Reviews for வாசிப்பது எப்படி?
43 reviews total
user_6748
★ 5/5 Feb 02, 2026வாசிப்பவர்களை மீண்டும் வாசிக்க வைக்கும் படைப்பு. நல்ல தகவல்கள் நிறைந்தது. சில இடங்களில் கொஞ்சம் நெருடல் இருந்தாலும், படைப்பின் நோக்கமும் உதாரணங்களும் சொந்த வாழ்க்கை அனுபவங்களும் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
user_6747
★ 4/5 Feb 02, 2026அருமை! வாசிப்பின் பெரும்பயனை இறுதிப் பக்கம் வரை சொன்ன விதம் அழகு! ஒரே வாசிப்பில் முடிக்கப்பட வேண்டிய புத்தகம்.
user_6746
★ 4/5 Feb 02, 2026வாசகனாக மாற வலுவாக நினைவூட்டுகிறது. பரிந்துரைக்கப்பட்ட வயதுப் பிரிவு 12-18 என்றாலும், வாசிப்பைத் தொடங்காத அனைவருக்கும் ஏற்றது. மேலும் வாசிக்க ஊக்கமளித்தது. வாசிக்க சோம்பலாக உணரும்போது மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம். இந்தப் புத்தகத்திற்கும் ஒரு சிறந்த வாசகராக முன்மாதிரியாக இருப்பதற்கும் நன்றி.
user_6745
★ 4/5 Feb 02, 2026வாசிப்பை மேலும் நேசிக்கவும் தொடக்கத் தயக்கம் உள்ளவருக்கும் கண்டிப்பாக இந்தப் புத்தகம் ஒரு உந்துதல் கொண்டுவரும். செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய், இது வாசிப்பிலும் அடங்கும். நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள், வாசித்ததைச் சொல்லுங்கள், போதும் — படித்ததில் பிடித்தது.
user_6744
★ 4/5 Feb 02, 2026வாசிப்பு என்பது ஒற்றைச் செயல்பாடு அல்ல. அது பிற துறைகளையும் கலை வடிவங்களையும் நோக்கி உங்களைத் தள்ளும். இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும் ஒருவன் தன்னியல்பாகவே சிற்பங்களை ரசிப்பவனாகவும் தூய சங்கீத விரும்பியாகவும் ஆகிவிடுகிறான். வரலாற்றுப் போதமும் தத்துவ ஆர்வமும் உருவாகிவிடுகிறது. எதையும் மிக விரிவான பின்புலத்தில் வைத்துச் சிந்திக்கிறவன் ஆகிறான். பிற அறிவுத்துறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்களையாவது வளர்த்துக்கொள்கிறான்.
user_6743
★ 4/5 Feb 02, 2026வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க விரும்புவோருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
user_6742
★ 5/5 Feb 02, 2026அன்பும் அக்கறையும் கொண்ட படைப்பு. வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மனிதத்தின் மீது கொண்ட பேரன்பாலும் சிறிது கண்டிப்புடனும் படைத்திருக்கிறார் செல்வேந்திரன். நிச்சயம் இந்தப் புத்தகம் படித்த பிறகான வாசிப்பும் எழுத்தும் வடிவம் பெறும் என்று உணர்கிறேன்.
user_6741
★ 4/5 Feb 02, 2026இந்நூலின் நோக்கமான வாசிப்பைத் தூண்டுவதும் தீவிரப்படுத்துவதும் போன்ற பணியைச் செம்மையாகச் செய்துள்ளது என்றே சொல்லலாம். வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்துவது மட்டுமன்றி பொருளாதார வாய்ப்புகளையும் புதிய நட்புகளையும் பெற்றுத் தருகிறது என்பதைப் பற்றியும் பேசியுள்ளார். வாசிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் காரணங்கள், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் கவனச்சிதறல்கள் போன்றவற்றுடன் நம்மை எவ்வாறு வாசிப்புத் தளத்தில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்பதையும் பேசுகிறது.
user_6740
★ 4/5 Feb 02, 2026எதனால் வாசிக்க வேண்டும், வாசிப்பதனால் என்னென்ன நன்மை கிடைக்கிறது, வாசிக்காமல் இருப்பதால் என்ன இழந்தோம் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். புத்தக வாசிப்பை மட்டும் இல்லாமல் செய்தித்தாள் வாசிப்பையும் முன்னுரிமை கொடுத்து விளக்கியிருக்கிறார் செல்வேந்திரன். பெரியாரையும் அம்பேத்கரையும் படித்தவன் சாதியைத் தூக்கிப் பிடிக்க மாட்டான், வாசிப்பு ஒருவனை வேறு மனிதனாக மாற்றுகிறது என்ற கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.
user_6739
★ 5/5 Feb 02, 2026புத்தகத்தின் தலைப்பே ஒரு வித முன்தீர்மானத்தை ஏற்படுத்திவிட்டதால் முதலில் வாசிக்கத் தோன்றவில்லை. நண்பர் பரிந்துரைத்தபோதும் ஆர்வம் எழவில்லை. புத்தகம் படிப்பதற்கெல்லாம் வழிகாட்டியா என்று யோசித்தபடியே வாசித்தால், ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், வாசிக்காத இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது, வாசிப்பை எப்படித் தொடங்கலாம் என்பதை அருமையாக விளக்குகிறது.