ஹாய் மக்களே...
யாரிந்த தேவதை...!!! என்னும் காதல் கதையின் சிறு அறிமுகம்:
MR. மிடுக்கு…
SS குரூப்ஸின் நிர்வாக இயக்குனராய் இருக்கும் தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் சிவபிரசாத்தின் இலக்கணப்படி சிறந்த தொழில் அதிபராக இருக்க வேண்டுமெனில்…
-
ஒவ்வொரு நொடியையும் உபயோகமாய் செலவிடு.
-
பணத்தை செலவு செய்யும் முன் பலமுறை யோசி.
-
ஆதாயம் இல்லையெனில் சுண்டுவிரலைக் கூட அசைக்காதே.
-
அதிகம் பேசாது எதிராளியை பேசவிட்டு விஷயம் வாங்கு.
-
மறந்தும் சிரிக்காதே.
-
ஆயிரம் பேர் இருந்தாலும் நீ மட்டும் தனித்து தெரியும்படி பார்த்துக்கொள்.
-
மிடுக்கும் கம்பிரமுமாய் இரு.
-
நேரத்தையும், பணத்தையும் வீணாக்குபவன் பிஸினஸ்மேனுக்கான தகுதியை இழக்கிறான். இவையே எதிராளியை மிரள வைக்கும் சூட்சமம்.
யப்பா!!! நல்லா வருவடான்னு சொல்லத் தோணுது இல்லையா...? அப்படியே கீழே போய் இவனுக்கான இணையோட குணாதிசயங்களையும் பாருங்க... என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மான்னு சொல்வீங்க.
MS. எடக்கு…
சக்தி ஃபயர் ஒர்க்ஸ் ஓனர் சண்முகசுந்தரத்தின் செல்ல மகள் நாட்டிய தாரகை சக்தியின் இலக்கணப்படி நல்ல மனிதனாக வாழ வேண்டுமெனில்...
-
ஒவ்வொரு மணித்துளியையும் உயிர்போடு வாழ்.
-
பணம் சம்பாதிப்பதே செலவு செய்யத்தான்.
-
மனிதர்களை எடை போடாதே.
-
வாய் இருப்பதே பேசவும் சிரிக்கவும் தான்!
-
நல்லா சிரிங்க பாஸ்!
-
சக மனிதனை உனக்கு சமமாய் மதி.
-
அன்பும், அனுசரணையுமாய் இரு.
-
நாலு பேரை சந்தோஷமா வச்சுக்க பணத்தையும், நேரத்தையும் கணக்கு பார்க்காமல் செலவு செய்பவனே சிறந்த மனிதன். என்னும் உயரிய கொள்கைகளோடு குதூகலமா வாழறவங்க தான் நம்ம நாயகி MS. எடக்கு.
இருவேறுபட்ட துருவங்கள் ஈர்க்கும் என்னும் விதிப்படி இவர்களிடையே உண்டாகும் மோதல் காதலாக மாறி ம்ஹூம்.... காதல் வயப்பட்டு, காதலாகி கசிந்துருகி... அது திருமணத்தில் முடிந்து, அதன் பிறகு இருவரின் வாழ்வும் எப்படி திசை மாறும் என்பது தான் கதை.
யாரிந்த தேவதை...?
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி! என்னும் நினைப்பு மாறி
அருந்த வாலு... குறும்பு தேளு...
ஆனாலும் நீ ஏஞ்சலுன்னு சொல்வாரா MR. மிடுக்கு...?
கதையை படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.