Reviews for மீண்டும் ஜீனோ

30 reviews total

user_6081

★ 3/5 Feb 02, 2026

முதல் பாகம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த இரண்டாம் பாகம் கொஞ்சம் இழுப்பது போல் உணர்ந்தேன். கதை சற்று மெதுவாக நகர்கிறது.

user_6080

★ 4/5 Feb 02, 2026

Heuristics என்ற விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஜீனோ. வெகுளியான நிலா, அராஜகம் செய்யும் ரவி, மனோ - இவர்கள் தான் இந்தக் கதையின் மையம்.

'என் இனிய இயந்திரா' படிக்காதது எனக்கு இழப்பாகத் தெரியவில்லை. கதையின் தொடர்ச்சியில் அதன் சாயல் இருந்தாலும் தனிச்சையாகவே இருக்கிறது. ஒரு இயந்திரம் மனிதனின் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதே சிறப்பு.

user_6079

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் தொழில்நுட்பத்தை மிகவும் ஆழமாக விளக்குகிறது. அன்பு என்று வந்துவிட்டால் அது இயந்திரம் அல்லது மனிதன் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்பதைச் சொல்கிறது.

AI, டேட்டாபேஸ் பேங்க் இவை அனைத்தையும் 1987-லேயே விளக்கியிருக்கிறார், இன்று அதை IoT என்று 2020-ல் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். காலத்தை முன்னறிந்த எழுத்தாளர்.

user_6078

★ 5/5 Feb 02, 2026

'மீண்டும் ஜீனோ' - 'என் இனிய இயந்திரா'வின் தொடர்ச்சி. 1987-ல் எழுதிய ஒரு புத்தகம் பற்றி 30+ வருடம் கழித்தும் பேச முடிகிறது என்றால் அது சுஜாதாவின் மகிமை.

2021-ல் நடக்கும் இந்த அறிவியல் புனைகதை, முன் பாகத்தில் விட்டுப் போன கேள்விகளுக்குப் பதிலுடன் வந்திருக்கிறது. நிலா, சிபி, மனோ, ரவி என எல்லா கதாபாத்திரங்களும் தொடர்கின்றன.

user_6077

★ 5/5 Feb 02, 2026

அருமையான அறிவியல் புனைகதை! சுஜாதாவின் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது. ஜீனோவின் கதை மனதில் நீண்ட நாள் நிற்கும்.

user_6076

★ 5/5 Feb 02, 2026

இறப்பு என்றால் என்ன என்று தெரியாத இயந்திரம், அதற்கு இணையான இழப்பை அறியும்போது தன்னை அறிகிறது. தன்னை அழிவில்லாததாக மாற்றிக் கொள்கிறது.

ஆனால் பிறந்தது அனைத்தும் அழிந்தே தீர வேண்டும் என்ற விதிப்படி, ஜீனோவின் புரட்சியில் அதுவே அழிந்து போகிறது. இந்த முடிவு இல்லை என்றால் கதை முற்றுப் பெறாமலே போயிருக்கும்.

user_6075

★ 4/5 Feb 02, 2026

மக்களின் நலனுக்காக எதிர்காலத்தில் விஞ்ஞானத் தொழில்நுட்பம் அபார வளர்ச்சியை எட்டியிருந்தாலும், சனநாயக அரசு மக்களின் நலன் காக்க அறம் கொண்டு செயல்படுமா என்ற கேள்வியை முன்வைக்கிறது சுஜாதாவின் 'மீண்டும் ஜீனோ'.

'என் இனிய இயந்திரா' நாவலின் தொடர்ச்சியாக வந்த இந்நாவலிலும் ஜீனோவே கதாநாயகன். ஆனால் இந்தப் பாகத்தில் அதிகாரத்தின் சூழ்ச்சிகளும், அரசியல் சதிகளும் மேலோங்குகின்றன.

user_6074

★ 4/5 Feb 02, 2026

முதல் பாகத்தை முடித்தவுடன் உடனே இந்தப் புத்தகத்தைத் தொடங்கினேன், அதனால் இது ஒரு கலவையான அனுபவமாக இருந்தது. நிலா பொம்மை அரசின் ராணி, ரசாயன மயக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறாள்.

ஜீனோ உயிர் ஆபத்தில் இருக்கும்போது நம்பமுடியாத வழியில் மீண்டு வருகிறது. நேரடியாக முதல் பாகத்திலிருந்து தொடர்வதால் கொஞ்சம் மந்தமாக உணர்ந்தேன்.

user_6073

★ 4/5 Feb 02, 2026

80-90 களில் எழுதிய நூலில் இவ்வளவு அறிவியல் விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விறுவிறுப்பான வாசிப்பு.

ஒரு அத்தியாயம் முடித்தவுடன், அடுத்த அடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தூண்டியது. ஆசிரியருக்கு ஏனோ சனநாயக ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது.

user_6072

★ 5/5 Feb 02, 2026

மீண்டும் துரு-துரு ஜீனோ, நிலா, சிபி, முகத்திரை கிழிக்கப்பட்ட ஹோலோக்ராம் ஜீவா, ரவி மற்றும் மனோ!

விஞ்ஞான மாற்றத்தால் ரசாயனமாகிப் போன மனிதர்களின் உணர்வோடும், தொழில்நுட்பத்தால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தோடும் ஒரு புத்தகம். "என் இனிய இயந்திரா"வில் விட்டுப் போன கேள்விகளுக்குப் பதிலுடன் வந்திருக்கிறது அழகுகுட்டி ஜீனோ.