காவ்யாவும் கருப்புசாமியும்...!!!
"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." நிலம் பார்த்தபடி சொன்னாள்.
"கொஞ்சம் என்ன நிறையவே பேசலாம்... அதுக்காக விலகி நிற்கணும்னு எந்த அவசியமும் இல்லை. மாமா மடியில இப்படி ஜம்முன்னு உட்கார்ந்துக்கிட்டே பேசலாம்" என்றவன் பூங்கரம் பற்றி இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"ஐயோ! விழுந்துடப் போறேன்... ப்ளீஸ் விடுங்க..."
"அப்படியா உன்னை கீழ விழ விட்டுருவேன்? அவ்வளவு பயமா இருந்தா என் கழுத்தை கட்டிக்கடி!" கள்ளச் சிரிப்புடன் சொல்ல,
வேறு வழியின்றி தன் கரங்கள் இரண்டையும் மாலையாக்கி அவன் கழுத்தைச் சுற்றி படரவிட, அவனும் தன் கரங்கள் கொண்டு மெல்லிடையை வளைத்து பிடித்திருந்தான்.
'டேய் நான் பேசப் போற விஷயத்துக்கும், உட்கார்ந்திருக்க போஸுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லடா... நீ என்னை ரொம்ப படுத்துற!' உள்ளூர நொடித்தவள்,
"பாருங்க... எனக்கு உங்கள பிடிக்கல...!" பட்டென போட்டுடைக்க, அவனோ உலகத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல் ஹா ஹாவென சிரித்து வைத்தான்.
"நான் உங்கக் கூட பழகவும் வேண்டாம்... புரிஞ்சுக்கவும் வேண்டாம்... நீங்க லாயர் தானே? சீக்கிரம் விவாகரத்து வாங்கித் தாங்க, அதுக்கு ஃபீஸா நீங்க என்ன கேட்டாலும் தர்றேன்!"
"விவாகரத்தா?" என்றவன் ஒரு நொடி அரண்டு தான் போனான்.
"ம்ம்...!" மிடுக்காய் பதில் கொடுக்க,
"ஃபீஸ்-ஆ என்ன கேட்டாலும் தருவியா?" கூர் பார்வையுடன் கொக்கி போட்டு நிறுத்த,
"ம்!" மீண்டும் மிதப்பாகவே பதில் வந்தது.
"ஆயுசுக்கும் என்னோடவே இருக்கனும், என் பிள்ளையை உன் வயித்துல சுமக்கனும்னு கேட்டா...?!"
"ஹலோ! என்ன விளையாடுறீங்களா? அதெப்படி முடியும்?"
"முடியாதுல்ல...! அப்போ எதையும் சொல்றதுக்கு முன்ன நல்லா யோசிச்சு பேசு..."
"லாயர் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? தப்பு தான்… மன்னிச்சுக்கோங்க! இதை மனசுல வச்சுக்கிட்டு டைவர்ஸுக்கு அப்ளை பண்றதை தள்ளி போட்டுறாதீங்க...!"
"நான் உனக்கு டைவர்ஸ் தரேன்னு சொன்னேனா?"
"நான் தான் உங்க கூட வாழ முடியாதுன்னு சொல்லிட்டேனே...!"
"நீ முடியாதுன்னு சொன்னா எல்லாம் முடிவுக்கு வந்துடுமா? அப்போ ஆசை, ஆசையா கல்யாணம் பண்ணின நான் கேனப்பய... அப்படி தானே?!" உக்கிரமாய் உறும, அவள் மிரண்டே போனாள்.
"இங்க பார்... உனக்கு பிடிச்சிருக்கோ... பிடிக்கலையோ இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி... என்னோட வாழ்ந்து தான் ஆகணும், புரிஞ்சுச்சா?!"
"அப்படியெல்லாம் நீங்க ஃபோர்ஸ் பண்ண முடியாது... நான் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுப்பேன்"
"கிழிப்ப! நேத்து எத்தனை முறை உன்னை தனிமையில சந்திச்சேன்... அப்பவே பிடிக்கலைன்னு சொல்லி தொலைக்க வேண்டியது தானே? என்னை பிடிக்காதவ என் தொடுகையை மட்டும் ஏன்டி ரசிச்ச?"
"இல்ல... நான் எதையும் ரசிக்கல!" அவள் பதறியடித்துக் கொண்டு சொல்ல,
"என் கையணைப்பை, கனிவாய் முத்தத்தை நீ ரசிச்ச, அதை உள்வாங்கி உருகிக் கரைஞ்ச… நான் அதை உணர்ந்தேன்... நீ தான் இன்னும் உணரலை!"
"இல்ல... இல்ல... இல்ல! நீங்க பொய் சொல்றீங்க! நீங்க தொட்டப்போ எனக்கு கம்பிளிப்பூச்சி ஊறுறது மாதிரி அருவருப்பா தான் இருந்திச்சு!"
"கம்பிளிப்பூச்சி ஊறுற மாதிரி இருந்துச்சா? என்ன ஒரு திமிர் பேச்சு?" மடியில் இருந்தவளை பட்டென மெத்தையில் சாய்த்தவன் அவள் மீது படர,
"என்ன பண்றீங்க? விடுங்க...!" அவனிடம் இருந்து விடுபட அவள் போராட,
"ஒட்டுமொத்தமா உன் உடம்பு முழுக்க கம்பிளி பூச்சி ஊறினா எப்படி இருக்கும்னு காட்டப் போறேன்!" சிடுசிடுத்தவன்,
கன்னத்தோடு கன்னம் இழைத்தான். அவளது அதரங்களை கவ்வி குருதி கசிய கடித்தான். கழுத்தடியில் முகம் புரட்டினான்...
கருப்புசாமி மற்றும் காவ்யா இருவரின் கல்யாண வாழ்வில் காதல் மலருமா... இல்லை மண்ணோடு மண்ணாய் மக்கிப் போகுமா... என தெரிந்துகொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.