Reviews for பிரிவோம் சந்திப்போம்
29 reviews total
user_5702
★ 5/5 Feb 02, 2026மதுவுடனான காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று முறிந்த கையோடு அமெரிக்காவுக்குச் செல்கிறான் ரகு. அங்கு மதுவைச் சந்திக்க நேர்கிறது. அதே குழந்தைத்தனம் மாறாத மதுவிடம் அவளது கணவன் பற்றிய உண்மையைச் சொல்லியும் பயனில்லை என்பதை உணர்கிறான் ரகு.
ரகுவுக்காக மது பார்த்த பெண் தான் ரத்னா — அமெரிக்காவில் வளர்ந்தாலும் இந்திய கலாச்சாரம், அறிவு, தெளிவான சிந்தனை என சுஜாதாவின் நாயகியாக மிளிர்கிறாள் ரத்னா.
ரகுவின் தந்தை தனிப்பட்ட விருப்பம். "காதல்ங்கறது இயற்கையின் வழி" என்ற வசனத்தில் தொடங்கி, ரகு காதல் வாழ்க்கைக்கு ஆலோசனை கேட்கும் நேரங்களில் "நான் சொல்லி நீ கேட்க இது என்ன ரிமோட் கன்ட்ரோலா?" எனத் திருக்குறளை அடுக்கிக் கடிதம் எழுதும் இடமெல்லாம் அருமை.
"ஆனந்த தாண்டவம்" படம் பிடித்த அனைவருக்கும் இந்தப் புத்தகம் பிடிக்கும்! "சுஜாதா" பிடித்த எல்லாருக்கும் இன்னும் பிடிக்கும்!
இந்தக் கதையின் பின்னுரை மனதை நெருடியது. ராதாகிருஷ்ணன் போல பெண்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு "Take it easy" என்று சொல்லும் சமூகத்தில்தான் ரகு போன்ற காதலர்களும் வாழ்கிறார்கள். 1983இல் எழுதிய கதை இன்றும் கச்சிதமாய்ப் பொருந்துவது காலத்தின் சோகம்!
"உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே நிலவு" — காதல் தெரிந்த எல்லாரும் படிக்க வேண்டிய கதை.
user_5701
★ 5/5 Feb 02, 2026வெகு நாட்களுக்குப் பிறகு சுஜாதா வாசிப்பு. ரகு மற்றும் மதுமிதா இருவருக்கும் இடையே இயல்பாக நிகழும் காதலை வைத்து முதல் பாகம் நடக்கிறது. சில இடங்களில் ரகுவின் ஒருதலைக் காதலோ என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது மதுமிதாவின் மனநிலை.
காதலுக்கு இடையில் அமெரிக்கா ராதாவின் இடையூறால் மதுமிதாவின் மனம் மாற்றம் அடைகிறது — அல்லது மாற்றப்படுகிறது? ரகுவின் நிலை பரிதாபமாகத் தோன்றினாலும் நிதானமாக யோசித்தால் அவரவர் எடுக்கும் முடிவு அவரவர் பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது.
இரண்டாம் பாகம் — தமிழ் படமாக இருந்தால் எளிதாகக் கணித்துவிடலாம். ஹீரோ ஒரே பாடலில் முன்னேறி கோடீஸ்வரனாகி பழிவாங்கும் படலமாக இருந்திருக்கும். ஆனால் கதை வெகு இயல்பாக நகர்கிறது.
ரகுவின் அப்பா அவனை அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு அனுப்புகிறார். புதிய நாடு, புதிய சீதோஷணம், இந்திய-அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் மனிதர்கள் என்று சராசரி மனிதனை ஒட்டியே புத்தகம் நகர்கிறது. ரத்னா வெகு இயல்பாக இருப்பது புதியதாக இருந்தது.
