Reviews for நீயும் நானும்!
17 reviews total
user_21625
★ 3/5 Feb 02, 2026கோபிநாத் தனது சொந்த அனுபவங்களை எளிமையாகப் பகிர்ந்துள்ளார். வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களை நேரடியாகச் சொல்லும் பாணி புத்தகத்தின் சிறப்பு.
user_21624
★ 3/5 Feb 02, 2026கோபிநாத்தின் மற்றொரு ஊக்கமளிக்கும் படைப்பு. இளைஞர்களுக்கான பல்வேறு தலைப்புகளைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் மிகவும் ஆழமான பார்வை இல்லை. சுமாரான வாசிப்பு அனுபவம்.
user_21623
★ 5/5 Feb 02, 2026எளிமையான நடையில் எழுதப்பட்ட சிறந்த சுய முன்னேற்றப் புத்தகம். கோபிநாத்தின் அனுபவங்களும் பார்வைகளும் மிகவும் ஊக்கமளிக்கின்றன.
user_21622
★ 4/5 Feb 02, 2026யதார்த்தமான மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்குத் தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிப் பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.
user_21621
★ 5/5 Feb 02, 2026காலம் கடந்து படிக்கும் போது இன்னும் அதிக அர்த்தம் தரும் புத்தகங்கள் சில உண்டு. கல்லூரி நாட்களில் படிக்காமல், வேலைக்குச் சேர்ந்த பிறகு படித்ததில் மகிழ்ச்சி.
கோபிநாத்தின் பார்வையும் சிந்தனை முறையும் மிகவும் அர்த்தமுள்ளவை. இது ஒரு உத்வேகமூட்டும் புத்தகம். தன்னைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அக்கறை கொள்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
user_21620
★ 4/5 Feb 02, 2026தொலைக்காட்சித் தொடர்கள் 10 அத்தியாயங்கள் தாண்டுவதே சிரமமாக உள்ள நேரத்தில், ஒரு நிகழ்ச்சி 15 வருடங்களாக வெற்றிகரமாக நடத்துவது என்றால் கோபிநாத்தின் பெரும் பங்கு உள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை.
விகடனில் வெளிவந்த 45 கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். உலகளவில் அதிக இளைஞர் சக்தி கொண்ட நாடு இந்தியா. ஒலிம்பிக்கிற்குச் செல்லும் எண்ணிக்கை குறைகிறதே என்ற சந்தேகம் பலருக்கும் வரும். பணி நிமித்தமாகப் பல துறை வல்லுநர்களிடம் நேர்காணல் கண்ட அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். நடிகை பத்மினி பற்றிக் கூறியிருப்பது மிகவும் சிறப்பு.
இன்னும் சிவப்பு நிறம் தான் அழகு என்ற நினைப்பு இருக்கிறது. ஊடகங்களில் வரும் விளம்பரங்களில் சிவப்பழகு சார்ந்தவை இன்னும் அதிகம். சிந்திக்கத் தூண்டும் நல்ல புத்தகம்.
user_21619
★ 5/5 Feb 02, 2026"நீயா நானா" கோபிநாத் படம் போட்டிருக்கேன்னு தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்த ஐந்து நிமிடத்தில் இது ஒரு self help புத்தகம் என்று தெரிந்தது. இது போன்ற நிறைய புத்தகங்களைப் படித்திருந்தும், இதில் என்ன புதுசு இருக்கிறது என்று பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன்.
"மார்கழி மாத அதிகாலையில் வாசலில் வந்து நின்றால், பனி மூடிய பூமி எப்படி இருக்குமோ, அப்படிப் புரிந்தும் புரியாமலும் தான் என் வாழ்க்கையும் இருந்தது" என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தை மிக அழகாக ஆரம்பிக்கிறார் கோபிநாத்.
இதில் மொத்தம் 45 கட்டுரைகள். சிறு வயதிலிருந்தே நாம் அதிகமாகப் பேசிய, யோசித்த தலைப்புகள் தான் அனைத்தும். ஆனால் புதிய கண்ணோட்டத்தில்! "மனதுக்கு இனிய பாடல்", "கேளுங்கள் தரப்படும்", "உங்களுக்கு பிடித்த விஷயம்", "எதிர்கால இந்தியா", "கெட்டிக்காரனாக இருங்கள்" போன்ற தலைப்புகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும், மறுபடியும் படிக்கத் தூண்டும் கட்டுரைகள். இனி டிவியில் கோபிநாத்தைப் பார்க்கும் போது ஒரு விதமான மரியாதையோடு தான் பார்ப்போம்!