“ராட்சஷிடி நீ! முகம் மலர சிரிக்கிற... கண்கள்ல மோக வலை விரிக்கிற... இடை நெளிய இம்சிக்கிற... இத்தனைக்கு அப்புறமும் கட்டுப்பாடோட இருக்க நான் என்ன ரோபோவா?
எத்தனை நாள் என்னை பாடாய் படுத்தியிருக்க... இன்றைக்கு மாட்டினியா?” அவளது கன்னத்தை பல் படாமல் செல்லமாய் கவ்வி, மெதுவாய் தாடை நோக்கி உதடுகளால் ஊர்ந்து சென்று நறுக்கென்று கடித்துச் சிரித்தவன்,
“கட்டிக்கோங்க மாமா... உங்களை முழுசா உணரணும்னு வம்பு பண்ணல்ல... இப்போ கட்டிக்கலாம் வா... லிவின்ல இருந்து குழந்தை பெத்துக்கலாமான்னு கேட்டல்ல... பெத்துக்கலாம்! உன் இன்ஸ்ட்ரக்ஷன் ஃபாலோ பண்ண சொன்னல்ல... நான் கற்றுத் தரேன் வா... கட்டில்ல கருணை எதிர்பார்க்காத...” என்றவன் அவள் சுதாரிப்பதற்குள் மேலாடை கலைந்திருந்தான்...
“மாமா...!” கூச்சமும், வெட்கமும் போட்டி போட பூங்கரங்கள் கொண்டு அங்கம் மறைக்க,
“படுத்தாத பாப்பா...” மெலிதாய் முணுமுணுத்து பூங்கரங்கள் விலக்கி பூக்குவியலுள் தன்னை புதைத்துக் கொண்டவன், அன்று கனவில் கண்டதையெல்லாம் இன்று நிஜமாக்கினான்.
தேகமெங்கும் கவ்வி உறுஞ்சி கன்றச் செய்தான். வலிக்கும், சுகத்திற்கும் நடுவில் பெண்ணவளை பந்தாடினான். ஒரு கணம் சுகத்தின் உச்சம் காட்டியவன் அதை முழுவதுமாய் உணருவதற்குள் வலியின் வீரியம் காட்டி குளிருக்கும், நெருப்புக்கும் நடுவில் நிறுத்தி நிலைதடுமாற வைத்தான்.
“முடியல மாமா... ப்ளீஸ்...” சுக வேதனையில் இடை துள்ளி, கை நெறித்து, உடல் தளர்ந்து சரிந்தவளை வாரி அணைத்து தன் மீது போட்டுக் கொண்டவன்,
“என் குழந்தையை உன் வயிற்றில் சுமக்கனும்னு ஆசைப்பட்டல்ல? அப்போ இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்...!” உணர்வுகள் துடைத்த குரலில் சொல்ல... துள்ளி விலகியவள்,
“இதெல்லாம் அதுக்காகத் தானா?” பெரும் ஏமாற்றம் சூழக் கேட்டாள்.
“அப்போஸ்... நடக்காத விஷயத்தை நடந்தது மாதிரி சித்தரிச்சு... எல்லோரையும் நம்ப வச்சு என்னை அசிங்கப்படுத்தின உன்னோட ஆசைப்பட்டா கூட முடியும்? நீ எங்கிட்ட மூணு விஷயம் கேட்ட...
என் கையால தாலி கட்டிக்கணும்,
சாகுறவரை என்னோடவே இருக்கணும்...
என் குழந்தையை உன் வயிற்றில்
சுமக்கனும்! இதில் ரெண்டு நிறைவேறிடுச்சு.
என்னோட செயினை நானே கழட்டி உனக்கு போட்டுவிட்டேன் இல்லையா? அது முதல் விஷயம். ரெண்டாவது என்னோடவே எப்போதும் இருக்கிறது, அதுவும் நிறைவேறின மாதிரி தான். ஏன்னா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லை.
உன்னால முடிஞ்சா கடைசி வரை என்னோடவே இருக்கலாம். முடியலைன்னா எந்த நிமிஷம் வேணாலும் என்னை விட்டு போகலாம். நானா உன்னை போகச் சொல்லமாட்டேன். மூன்றாவதையும் நிறைவேறிட்டா என் கடமை முடிஞ்சுடும் பாரு... அதுக்கு அப்புறம் நமக்கு நடுவே எதுவும் இருக்காது. நானும் நிம்மதியா இருப்பேன்! அதுக்காகத் தான் எல்லாம். மத்தபடி உன்மேல காதலும் இல்ல, காமமும் இல்ல... மனசில் வை!”
இவ்வளவு நேரமும் சுகச் சுழலில் சிக்கி தவித்தவள் இப்பொழுது மரண வேதனையில் மாட்டிக் கொண்டது போல் துடித்துப் போனாள். விசும்பலும், கேவலுமாய் விலகி படுத்தவள் வெகு நேரத்திற்கு பிறகும் தூங்காமல் தவிக்க...
“இப்படி அழுது கரையிறதால ஆகப் போறது எதுவும் இல்லை. வினை விதைச்சா அதை அறுக்கத் தான் வேணும். இதெல்லாம் நீயா விரும்பி வாங்கிக்கிட்டது தான். இதில் என் தப்பு எதுவும் இல்லை. எவ்வளவு சீக்கிரம் குழந்தை உண்டாகுதோ அவ்வளவு சீக்கிரம் ரெண்டு பேருக்குமே இதில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஏன்னா நானும் இதை ஆசைப்பட்டு பண்ணல... முற்றிலுமா வெறுக்கிற ஒருத்தியோட படுக்கிறதை விட வேதனையான விஷயம் வேறேதும் இல்லை. விடிகாலை கூடல் குழந்தைக்கு அதிக வாய்ப்பை உருவாக்குமாம், தயாரா இரு.” அறிவுறுத்தியவன் அமைதியாய் சயனிக்க...
நமது நாயகனுக்கும், நாயகிக்கும் நடுவில் அப்படி என்ன தான் நடந்திருக்கும்? ஏன் அவளிடம் அவன் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறான்? அவள் அப்படி என்ன தவறு செய்தாள்? இனி இவர்கள் வாழ்வு என்னவாகும்? தெரிந்துகொள்ள கதையை படியுங்கள்...