500 பக்கங்களை 4 நாட்களில் படிக்கும் அளவுக்கு இயல்பான நடை, கதையுடன் ஒன்றிப்போகும் கதாபாத்திரங்கள் என்று பிளஸ்கள் ஏராளம்.
user_5700
★ 5/5 Feb 02, 20262022 பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த கடைசிப் புத்தகம். "ஆனந்த தாண்டவம்" திரைப்படத்தின் டைட்டில் கார்டில் சுஜாதாவின் புகைப்படம் பார்த்தபோதே இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ரகுபதி வேலை தேடும் இளைஞன், அவனிடமிருந்து கதை ஆரம்பம். பாபநாசத்தில் வேலை செய்யும் அப்பாவின் உயர் அதிகாரியின் மகள் மதுமிதா. சுஜாதாவின் வருணனையில் அவள் அழகோ அழகு. அவளின் குறும்பும் வெகுளிப் பேச்சும் ரகுவைக் காதல் வயப்பட வைக்கின்றன.
காதலில் ஒரு பிரிவு மென்மேலும் காதலை வளர்க்கும் உண்மையான காதல் உள்ளவர்களுக்கு. ரகுவும் அதீதக் காதல் அடைந்தான். அவளின் கடிதத்தைக் கூட வரி மாறாமல் ஒப்பிக்கும் அளவுக்கு இருந்தது. ஆனால் அமெரிக்க மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன் வந்தான். அமெரிக்க மோகத்தில் மதுவின் பெற்றோர் வாக்கு தவறி ராதாவுக்கு மதுவைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது.
ரகு காதல் போனால் சாதல் என்றானான். அவனின் அப்பா அவனை மீட்டெடுத்து அமெரிக்கா அனுப்பினார். அங்கு ரகு படிப்பில் இன்னல்களைச் சந்தித்தான். மீண்டும் மதுவைச் சந்தித்தான், நண்பர்கள் போலப் பழகினான். மது ரகுவுக்கு அவனின் வருங்கால பொன்வசந்தமான ரத்னாவை அறிமுகம் செய்தாள்.
ரத்னா மதுவை விட அழகு இல்லை என்றாலும் அறிவாளி. ரத்னா ரகுவைப் புரிந்துகொள்வது மிகவும் நன்றாக இருந்தது — புரிதல் முதலில், காதல் அடுத்து. ராதாவின் குணங்களும் செயல்களும் மதுவைச் சின்னாபின்னமாக்கியது.
நான் படித்த காதல் கதைகளில் பிடித்துப்போன கதைகளில் இதுவும் ஒன்று. நன்றி சுஜாதா.
user_5699
★ 4/5 Feb 02, 2026முதல் புத்தகம் முழுக்க காதலைப் பற்றியது, ஆனால் இரண்டாம் புத்தகம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்துவ ரீதியாக அணுகுகிறது. கதாபாத்திர வளர்ச்சியில் சுஜாதா கைதேர்ந்தவர்.
user_5698
★ 5/5 Feb 02, 2026சுஜாதா அவர்களின் மிகச் சிறந்த காதல் நாவல்களில் ஒன்று. மறக்க முடியாத மூன்று கதாபாத்திரங்கள் — ரகு, மது, ரத்னா.
user_5697
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை பல முறை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஈர்க்கும் கதையும் நடையும்.
user_5696
★ 5/5 Feb 02, 2026நல்ல புத்தகம். சுஜாதாவின் காதல் எழுத்து எப்போதும் போல மனதைத் தொடுகிறது.
user_5695
★ 4/5 Feb 02, 2026கதாநாயகனின் காதல், கதாநாயகியின் காதல், கதாநாயகனின் அப்பாவின் காதல் — என்று காதலை வெவ்வேறு பரிமாணங்களில் கொண்டு சென்று வியக்க வைத்திருக்கிறார் சுஜாதா!
user_5694
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தில் மதுமிதா கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. குறிப்பாக ரகுவின் தந்தை — அவரது பக்குவமான அணுகுமுறையும் அன்பும் கதையின் உயிர்நாடி.
user_5693
★ 5/5 Feb 02, 2026நான் இதுவரை படித்திராத அளவுக்கு அசாதாரணமான காதல் புத்தகம். இதைப் படிக்கும்போது ரகுவைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது.