Reviews for கி.மு கி.பி
28 reviews total
user_5091
★ 4/5 Feb 02, 2026மதன் மிகச் சுவாரசியமான மொழியில் எழுதிய ஆர்வமூட்டும் புத்தகம். 190 பக்கங்களில் மனித குலத்தின் வரலாற்றைப் பேசுகிறது. அற்புதமான கதைகளும் தகவல்களும் நிறைந்த பன்முகப் புத்தகம்.
user_5090
★ 3/5 Feb 02, 2026"மனிதர்கள் நடந்தே உலகெங்கும் பயணிக்க வசதியாகத் தொடக்கத்தில் இறைவன் கண்டங்களை இணைத்திருந்தான்" - மதன் சார்! அவரு இணைச்சாரு, நீங்க பாத்தீங்களா?
"இத்தாலிய மண்ணிலுள்ள ஏதென்ஸ், ஸ்பார்ட்டா..." சார் போதும். இத்தோட நிறுத்திக்கோங்க அறிவியல் கட்டுரை, புத்தகங்கள் எழுதுறத.
நிறைய எழுத்துப் பிழைகள். படிக்கவே கஷ்டமா இருக்கு! ஆழமாக வரலாறு அறிய யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் போன்ற புத்தகங்களைப் படிப்பது நல்லது.
user_5089
★ 3/5 Feb 02, 2026ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இந்தத் துறையில் தன் நிபுணத்துவமின்மையை ஒப்புக்கொள்கிறார். உயிரினங்களின் தோற்றத்திலிருந்து கிறிஸ்து பிறப்பு வரை விவரிக்கிறது. புத்தகத் தலைப்பு கி.மு கி.பி இரண்டையும் குறிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தாலும், கி.மு காலத்தின் மிகச் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கியது. ஈர்க்கும் தமிழில் எழுதப்பட்ட உலக வரலாற்றின் சுருக்கமான பதிப்பு இது. ஆழமாகக் கற்க விரும்பாமல், வரலாற்றுத் தகவல்களைப் பேச்சில் பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்றது.
user_5088
★ 4/5 Feb 02, 2026புத்தகம் காலத்தின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. எழுத்தாளர் மதன், பூமியில் முதல் மனிதன் ஆணல்ல, ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு பெண் என்று வலியுறுத்துகிறார். இது ஒரு சுவாரசியமான தகவல்.
பாரசீகப் பேரரசு, கிரேக்கப் பேரரசு உள்ளிட்ட பல்வேறு பேரரசுகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் மனித நாகரிகத்தில் முக்கியப் பங்காற்றிய ரோமானியப் பேரரசைப் பற்றி அதிகம் பேசவில்லை என்பது குறை.
மௌரியப் பேரரசு எப்படி கிரேக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவைக் காத்தது என்பதோடு புத்தகம் முடிகிறது. பண்டைய இந்தியப் பேரரசுகள் (சோழப் பேரரசு உட்பட) தங்கள் படையிலும் நகரப் பாதுகாப்பிலும் கிரேக்க வீரர்களைப் பயன்படுத்தினர் என்பது மற்றொரு சுவாரசியமான தகவல்.
தமிழ்ப் புத்தகத்தில் அடிக்கடி "Wow" போன்ற ஆங்கிலச் சொற்கள் வருவது சற்று உறுத்தலாக இருக்கிறது. மொத்தத்தில் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நல்ல புத்தகம்.
user_5087
★ 4/5 Feb 02, 2026நீங்கள் ஆர்வமுள்ளவராக இருந்து, இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடியிருந்தால் இதைப் படியுங்கள்! ஆங்கிலத்தில் ஏன் அடிக்கடி கிரேக்கச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்? போலீஸ் என்ற பெயர் எப்படி வந்தது? மருத்துவ மாணவர்கள் ஏன் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி எடுக்கிறார்கள்? மாரத்தான் ஓட்டம் ஏன் அப்படி அழைக்கப்படுகிறது? சாக்ரடீஸுக்கு ஏன் நஞ்சு கொடுக்கப்பட்டது, அவர் ஏன் அதை ஏற்றுக்கொண்டார்? மௌரியர்கள் ஏன் இந்திய வரலாற்றின் மாபெரும் வம்சமாகக் கருதப்படுகிறார்கள், சந்திரகுப்த மௌரியரின் பங்கு என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பூமி 250 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது என்பதை நம்புகிறீர்களா? மனித பரிணாமம் எப்படி தொடங்கியது என்று தெரியுமா? எளிமையான தமிழ் மொழியில் புரிந்துகொள்ள அருமையான புத்தகம். என் ஒரே ஆலோசனை - புத்தகத் தலைப்புக்கேற்ப கி.பி காலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
user_5086
★ 1/5 Feb 02, 2026தமிழர்களின் அறிவியல் தேடலைச் சிதைக்க வந்த தேவையில்லாத நூல். மனித வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன் என்னும் பெயரில் தப்பும் தவறுமான பல செய்திகளை வாசகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
அறிவியல் எழுத்தாளர்களை அரைகுறையாகப் படித்துவிட்டு, பத்து நிமிடத்தில் நூல் சுருக்கம் தரும் காணொளிகளில் இருக்கும் அறிவியல் அடிப்படை கூட இந்த நூலில் இல்லை.
