Reviews for பொய்மான் கரடு

29 reviews total

user_6566

★ 5/5 Feb 02, 2026

அமரர் கல்கியின் மற்றொரு சிறந்த படைப்பு. அவரது ஒவ்வொரு புத்தகத்திலும் அழகான காதல், பரபரப்பு, திருப்பங்கள் — எதிலும் குறை இருக்காது. வார்த்தைகளை நேர்த்தியாகக் கையாண்டு, கற்பனையை வாசகன் மனதில் உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு.

user_6565

★ 4/5 Feb 02, 2026

சுவாரசியமான புத்தகம்! தமிழில் நான் படித்த முதல் த்ரில்லர். சில திருப்பங்களை எதிர்பார்க்க முடியவில்லை — அதனால் படிக்கவும் (கேட்கவும்) மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. தீபிகா அருணின் விவரிப்பு அற்புதம். ஒரு கதாபாத்திரம் அவசரமாக சட்டை அணியும் காட்சியில் நிஜமாகவே சிரித்துவிட்டேன். செம்பா கதாபாத்திரம் அசத்தல் — மிகவும் சாமர்த்தியமானவள். இது போன்ற கதைகள் மேலும் படிக்க ஆசை.

user_6564

★ 4/5 Feb 02, 2026

படிக்க ஆரம்பித்த ஒரே நாளில் முடித்த short and sweet நாவல் இது. எழுத்தாளர் மனதில் தோன்றும் விஷயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக வழங்க முடியுமோ அவ்வளவுக்கு அது அற்புதமாக வாசகனைப் போய் சேரும் என்பதற்கான எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். பைசாசம் படித்துவிட்டு இதைப் படிக்கும்போது, பைசாசத்திற்கு இதுவே உத்வேகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட் விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.

user_6563

★ 5/5 Feb 02, 2026

மனிதர்களின் அன்பை மானோடு ஒப்பிடலாம். சிலர் நம்மிடம் உண்மையாக நடந்துகொண்டாலும் மனதில் விஷம் கருமிக்கொண்டு பொய் மானாகத் தோன்றுகின்றனர். அவர்கள் நிஜ மான் என்று நம்பி ஏமாறும் தருவாயில் தான் நிஜ மானின் அருமை புரிகிறது.

பொய்மான் கரடு அமரர் கல்கியின் சிறந்த படைப்புகளில் ஒன்று. கதையின் இறுதியில் வரும் ட்விஸ்ட் கணிக்கமுடியாததாய் இருந்தது. கதாபாத்திரங்களின் வசனங்களில் கிராமத்து வாசம் வீசியது. காதல் சொட்டும் வார்த்தைகளைப் புனைய கல்கிக்குக் கற்றுக்கொடுக்கவா வேண்டும்? அருமையான புத்தகம்.

user_6562

★ 5/5 Feb 02, 2026

கல்கியின் பாணியிலேயே சிறிதும் விறுவிறுப்புக்குக் குறைவின்றி, பல திருப்பங்களுடன் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்ட சிறந்த குறும்புதினம் இது. செங்கோடன் கதாபாத்திரத்தோடு பயணிக்கையில், நமக்கு ஆர்வம் மிகுந்து காணப்படும் இடத்திலெல்லாம் கல்கி மகிழுந்து ஓட்டுநரிடம் பேசுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன — செங்கோடனின் கதையில் மூழ்கியிருக்கிறோம், ஆனால் உண்மையான கதை மகிழுந்தில் பேசப்படுகிறது என்பதை அடிக்கடி நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது. மனநிறைவு அளிக்கும் நல்ல முடிவைக் கொண்ட குறும்புதினம்.

user_6561

★ 4/5 Feb 02, 2026

ராஜா காலத்துக் கதையானாலும் சாதாரண மக்கள் பற்றிய கதையானாலும் ஒரு திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கல்கியின் எழுத்துக்கள் மறக்காமல் ஏற்படுத்திவிடுகின்றன. 2-3 மணிநேரத்தில் வாசித்து விடக்கூடிய குறுநாவல். திரில்லர் வகையைச் சேர்ந்தது. இலகுவாக வாசிக்க விரும்பும்போதோ அல்லது கடினமான புத்தக வாசிப்புக்கு இடையிலோ தாராளமாய் வாசிக்கலாம். எளிய நடை. Absolute page turner. கடைசி அத்தியாயத்தில் வந்த ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

சேலத்தில் உள்ள ஒரு ஊரில், ஒரு பாறையின் பொந்தில் மான் நிற்பது போன்ற உருவம் தெரியுமாம். அது நிழல்கள் மூலம் அமைந்த பொய்யான தோற்றம். அதனால் அந்தப் பாறைக்கு பொய்மான் கரடு என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

user_6560

★ 5/5 Feb 02, 2026

சிறந்த நாவல்! கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட் அபாரம். இந்தக் கதையின் காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. சிலர் இது 2000-களுக்கு பழமையானது என்று நினைக்கலாம், ஆனால் இது போன்ற நேர்த்தியான நாவல்கள் காலத்தைக் கடந்தவை — கடந்த காலத்துக்கு நேரில் பயணிக்கும் அனுபவத்தை தருபவை.

கதாபாத்திரங்களின் உரையாடல்களைப் படிக்கும்போது அவர்களின் முகபாவங்களை எளிதாகக் கற்பனை செய்ய முடிகிறது — இங்கேதான் கல்கியின் எழுத்தாற்றலும் வசன நேர்த்தியும் விளங்குகிறது.

சேலம் செல்லும் வழியில் பொய்மான் கரடு என்ற இடத்தையும் செங்கோடனின் பசுமையான பண்ணையையும் நேரில் பார்க்க ஆசை! கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்!

user_6559

★ 4/5 Feb 02, 2026

அசத்தலான முடிவு — எதிர்பாராத திருப்பம்! கதை மிகவும் பிடித்திருந்தது. கடைசி சில பகுதிகள் மிகவும் சுவாரசியமாக இருந்தன. அருமையாக எழுதப்பட்டுள்ளது.

இடையில் கல்கி இரவை வர்ணிக்கும் விதம் அலாதியானது — அது கல்கியின் தனிச்சிறப்பு.

"மழையும் மரங்களும் அதிகமில்லாத புன்செய்க்காடுகளில் மாலை நேரம் எப்போதுமே மனோரம்மியமாயிருக்கும்..." — இந்த ஒன்பதாம் அத்தியாய வர்ணனை மனதில் நின்றது.

user_6557

★ 5/5 Feb 02, 2026

எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. நல்ல கற்பனை. கல்கியின் எழுத்து நடை இங்கும் என்னை கவர்ந்தது. சில இடங்களில் அவரது நகைச்சுவை உணர்வு மிளிர்கிறது.

user_6556

★ 5/5 Feb 02, 2026

இப்படியும் ஒரு த்ரில்லர் எழுதலாம் என்று காட்டுவதற்காகவே எழுதப்பட்ட கதை போல உள்ளது 'பொய்மான் கரடு'.

எப்போதும் பெரிய கதைகள் தரும் கல்கி அவர்கள் இங்கு அளவைக் குறைத்தபோதும் வேகத்தைக் குறைக்கவில்லை.

வேகமான கதைநடை. கிளைமாக்ஸ் ட்விஸ்ட். இந்த இரண்டும் இக்கதையின் சிறப்பம்சம்.