Reviews for கருவாச்சி காவியம்

30 reviews total

user_5193

★ 4/5 Feb 02, 2026

நூல்களுள் சில மட்டுமே மொழிபெயர்த்தால் தன் சுவையை இழக்கும். அப்படிப்பட்ட நூல்களுள் கருவாச்சி காவியமும் ஒன்று. கவரிமான் பரம்பரையில் பிறந்த காவியம் இது. வட்டார வழக்கே இதன் சொத்து, அதை இழந்தால் உயிர் இழக்கும்.

வரலாற்று அரசர்களையும் வாழாத பாத்திரங்களையும் கண்டு பிரமித்து ஆடி வந்த நம்மை, ஊறிப்போன உண்மை நிலையால் உட்கார வைத்துள்ளார் வைரமுத்து. தனிக்காட்டுப் பூவா இருக்கியேனு ஊர் சொல்ல, தரணிக்கே ராணின்னு வாழறா கருவாச்சி.

எதிர்மறையாக ஒன்றே ஒன்று — தெள்ளிய நீர் போல் போய்க்கொண்டிருந்த புத்தகத்தின் ஓட்டம் இறுதியில் சிறிது கலங்கலாகிறது. தேவையில்லாத திசைகளுக்குப் பாய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

user_5192

★ 1/5 Feb 02, 2026

நான் படித்த மிக மோசமான புத்தகங்களில் ஒன்று. வைரமுத்து மீது இருந்த கொஞ்ச மரியாதையும் இந்தப் புத்தகத்திற்குப் பிறகு போய்விட்டது. இந்தப் புத்தகத்தின் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.

தலைப்புக் கதாபாத்திரம் துன்பத்திற்குப் பின் துன்பமே சந்திக்கிறது, ஒரு மகிழ்ச்சியான தருணம் கூட இல்லை. நிஜ வாழ்க்கையில் யாருடைய வாழ்க்கையும் இவ்வளவு பரிதாபமாக இருக்குமா என்று சந்தேகம்.

கட்டையன் செய்த எல்லாவற்றுக்கும் பிறகு கருவாச்சி அவனைக் கருணையுடன் ஏற்றுக்கொள்வதாகக் காட்டியிருக்கிறார். பெண்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து ஆண்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்ற தவறான செய்தியா இது?

கடைசி அத்தியாயத்தில் வரும் சாமியாரின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை. இனி அவருடைய எந்த புத்தகமும் படிக்கப்போவதில்லை.

user_5191

★ 4/5 Feb 02, 2026

கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு திரைப்படமென்றால், கருவாச்சி காவியம் ஒரு ஆவணப்படம். கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பெரியதேவர் வெள்ளத்தில் மூழ்கி நிலக்கட்டையை எடுக்கும்போது வாசகருக்கு மூச்சு முட்டுமோ, அதே மாதிரி இதில் கருவாச்சி கடைசியில் வியாதிவந்த கட்டையனைத் தூக்கும்போதும் மூச்சு முட்டும்.

படிப்பறிவில்லாத கருவாச்சி, தகப்பனையும் தாயையும் இழந்து, பழிவாங்குவதாக நினைத்து கட்டிக்கொண்ட கட்டையனால் வயிற்றில் பிள்ளையோடு தீர்த்து விடப்பட்டு படும் கஷ்டம் — இதுவே பாதி புத்தகத்தை நனைத்திடுகிறது.

ஒத்தப் பிள்ளையா பிறந்தாலும் முத்துப் பிள்ளையா பிறந்து, அவன் பங்குக்கு அவனும் கருவாச்சியைக் கஷ்டப்படுத்தி, மீதி நம்பிக்கையையும் கிழித்துவிடுகிறான். அடிமேல் அடிவாங்கி, எல்லாவற்றையும் இழந்தாலும் தான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது அர்த்தமில்லாமலா போய்விடும் என்று கடைசி வரைக்கும் நம்பிக்கையோடு நம்மை வழியனுப்பி விடுகிறாள் கருவாச்சி.

கடைசியில் ஊருக்கே பஞ்சம் வரும்போது, ஒழுங்கா ஒரு வாய் சோறு இல்லையென்றாலும், கிடைக்கிறதை வைத்து ஊருக்கே உதவும்போதுதான் கருவாச்சி காவியமாகிறாள்!

user_5190

★ 5/5 Feb 02, 2026

கருவாச்சி காவியம் கிராமத்துத் தமிழ்ச் சூழலில் சமூக அழுத்தங்களையும் தனிப்பட்ட போராட்டங்களையும் எதிர்கொள்ளும் கருவாச்சி என்ற பெண்ணின் வாழ்க்கையை ஆழமாக ஆராயும் நாவல்.

