Reviews for தண்ணீர் தேசம்
30 reviews total
user_21853
★ 3/5 Feb 08, 2026கவிதை நடையிலான நாவல் படிப்பது இதுவே முதல்முறை. கடல் நேசம் கொண்ட காதலன், தண்ணீர் பயம் கொண்ட காதலி, நான்கு மீனவர்களுடன் கடலில் சிக்கிக்கொள்ள... இவர்கள் மீண்டு கரை சேர்ந்தார்களா என்பதே கதை. கலைவண்ணன் எளிமையான பத்திரிகையாளன், தமிழ்ரோஜா மென்மையான வசதிப்படைத்தவள். அனைவரும் நல்லவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் - வில்லன்கள் படகும் கடலும் சூழலும் தான். பக்கங்கள் படபடத்த வேகமே கதையின் சுவாரசியத்தைப் பறைசாற்றும். வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
user_21852
★ 5/5 Feb 08, 2026வைரமுத்துவின் எழுத்தில் தமிழ் ஆதிக்கமே அதிகம். அவர் தமிழ்க் கடலின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட முத்து. மிகச்சிறந்த விஞ்ஞான படைப்பான தண்ணீர் தேசம், கடலின் கதைகளைச் சொல்கிறது. கலைவண்ணன் உள்ளம் திருடும் கள்ளன், தமிழ்ரோஜா பெண்மையின் அடையாளம். மீனவர்களோடு கடல் சென்று, படகு பழுதாகி, திசை தவறி, பட்டினியோடும் வாடைக்காற்றோடும் போராடி, புயலின் கோர அணைப்பும் சேர வெளவெளக்க வைக்கும் கதைக்களம். கடல், தமிழ் இரண்டின் மேலும் கொண்ட ஒப்பற்ற காதலுக்கு தலைவாழை விருந்து - தண்ணீர் தேசம்.
user_21851
★ 5/5 Feb 08, 2026அண்மையில் வாசித்து வியந்த புத்தகம் கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். நான் வாசித்த இரண்டாவது வைரமுத்து புத்தகம். மூன்று நாட்களில் பூமியில் இருந்தே கடல் பயணம் சென்று வந்த நினைவு! உவமைகளின் தேசம், கற்பனை நதிகள் கலந்த தேசம், வாழ்க்கையின் நியாய அநியாயங்களை வேரறுத்த தேசம். ஆக்சிஜெனுடன் நம்பிக்கையையும் சுவாசித்தால் மரணத்தையும் வென்றுவிடலாம் எனப் பாடம் நடத்திய தேசம். கடலோர மக்களின் வாழ்க்கை பிரதிபலிப்பிற்கான தேசம். காதல் - தசை நேசமல்ல, உயிர் நேசம் என்பதை உணர்த்தும் உறவுகளின் தேசம்.
user_21850
★ 1/5 Feb 08, 2026நன்றாகத்தான் இருந்தது. பல இடங்களில் வரிகள் வலிந்து கவிதைப்படுத்தப்பட்டிருப்பது போல் பட்டது. இதற்குப் பின்பு அவர் எழுதிய புதினங்களில் இருக்கும் உரைநடையே இதைவிடப் பல மடங்கு வலிமையாக இருக்கிறது. அறிவியல் சார்ந்த தகவல்கள் பற்றி நிறையப் பேர் பெருமையாகப் பேசுகிறார்கள். ஆனால் அவற்றை ஏற்கனவே வேறு இடங்களில் படித்தவர்களுக்கு சலிப்பூட்டுவதாகவும் இருக்கலாம். எப்போதாவது வாசிப்போருக்கு மிகவும் பிடிக்கிற நூலாக இருக்கலாம். தீவிர வாசிப்புப் பழக்கம் உடையவர்கள் இதைப் பெரிதாகப் போற்றிப் புகழ வாய்ப்பு மிகக் குறைவே!
user_21849
★ 5/5 Feb 08, 2026தாய்மொழியில் சிறந்த புத்தகத்தை வாசிப்பதே பேரின்பம். வைரமுத்து கவிப்பேரரசு, கவியரசு. ஒவ்வொரு பக்கமும் தேன்சுவை, வாழ்க்கைத் தத்துவங்கள். மறக்க முடியாத புத்தகமாக எனக்கு அமைந்தது. படிக்கும் உங்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.
user_21848
★ 5/5 Feb 08, 2026உண்மைகள் நிறைந்த, கவிதை நடையிலான அழகான படைப்பு. அறிவியல் தகவல்கள் கவித்துவமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
user_21847
★ 5/5 Feb 08, 2026முற்றிலும் அற்புதமான புத்தகம். வைரமுத்துவின் எழுத்து நடை பிரமிக்க வைக்கிறது.
user_21846
★ 1/5 Feb 08, 2026வர்ணனைகள் சலிப்பூட்டின. கதை நடை கவிதையாக இருந்தாலும், அதிகப்படியான வர்ணனைகள் படிப்பதை சோர்வாக்கின.
user_21845
★ 4/5 Feb 08, 2026காதல், பயணம், பசி, கடல் வாழ்வு என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நல்ல கதை. ஆனால் சில இடங்களில் விவரணைகள் தேவையில்லாமல் நீண்டிருக்கின்றன.
user_5353
★ 5/5 Feb 02, 2026நான் இதுவரை படித்த புத்தகங்களில் மிகச் சிறந்தவற்றில் ஒன்று. மறக்க முடியாத வாசிப்பு அனுபவம்.