Reviews for Pudhumaipithan sirukadhaigal
32 reviews total
user_6325
★ 5/5 Feb 02, 2026"வாழ்க்கையை அழகாகவும், நிதர்சனமான உண்மைகளையும் காணக்கண்டேன்!" இந்நூலின் வாயிலாக.
மக்களிடம் நல்ல கருத்துக்களையும் சிறந்த வாழ்க்கைப் பதிவுகளையும் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களிடம் இருந்து தனித்தே நிற்கிறார் நமது புதுமைப்பித்தன்! அவரே சொல்கிறார் — இவை எல்லாம் வெறும் கதைகளே! ஓர் எழுத்தாளனுக்குத் தான் கண்டதையும் கேட்டதையும் தன் கற்பனையைக் கொண்டு எழுத எல்லா உரிமைகளும் உண்டு! என் கதைகளைப் படித்துவிட்டு கோபித்துக்கொள்பவரையே அதிகம் நேசிக்கிறேன்!
user_6324
★ 4/5 Feb 02, 2026ஆற்றங்கரைப் பிள்ளையார் — கதையாசிரியர் புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம்.
ஆற்றங்கரையோரமாக இக்கதை தொடங்கும். கரையோரம் ஒரு பிள்ளையார் வீற்றிருப்பார். ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வருவதால் மணற்குன்றும் கற்பாறைகளும் பிள்ளையாரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன. அந்த சமயம் ஒரு கிழவர் அங்கு வந்து சேர்ந்தார். பிள்ளையார் படும்பாட்டைப் பார்த்து ஒரு யோசனை தோன்றியது அவரது மனதில். பிள்ளையாருக்குச் சமுகம் என்ற மேடையை அமைத்தார்.
user_6323
★ 5/5 Feb 02, 2026தமிழில் இதை சாதித்தவர்களில் அவர் சிறந்தவர் என்பதை உறுதிப்படுத்த முடியும். புதுமைப்பித்தன் ஒரு புதுமையான படைப்பாளி.
user_6322
★ 4/5 Feb 02, 2026புதுமைப்பித்தனைப் படிக்கும் முதல் புத்தகம் இது. ஆனந்த விகடன் வெளியீடாக அவரின் சிறந்த 20 சிறுகதைகளின் தொகுப்பு. என்ன ஒரு எழுத்தாளர்! சிறுகதைகளில் அவர் ஏன் முன்னோடியாகக் கருதப்படுகிறார் என்பது புரிகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் புரட்சிகரமான விஷயங்களை எழுதியிருக்கிறார் — அதற்கு தனி தைரியமே வேண்டும். தமிழ் சிறுகதை ரசிகர்கள் அவரின் படைப்புகளை முதலில் படிக்க வேண்டும்.
user_6321
★ 5/5 Feb 02, 2026சிறுகதைகளின் அரக்கன் புதுமைப்பித்தன். கதைகள் பலவற்றில் தொடக்கமும் முடிவும் இருக்காது — வாழ்க்கையின் ஒரு அத்தியாயம். அவர் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த சமுதாய சூழலை அனுமானித்துக் கொள்ளலாம். சில கதைகள் மேஜிக் ரியலிசம் அடிப்படை கொண்டதினால், ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக் கொள்ளலாம். இவர் உபயோகித்திருக்கும் மொழி எனக்கு ஆரம்பத்தில் கடினமாகவே இருந்தது. பழகும்போது இறுதிக்கே வந்துவிட்டேன்.
user_6320
★ 4/5 Feb 02, 2026கயிற்றரவு சிறுகதையை மூன்று முறை திரும்பத் திரும்ப படித்தேன். என்னைப் புரட்டிப்போட்ட சிறுகதைகளில் மிக முக்கியமான ஒன்று கயிற்றரவு.
user_6319
★ 5/5 Feb 02, 2026சுருக்கமாகக் கூறினால் அனைத்து சிறுகதைகளும் சாகாவரம் பெற்றவை எனலாம்.
user_6318
★ 5/5 Feb 02, 2026என்ன ஒரு அற்புதமான புத்தகம்! உலகத் தரம் வாய்ந்தது. பொன்னகரம், ஆற்றங்கரையில் பிள்ளையார், செல்லம்மாள் போன்ற கதைகள் என்னையே மாற்றிய சக்திவாய்ந்த படைப்புகள். மொழி நடை அவர் யாரிடம் பேச விரும்புகிறாரோ அந்த வாசகர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கடினமான கதைகளில் மணிப்பிரவாளம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், சிறிது அனுபவம் உள்ளவர்களுக்கும் கூட புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.
user_6317
★ 1/5 Feb 02, 2026நூற்றியிரண்டு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் சித்தி, இது மிஷின் யுகம், கொடுக்காப்புளி மரம், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஆகிய நான்கு சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தது.
user_6316
★ 3/5 Feb 02, 2026புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு ஒரு உளவியல் பூங்கா. பல்வேறு மனித வாழ்வியல் முரண்களின் முகவரி.
கதைகளின் கட்டமைப்பு 1930-1980 மொழி நடைக்கும் கால சூழலுக்கும் ஒத்து இயங்கும் படைப்பு. சில தமிழ் வார்த்தைகள் புரியவில்லை — அது மொழி ஆளுமைக்கு விட்ட சவால். அவரின் சமூகத் திறனாய்வும் நையாண்டி முடிவும் சிறுகதைகளுக்கு இலக்கணமாகக் கருதலாம்.
ஐயர், பிள்ளை என இரு பெரும் சமூக சாதிகளின் மாந்தர்கள் பெருவாரியான இடங்களை நிரப்புகிறார்கள். பித்தனின் சாதி விழுமியங்கள் ஒரு புரட்சி.