாசிக்கையில் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நான் பெற்றது என்ன என்று யோசித்தேன் — கற்பனை உலகங்களில் வாழ முடிந்தது, சில எண்ணங்களை மாற்றியது. ஆனால் வாசிப்பு மட்டுமே போதாது, அனுபவமும் தேவை என்பது என் கருத்து.
user_6735
★ 4/5 Feb 02, 2026எந்த நடிகனும் தனது ரசிகனுக்கு புத்தகத்தைப் பரிந்துரைப்பதில்லை, அவ்வாறு செய்தால் அறிவு பெற்று அந்த நடிகனின் பின் செல்லமாட்டான் என்று ஆசிரியர் சொன்னது சுவாரஸ்யம். இந்தப் புத்தகத்தில் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை விட ஏன் வாசிக்க வேண்டும் என்றே அதிகம் விவரிக்கப்பட்டுள்ளது. அவை படிப்பவருக்கு வாசிப்பைத் தொடங்க ஒரு நல்ல ஊக்கமளிக்கும்.
user_6734
★ 5/5 Feb 02, 2026வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து மிகவும் தீவிரமான குறிப்பு என்று நினைத்துக்கொண்டு புத்தகத்தின் உள்ளே சென்றால், ஏன் வாசிக்க வேண்டும் என்பதை யதார்த்தமான நகைச்சுவை கலந்த எழுத்து நடையுடன் ஆசிரியர் கடந்து செல்கிறார். வாசிப்பு ஆர்வம் குறைந்த காரணங்களைச் சுட்டிக்காட்டி, அதை சரிசெய்ய வழிகாட்டுகிறார். நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள், வாசித்ததைச் சொல்லுங்கள், போதும் என்ற வரிகள் மனதில் நிற்கின்றன.
user_6733
★ 5/5 Feb 02, 2026அனைவரும் வாசிக்க வேண்டும். வாசித்தலினால் நமக்கு மதிப்பு, முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு கிடைக்கின்றன என்றும், நம் நாட்டின் மிகப்பெரும் ஆளுமைகள், தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் அனைவரும் சிறந்த வாசிப்பாளர்களே என்றும் தெளிவாக விவரித்துள்ளார். தொடர்ந்து இரண்டு முறை வாசித்துவிட்டேன். எந்த ஒரு வரியையும் விட்டுவிடக்கூடாது என்று. வாசிப்பின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.
user_6732
★ 5/5 Feb 02, 2026என்னிடம் பலர் கேட்பதுண்டு ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று. ஒரு சாமானியனாக இருக்கும்போது ரசனையின் ஆழம் குறைந்திருக்கும், எல்லைகளின் நீளம் குறுகியிருக்கும். இந்த உலகை ஏன் ஒரு கதவின் சிறிய துளையில் பார்க்கிறீர்கள், படித்து அறிவை மெருகேற்றும்போது உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் இடையில் இருக்கும் கதவை நீக்கி உலகை முழுமையாகப் பார்க்க முயற்சி செய்வீர்கள். என்னுடைய விளக்கங்களை விட இந்தப் புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறது.
user_6731
★ 4/5 Feb 02, 2026வாசிப்பின் அவசியமும் வாசகர்கள் குறைந்து வருவதற்கான காரணியும் வாசிப்பதை எப்படி மக்களிடம் ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து வைத்துள்ளார் எழுத்தாளர் செல்வேந்திரன். ஆங்காங்கே அவரின் அரசியல் நிலைப்பாடு தெரிந்ததே தவிர பிரச்சார நோக்கம் தென்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இந்த நூல் எனக்கு ஐந்து வருடம் முன்னதாக கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை கடைசியில் ஏற்படுத்தியது.
user_6730
★ 3/5 Feb 02, 2026ஸ்மார்ட்போன் உலகின் நிலையற்ற இன்பங்களில் தொலைந்துபோன மாணவர்களுக்கான அடிப்படை நூல். வாசிப்பு என்ற மதசார்பற்ற மதத்திற்கு இன்றைய இளைஞர்களை மாற்ற இந்தப் புத்தகம் ஆர்வமாக முயற்சிக்கிறது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர் அதிகமாக விற்பனை செய்தாலும், ஒவ்வொரு தமிழ் பெற்றோர் மற்றும் மாணவரின் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம். பண்பாடற்ற தமிழ்ச் சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது, இது போன்ற புத்தகங்கள் முதல் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன.
user_6729
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தின் நோக்கம் அறியாதவர்களை அறிவுறுத்துவதோ கடிந்துகொள்வதோ அல்ல. மக்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைவதால் எழும் சவால்களைக் காண்கிறோம். இது அரசியல், வணிகம், கல்வி, தொழில், அறிவியல், கலை போன்ற பல்வேறு துறைகளைப் பாதிக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ள நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும்.