வைரமுத்துவின் எழுத்து கிராமத்தையும், அதன் மக்களையும், பழக்கவழக்கங்களையும் உயிரோட்டமாகக் கொண்டுவருகிறது. பாலினம், சமூக விதிமுறைகள், மீள்திறன், கண்ணியம் ஆகிய கருப்பொருள்களை முன்னிலைப்படுத்தி, ஒரு பெண் எவ்வாறு தைரியத்துடனும் உறுதியுடனும் சவால்களை எதிர்கொள்கிறாள் என்பதைக் காட்டுகிறது.

மனித போராட்டங்களின் பச்சையான சித்தரிப்பு இந்நூலை மறக்க முடியாததாக்குகிறது. கருவாச்சியின் பயணம் உணர்வுபூர்வமாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.

user_5189

★ 1/5 Feb 02, 2026

கருவாச்சி காவியம் — அபத்தம். படிக்க ஆரம்பிச்சப்ப நல்ல கதை தேர்ந்து எடுத்த உணர்வு தந்தது, ஆனா வாசித்துச் செல்லச் செல்ல மோசமான கதையைத் தேர்வு செய்த உணர்வு வந்துவிட்டது.

பல அபத்தமான நிகழ்வுகள் இருந்ததால் நல்லா எழுதியிருந்த சில விஷயங்களைக் கூட ரசிக்க முடியாமல் போனது. எழுத்து நடை சுத்தமாப் பிடிக்கவில்லை. வரிகளை வாசிக்கும்போது மூளைக்குள் வைரமுத்து குரல்தான் ஓடியது. நாவலை ஒன்றி வாசிக்க முடியவில்லை.

சாமியார் வரும் வரை நல்ல கதாபாத்திரமாகப் போகிற கருவாச்சி, சாமியாரிடம் உரையாடும் போது தன் இயல்பிழந்து மகா ஞானியாக ஆகிவிடுகிறது. இந்தக் கதாபாத்திரம் அழுவதே தவிர எந்த இடத்திலும் கோபப்படவே இல்லை. ஒரு மனிதருக்கு உண்டான எந்த இயல்பும் இல்லாமல் ஞானி போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது — இது ரொம்பவே அபத்தம்.

நாவலின் முடிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கொண்ணவாயன் என்ற நல்ல கதாபாத்திரத்தை இன்னும் விரிவா எழுதியிருக்கலாம். இந்த நூலில் என் மனதில் நின்றது கொண்ணவாயன் தவிர யாரும் இல்லை.

கருவாச்சி குழந்தை பெறும் அத்தியாயம் மட்டும் நல்ல உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருக்கிறது. நூல் படித்து முடிக்கவும் பல பழைய படங்கள் பார்த்த உணர்வுதான் இருந்தது. இதைக் காவியம்னு சொல்கிறார்கள், ஆனா ஒரு கதையாகக் கூட மனசில் தங்க மாட்டேங்குது.

user_5188

★ 5/5 Feb 02, 2026

என்னை அழ வைத்த முதல் புத்தகம். சில பக்கங்களை வாசிக்கும்போது கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். கதை முழுவதும் மனம் கனமாக இருந்தாலும், இறுதியில் மிகவும் நேர்மறையான உணர்வைத் தந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் அற்புதமானவை.

user_5187

★ 5/5 Feb 02, 2026

இதுவரை படித்ததில் மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. மறக்க முடியாத வாசிப்பு அனுபவம்.

user_5186

★ 5/5 Feb 02, 2026

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று — தன்னம்பிக்கை உடையவரே எல்லாம் உடையவர். தன்னம்பிக்கை இருந்தால் தன்னை எந்த சூழலிலும் காப்பாற்ற முடியும் என்பதை கருவாச்சி மூலமாக வைரமுத்து வடித்த காவியம்.

பல இடங்களில் மனதை வலிக்கச் செய்த படைப்பு. குறிப்பாக கருவாச்சி பிரசவ நேரம் கண்களைக் கலங்க வைத்தது.

user_5185

★ 4/5 Feb 02, 2026

ஒரு வழியா முடிச்சாச்சு இந்தப் புத்தகத்தை. இறுதி முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்னு தோன்றியது, ஆனா இந்த முடிவும் ரொம்ப அருமை. ஒரு முழு நீளக் கிராமியப் படைப்பு. அவசியம் படித்துப் பழக வேண்டிய நடை.

user_5184

★ 4/5 Feb 02, 2026

தமிழ்நாட்டு கிராம வாழ்க்கையின் அற்புதமான சித்தரிப்பு. கதாபாத்திரங்கள் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மக்களின் வாழ்க்கையை வாசகரின் கண்முன் கொண்டுவருகிறார், சுற்றுப்புறத்தையும் கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் கற்பனை செய்ய முடிகிறது. ஒட்டுமொத்தமாக நல்ல வாசிப்பு அனுபவம்.