இந்த நூலுக்குப் பலர் எழுதிய விமர்சனத்தைப் பார்த்ததும் எனக்கு நெஞ்சில் இடியே விழுந்துவிட்டது. மொத்தத்தில் "ஆதிமனிதன் ஒரு பெண்" என்ற புரிதல் தான் படித்தவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. "பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மண்ணு விழ" என்று நினைத்துக்கொண்டு நகர வேண்டியிருக்கிறது.
அறிவியலைச் சுருக்கமாகச் சொல்ல முயல்வதில் தவறில்லை, ஆனால் அறிவியல் உண்மைகளையும் கோட்பாடுகளையுமே மக்கள் தவறாகப் புரிந்துகொள்கிற அளவில் சுருக்கமாகச் சொல்லக் கூடாது.
தான் எழுதுகிற அறிவியல் துறையில் எந்தத் தேர்ச்சியும் பெறாமல், தேர்ச்சி பெற எந்த முயற்சியும் செய்யாமல், எழுதியதைத் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு சரிபார்க்காமல் நூல் வெளியிடும் பத்திரிகைத் துறையினர் மீது பெரும் வெறுப்புண்டு.
user_5085
★ 5/5 Feb 02, 2026உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்" தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!" என உள்ளூர் சந்தோஷம் தருகிறார். உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் நடந்தது என வரலாறு தெரிந்துகொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் பாணியில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!
user_5084
★ 5/5 Feb 02, 2026வரலாற்றை அவ்வளவு சுவாரசியமாகச் சொல்ல மதனால் மட்டும்தான் முடியும். முதல் ஆதிமனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதுதான் இந்தப் புத்தகத்தின் முதல் வரி. ஆதாரம்: மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவள் விட்டுச் சென்ற காலடித்தடம் மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. முதல் ஆதி மனிதர்களில் பலவகையான மனிதர்கள் இருந்தார்கள் என்றும், அவை எல்லாம் அழிந்து மீதம் இருந்த இரண்டே இனம் நியண்டர்தால் மற்றும் க்ரோமேக்னன் மட்டும்தான் என்றும், இதில் க்ரோமேக்னன் என்னும் இன்றைய மனிதர்களாகிய நம்மால் அழிக்கப்பட்டது நியண்டர்தால் இனம் என்று வரும்போது எரிகிற ஆர்வத்தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆகிறது.
இப்படிப் பல வரலாற்று நிகழ்வுகள் அடுத்தடுத்து அடுக்கிவைத்து ஆச்சர்யத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டுபோகிறார் மதன். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உருவாகிய நாகரிகம், அவற்றின் வளமை, அழிவு என்றும், முக்கியமாக இந்திய நாகரிகத்தைப் பற்றிக் கூறும்போதும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பாரசீகம், ஏதென்ஸ், ரோமானியம், எகிப்து, பாபிலோன், இந்தியா என்று அனைத்து நாகரிக வரலாற்றுப் பதிவுகளையும் முக்கியக் கட்டங்களையும் சுவை குன்றாமல் காட்டிச் செல்கிறார். அதில் உச்சகட்டமாகச் சிந்து நாகரிகத்தின் மொழி பண்டைய தமிழ் என்றும், அதை நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும் இதுவரையில் ஆராய்ச்சிச் சாத்தியக் கூறுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன என்று அறியும்போது பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.
மொத்தத்தில் படித்து முடித்தவுடன் தலை முழுதும் பல செய்திகள் ஏறிவிட்டதுபோல் ஓர் உணர்வு. சரித்திரப் புத்தகத்தைப் படிக்கும்போது இப்படிப்பட்ட உணர்வு வரும் என்றால், அது ஆசிரியரின் சுவை குன்றாமல் கொண்டுசெல்லும் திறமையினால் மட்டுமே.