Reviews for Pudhumaipithan sirukadhaigal
32 reviews total
user_6315
★ 5/5 Feb 02, 2026தமிழ் இலக்கியத்தின் முதல் பிதாமகன் புதுமைப்பித்தன். அவரிடம் இருந்து தான் தமிழின் நவீன இலக்கியம் தொடங்குகிறது. புதுமைப்பித்தன் கதைகளையும் அவரின் வாழ்வு அனுபவங்களையும் பார்க்கும்போது மிகவும் பெருமை. தமிழின் நவீன இலக்கியம் தொடங்கிய இடத்திலேயே மிக வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சிறுகதையில் எல்லா வடிவங்களையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார் — பின்நவீனத்துவம், மேஜிகல் ரியாலிசம், வரலாறு, ஃபேன்டஸி என்று அத்தனை வடிவங்களிலும் தனது ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார்.
user_6314
★ 5/5 Feb 02, 2026படித்ததில் பிடித்தது "கயிற்றரவு". "காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே." காலத்தின் தன்மையை சிலந்திப் பூச்சியின் இழையுடன் ஒப்பிடும் நுட்பமான எழுத்து மிகவும் அற்புதமாக இருக்கிறது.
user_6313
★ 3/5 Feb 02, 2026இணையத்தில் பல விடயங்கள் "வைரல்" ஆவது உண்டு. அத்தி பூத்தாற் போல் புத்தகங்களும் வைரல் ஆகும். அப்படி வைரலானது தான் புதுமைப்பித்தன் கதைகள். அவரின் கதைகளை சீர் வாசகர் வட்டம் சார்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை, யாரோ ஒருவர் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடும். அதை மிகவும் நகைச்சுவையான பாணியில் எழுதியிருக்கிறார்.
user_6312
★ 5/5 Feb 02, 2026புதுமைப்பித்தன்! எஸ். ரா முதல் பவா வரை பல எழுத்தாளர்கள் இவரைப்பற்றி புகழ்ந்து, ஆச்சரியப்பட்டு எழுத, பேச கேட்டிருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை, அதற்கு விலையும் ஒரு காரணம். இந்நூலை எளிய விலையில் (₹150) கிடைக்கப்பெற்று புதுமைப்பித்தனை வாசிக்க வாய்ப்பளித்த சீர் வாசகர் வட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
நிச்சயமாக அத்தனை புகழ் மாலைகளுக்கும் தகுதியுடையவர்தான் புதுமைப்பித்தன்! அவர் எழுதிய கதைகளையும் அது எழுதப்பட்டிருக்கும் காலக்கட்டத்தையும் பார்க்கும்போது பிரம்மிப்புடன் புரிகிறது.
user_1688
★ 5/5 Jan 30, 2026மிகவும் அருமையான புத்தகம்! புதுமைப்பித்தனின் கதைகள் படிக்கும்போது பிரமிப்பூட்டுகின்றன.
user_1687
★ 1/5 Jan 30, 2026இந்தப் புத்தகம் எனக்கு ஈர்க்கவில்லை. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
user_1686
★ 4/5 Jan 30, 2026தமிழ் சிறுகதைகளின் சிறந்த தொகுப்புகளில் ஒன்று. புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதை உலகின் மாபெரும் கதைசொல்லிகளில் ஒருவர்.
user_1685
★ 5/5 Jan 30, 2026இந்த செம்மொழி இலக்கியங்களின் சிறப்பு என்னவென்றால், அவை உங்களை காலப்பயணம் செய்ய வைக்கின்றன. அப்போதுதான் உலகில் சில விஷயங்கள் எவ்வளவு மாறிவிட்டன, சில விஷயங்கள் இன்னும் சிறிதும் மாறவில்லை என்பதை உணர்கிறீர்கள். ஆனால் ஒரு செம்மொழி படைப்பு எப்போதும் செம்மொழி படைப்புதான்.
user_1684
★ 3/5 Jan 30, 2026சுமாரான புத்தகம். எல்லா கதைகளும் சரிசமமாக ஈர்க்கவில்லை.
user_1683
★ 5/5 Jan 30, 2026சிறந்த புத்தகம்! புதுமைப்பித்தனின் எழுத்து நடையும் கதைகளின் தரமும் மிகவும் உயர்ந்தது.